News August 8, 2024
வங்கதேச நெருக்கடி.. பயன்படுத்துமா இந்தியா?

வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். உலகின் முக்கிய ஆடை ஏற்றுமதியாளராக (மாதம் $3.8 பில்லியன்) அந்நாடு உள்ளது தெரிந்ததே. தற்போது அங்கு ஏற்பட்டுள்ள களோபரத்தல் அங்குள்ள பன்னாட்டு ஜவுளி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News November 21, 2025
மெட்ரோ திட்டத்தில் பாஜகவுக்கு உள்நோக்கம்: செந்தில் பாலாஜி

மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்ததாக கூறி கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட செந்தில் பாலாஜி, மத்திய அரசு அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். திட்ட அறிக்கையில் சந்தேகம் இருந்தால், அதைத் தெளிவுபடுத்த 15 மாதங்கள் அவகாசம் எடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்தார். மேலும் TN-க்கு BJP அரசு இதுவரை ஏதாவது சிறப்புத் திட்டம் கொண்டு வந்துள்ளதா? என்றும் கேள்வி எழுப்பினார்.
News November 21, 2025
பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடி: அமைச்சர்

இந்த ஆண்டு இறுதிக்குள் 3 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இதுவரை 27,90,093 பள்ளிக்குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட கண் பரிசோதனையில் 2,00,214 பேருக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். பள்ளி குழுந்தைகள் ஸ்கிரீன் டைம் அதிகரித்ததே கண் பார்வை பாதிப்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
News November 21, 2025
திமுக வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை: நயினார்

தென்காசியில் சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி கொண்டு வருவோம் என சொன்ன திமுக, அதை நிறைவேற்றவில்லை என நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் இதுவரை ஒரு மருத்துவக் கல்லூரியை கூட தமிழ்நாட்டுக்கு திமுக கொண்டு வரவில்லை என்றும், அதிமுக ஆட்சியில் 11 கல்லூரிகள் கொண்டுவரப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்பாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


