News March 22, 2025
தமிழக அரசை கண்டித்து கர்நாடகாவில் பந்த்

கர்நாடகாவில் பிறமொழிப் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும், மேகதாது அணை கட்ட விடாமல் தடுக்கும் தமிழக அரசுக்கு கண்டனம், சாம்பாஜி சிலையை அகற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கர்நாடகா – தமிழக எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. தமிழக எல்லையான ஓசூர் வழியாக பெங்களூருவுக்கு பஸ்கள் இயக்கப்படுவது நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
Similar News
News March 22, 2025
வல்லுநர் குழு அமைக்க முன்மொழிந்த ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை வரையறுக்க, வல்லுநர் குழு அமைக்க வேண்டும் என, ஆலோசனைக் கூட்டத்தில் CM ஸ்டாலின் முன்மொழிந்தார். மேலும் இன்று கூட்டப்பட்டுள்ள குழுவுக்கு நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு எனப் பெயரிடவும் பரிந்துரைத்துள்ளார்.
News March 22, 2025
புதிய IPL RULES

மாபெரும் கிரிக்கெட் திருவிழாவான IPL இன்று தொடங்கும் நிலையில், அதன் RULES குறித்து பார்ப்போம். ➤IPL தொடரில் இம்முறை, பந்தில் எச்சில் பயன்படுத்த அனுமதி ➤கூடுதலாக ஒரு மாற்று வீரரை களமிறக்கும் இம்பேக்ட் விதி தொடரும் ➤11 ஓவரில் வேறு பந்தை மாற்றிக்கொள்ளலாம், புதிய பந்துக்கு அனுமதியில்லை ➤அணிகள் தாமதமாக பந்து வீசினால் கேப்டன்களுக்கு தடை விதிக்கப்படாது; தகுதி இழப்பு புள்ளி, அபராதம் மட்டும் விதிக்கப்படும்.
News March 22, 2025
ஒன்றுபட்ட போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்த ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கூட்டத்தில் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அறைகூவல் விடுத்துள்ளார். தமிழகத்தில் 8 – 12 தொகுதிகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் தொகுதிகள் குறைந்தால் நமது பண்பாடு, அடையாளம், முன்னேற்றம், சமூக நீதி ஆபத்தை சந்திக்கும். மாணவர்கள், பெண்களின் வளர்ச்சி தடைபடும். இந்திய ஜனநாயகத்தையும், கூட்டாட்சியையும் காப்பதற்கான முன்னெடுப்புதான் இது என்றார்.