News August 27, 2024
கனரக வாகனங்களில் கனிமங்கள் கொண்டு செல்ல தடை

நெல்லை மாவட்டத்தில் 10 சக்கரங்களுக்கு மேலுள்ள கனரக வாகனங்களில் கனிமங்கள் ஏற்றிச் செல்ல தடை விதித்து ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் விதிகளை மீறிய 100 க்கும் மேற்பட்ட லாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று குவாரி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விதிமீறல் குறித்து பொதுமக்கள் 94981 01765 எண்களில் புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 16, 2025
நெல்லை: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க
News November 16, 2025
நெல்லை: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

நெல்லை மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <
News November 16, 2025
நெல்லை: ஓடும் ரயிலில் தவறி விழுந்து மீனவர் பலி

நெல்லை – வள்ளியூர் இடையே தளபதிசமுத்திரம் ரயில்வே தண்டவாளம் அருகே நேற்று முன்தினம் இளைஞர் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் உயிரிழந்தவர் குமரி சின்னமுட்டத்தை சேர்ந்த மீனவர் திருமேனி செல்வம் (27) என்பதும் குமரி ரயிலில் பயணித்த போது ரயிலில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து இளைஞர் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நாகர்கோவில் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


