News February 26, 2025
சிவராத்திரியில் சிவலிங்கத்தை வழிபட்ட Ban. கிரிக்கெட் வீரர்

மகா சிவராத்திரியில் வங்கதேச கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது. வங்கதேசத்தில் அமைந்துள்ள கோயில் ஒன்றில் சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்திருக்கிறார். அப்போது எடுத்த போட்டோக்களைப் பகிர்ந்த அவர், ‘ஹரா ஹரா மகாதேவ்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இவரின் பதிவை, நெட்டிசன்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.
Similar News
News February 26, 2025
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: NOC கிடைத்தது

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியுள்ளது. இதையடுத்து, மைதானத்திற்கான வடிவமைப்பை ஒரு வாரத்தில் இறுதி செய்ய தமிழக விளையாட்டுத்துறை முடிவு செய்துள்ளது. ஒண்டிப்புதூர் பகுதியில் 20.72 ஏக்கரில் மைதானம் அமைய உள்ளது. கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என கடந்த மக்களவைத் தேர்தல் வாக்குறுதியில் CM ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
News February 26, 2025
ENGக்கு 326 ரன்கள் இலக்கு

ICC சாம்பியன்ஸ் டிராபியில் இன்று ENG-க்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த AFG 50 ஓவரில் 325 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய இப்ராஹிம் சத்ரான் 177 (6 SIX, 12 FOUR) ரன்கள் விளாசினார். ENG அணியில் சிறப்பாக பந்து வீசிய ஆர்ச்சர் 3 விக்கெட்டை கைப்பற்றினார். இப்போட்டியில் யார் தோல்வி அடைந்தாலும் வெளியேற வேண்டும் என்பதால், இங்கி., அதிரடி காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 26, 2025
கூகுளில் விரைவில் QR CODE முறை

கூகுள் மெயில் உள்ளிட்டவற்றை புதிய டிவைசில் பயன்படுத்த SMS மூலம் உறுதிப்படுத்தும் முறை தற்போது உள்ளது. இதை ஹேக்கர்கள் ஹேக் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதை தடுக்க QR CODE மூலம் உறுதி செய்யும் முறையை கூகுள் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த முறை வந்தால், செல்போன் கேமரா ஸ்கேனர் மூலம் ஸ்கேனிங் செய்தால் போதும். SMS தேவையில்லை.