News August 8, 2024

வங்கதேச நெருக்கடி.. பயன்படுத்துமா இந்தியா?

image

வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். உலகின் முக்கிய ஆடை ஏற்றுமதியாளராக (மாதம் $3.8 பில்லியன்) அந்நாடு உள்ளது தெரிந்ததே. தற்போது அங்கு ஏற்பட்டுள்ள களோபரத்தல் அங்குள்ள பன்னாட்டு ஜவுளி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News November 22, 2025

1 கிலோ அரிசியின் விலை ₹12,000 ரூபாயா!

image

Kinmemai என்பது ஜப்பானிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஒரு வகை பிரீமியம் அரிசி ஆகும். வழக்கமான அரிசியை விட இதில் அதிக ஊட்டச்சத்து, சுவை இருக்கிறதாம். இதை சமைப்பதற்கு முன் கழுவ வேண்டியதில்லை. இதனால் நேரமும், தண்ணீரும் மிச்சமாகிறது. 1 கிலோ அரிசியின் விலை ₹12,000-க்கு விற்கப்படுவதால் இதை பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். உலகின் காஸ்ட்லியான அரிசி என்ற கின்னஸ் சாதனையையும் இது படைத்துள்ளது.

News November 22, 2025

ஆபரேஷன் சிந்தூரால் சீனாவுக்கு லாபம்: USA

image

இந்தியா – பாக்., போரை, சீனா சோதனை களமாக பயன்படுத்தி கொண்டதாக அமெரிக்க அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தங்களது நவீன ஆயுதங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை உலகிற்கு காட்டவும், பிறநாடுகளுக்கு ஆயுதங்களை விற்கவும் போரை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டதாக கூறியுள்ளது. சீனாவின் HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பு, PL-15 ஏவுகணைகள், J-10 போர் விமானங்களை பாக்., போரில் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளது.

News November 22, 2025

EPS-க்கு அருகதை இல்லை: ரகுபதி

image

நிரந்தர டிஜிபி நியமிக்கப்படாதது குறித்து EPS விமர்சித்திருந்த நிலையில், பொறுப்பு டிஜிபி குறித்து பேச EPS-க்கு அருகதை இல்லை என்று அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார். பொறுப்பு டிஜிபி என்ற முறையை கொண்டு வந்ததே ADMK தான் என கூறியுள்ள அவர், BJP-க்காகவே திமுகவை EPS குறைசொல்வதாக குறிப்பிட்டார். டிஜிபி மூலம் TN-ல் அதிகாரத்தை கைப்பற்றலாம் என நினைக்கும் பாஜகவின் எண்ணம் எடுபடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!