News August 27, 2024

கனரக வாகனங்களில் கனிமங்கள் கொண்டு செல்ல தடை

image

நெல்லை மாவட்டத்தில் 10 சக்கரங்களுக்கு மேலுள்ள கனரக வாகனங்களில் கனிமங்கள் ஏற்றிச் செல்ல தடை விதித்து ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் விதிகளை மீறிய 100 க்கும் மேற்பட்ட லாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று குவாரி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விதிமீறல் குறித்து பொதுமக்கள் 94981 01765 எண்களில் புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 24, 2025

நெல்லையில் கனமழை எதிரொலி; இன்று தேர்வுகள் ஒத்திவைப்பு

image

தமிழக அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க, கனமழை காரணமாக, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் துறைகளில் இன்று (24.11.2025) நடைபெற இருந்த 2025 நவம்பர் பருவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. இத்தேர்விற்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் என ம.சு.பல்கலைக்கழகம் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார். இதனை எல்லோருக்கும் ஷேர் செய்யவும்.

News November 24, 2025

நெல்லை: டிரைவர் தற்கொலை

image

திசையன்விளை அருகே இட்ட மொழி நன்னி குளம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த லோடு ஆட்டோ டிரைவர் கண்ணன் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் திசையன்விளை போலீஸ் எஸ்ஐ பிரதீப் மற்றும் போலீசார் விரைந்து சென்று கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பாலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

News November 24, 2025

BREAKING நெல்லை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவு . SHARE

error: Content is protected !!