News August 27, 2024
கனரக வாகனங்களில் கனிமங்கள் கொண்டு செல்ல தடை

நெல்லை மாவட்டத்தில் 10 சக்கரங்களுக்கு மேலுள்ள கனரக வாகனங்களில் கனிமங்கள் ஏற்றிச் செல்ல தடை விதித்து ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் விதிகளை மீறிய 100 க்கும் மேற்பட்ட லாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று குவாரி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விதிமீறல் குறித்து பொதுமக்கள் 94981 01765 எண்களில் புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2025
நெல்லை: ஆட்டோ மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு

மானூர் அருகே நரியூத்து தெற்கு தெருவை சேர்ந்த நயினார் மனைவி தெய்வானை தனது மகனுடன் சில நாட்களுக்கு முன்பு மாவடி பகுதியில் சென்றார் அப்போது ஆட்டோ மோதியதில் தெய்வானையும் அவரது மகனும் காயம் அடைந்தனர். பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தெய்வானை நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 20, 2025
நெல்லையில் நாளை 1500 பேருக்கு வேலை உறுதி!

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (நவ. 21) காலை 9 – 3 மணி வரை நடைபெற உள்ளது. 10th, முதல் டிகிரி முடித்தவர்களுக்கு சம்பளம் ரூ.50,000 வரை வழங்கப்படும். 1,500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு இங்கு <
News November 20, 2025
நெல்லை: மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே பசுக்கிடை விளை காமராஜர் மேற்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் செஞ்சி லெட்சுமி (57). இவருக்கு நீரழிவு நோய் அதிகமாக அளவில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று வீட்டை விட்டு வெளியே வரும்போது தலைசுற்றி மாடியில் இருந்து தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


