News October 3, 2025

ஆஷா போஸ்லேவின் குரலை பயன்படுத்த தடை

image

பாடகி ஆஷா போஸ்லேவின் குரலை AI மூலம் மறு உருவாக்கம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் தனது குரல், புகைப்படம், பேச்சு ஆகியவற்றை AI மூலம் ஜெனரேட் செய்து விற்பதாக ஆஷா போஸ்லே, மும்பை HC-ல் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர் தமிழில் ஓ பட்டர்ஃபிளை, செண்பகமே செண்பகமே, செப்டம்பர் மாதம் உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார்.

Similar News

News October 3, 2025

கரூர் விவகாரத்தில் விஜய் செய்தது தவறு: சீமான்

image

கரூர் விவகாரத்தில் விஜய்க்கும், திமுகவுக்கும் டீலிங் இருக்கா என்று திருமா கேட்டதில் உண்மை இருக்கலாம் என சீமான் தெரிவித்துள்ளார். விரைவில் தேர்தல் வர உள்ளதாலேயே கரூர் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டுவதாகவும் குற்றம்சாட்டினார். விஜய்க்காகவே மக்கள் கூடிய நிலையில் உயிரிழப்புகளுக்கு அவர் பொறுப்பேற்றிருக்க வேண்டும் என்றும், ஆனால் விஜய் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என சாடினார்.

News October 3, 2025

கரூர் துயரம்: ஒரு வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

image

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட மனுவை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. வழக்கு விசாரணை ஆரம்பகட்டத்தில் இருக்கும் நிலையில், எவ்வாறு சிபிஐ-க்கு மாற்ற முடியும்? நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் எனக்கூறிய நீதிபதிகள், சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று தள்ளுபடி செய்தனர்.

News October 3, 2025

Sports-ல் அரசியல் வேண்டாம்: PAK Ex கேப்டன்

image

பாக்., வீராங்கனை நடாலியா பெர்வாய்ஜ் <<17900065>>Azad Kashmir<<>>-ஐ சேர்ந்தவர் என பாக்., Ex. கேப்டன் சனா மிர் கூறியது சர்ச்சையானது. இந்நிலையில், அப்பகுதியில் வளர்ந்ததால் நடாலியா சந்தித்த கஷ்டங்களை விளக்கவே அப்படி கூறியதாக சானா மிர் விளக்கமளித்துள்ளார். வர்ணனையாளராக சொன்ன விஷயத்தை அரசியலாக்க வேண்டாம் என கூறிய அவர், விளையாட்டு வீரர்களுக்கு இதுபோன்ற அழுத்தம் கொடுப்பதை நிறுத்தவேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!