News April 2, 2025

சீனாவை அழைத்த வங்கதேசம்.. வடகிழக்கில் கொதிநிலை

image

வடகிழக்கு மாநிலங்களை லாக் செய்ய, சீனா வங்கதேசத்தில் முதலீடு செய்ய வேண்டும் என அந்நாட்டின் இடைக்கால அரசு தலைவர் யூனுஸ் பேசினார். இதை கண்டித்த அசாம் முதல்வர் சர்மா, வடகிழக்கு மாநிலங்களையும், பிரதான இந்தியாவையும் இணைக்க சாலை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தியுள்ளார். வங்கதேசத்தை உடைக்க TMP தலைவர் மனிக்யாவும், மணிப்பூரை கண்டுக்காத அரசு, இதில் கவனம் செலுத்த காங். தலைவர் பவன் கேரா வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News September 16, 2025

அங்கன்வாடி பணியாளர்களுக்கு தேர்தல் பணி

image

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் தேர்தல் பணிகளுக்கு வர இயலாத நிலையில், மாற்று ஏற்பாடுகள் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். அங்கன்வாடி பணியாளர்கள், VAO-க்கள், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரம், தமிழகத்தில் புதிதாக 6,000 வாக்குச்சாவடிகள் இணைக்கப்படவுள்ளது. இதன் எண்ணிக்கை 74.000 ஆக உயரவுள்ளது.

News September 16, 2025

இறந்தவர் மீண்டும் உயிருடன் வந்த அதிசயம்!

image

ஒடிசாவில் தனது மருமகன் வீட்டில் வசித்துவந்த லட்சுமி(86), கட்டிலில் அசைவற்று கிடந்துள்ளார். மூச்சும் விடவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவர் இறந்துவிட்டதாக எண்ணி தகனம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. எரியூட்டுவதற்கு முன், லட்சுமி மூச்சுவிடுவதை கண்டு மயான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாட்டிக்கு ஆயுசு கெட்டி!

News September 16, 2025

மழை பெய்தால் மரங்கள் விழுவது ஏன் தெரியுமா?

image

தொடர்ந்து மழைபெய்வதால் ஈரப்பதம் அதிகரித்து மண் தளர்வாகிறது. இதோடு, நிலத்தில் மழைநீர் தேங்குவதால், மரங்களால் ஆக்சிஜனை உள் இழுக்கமுடியாமல் அதன் வேர்கள் அழுகிப்போகும் நிலை ஏற்படுகிறதாம். இதனால் தான் பெரிய மரங்கள் கூட சின்ன சின்ன மழைக்கும் முறிந்து விழுகின்றன. ஆனால் எவ்வளவு மழைநீர் தேங்கினாலும் சில மரங்களின் வேர்கள் மட்டும் அழுகிப்போகாது என நிபுணர்கள் சொல்கின்றனர். SHARE.

error: Content is protected !!