News August 27, 2024

கனரக வாகனங்களில் கனிமங்கள் கொண்டு செல்ல தடை

image

நெல்லை மாவட்டத்தில் 10 சக்கரங்களுக்கு மேலுள்ள கனரக வாகனங்களில் கனிமங்கள் ஏற்றிச் செல்ல தடை விதித்து ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் விதிகளை மீறிய 100 க்கும் மேற்பட்ட லாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று குவாரி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விதிமீறல் குறித்து பொதுமக்கள் 94981 01765 எண்களில் புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 8, 2025

நெல்லையில் ரூ.69 கோடியில் பிரம்மாண்ட நூலகம்

image

நெல்லையில் ரூ.69 கோடியில் காயிதே மில்லத் பெயரில் பிரம்மாண்ட நூலகம் அமைக்க திட்டமிடப்பட்டது. சில மாதங்களுக்கு முன்னர் ஐகிரவுண்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள இடத்தை அமைச்சர்கள், அதிகாரிகள் இதற்கு தேர்வு செய்தனர். இப்போது நூலகம் அமைக்க அரசு டெண்டர் விடுத்துள்ளது. அதில் 2 அடுக்கு கட்டடத்தில் படிப்பகம், மினி திரையரங்கம் மாற்றுத்திறனாளிகளுக்கு அறை, ஆய்வரங்கம் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளது.

News November 7, 2025

மாநகர இரவு காவல் சேவை அதிகாரிகள் எண்கள்

image

திருநெல்வேலி மாநகர பகுதியில் இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் உதவி சேவை பணிக்கான அதிகாரிகளை விவரங்களை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவுபடி மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களது கைபேசி எண் விபரங்களும் தரப்பட்டுள்ளன. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை இரவு தொடர்பு கொள்ளலாம்.

News November 7, 2025

முதன்மை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

image

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழி காட்டும் மையம் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 குரூப் 2ஏ முதன்மை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு இன்று முதல் நடைபெறுகிறது. குரூப் 2-வில் 50 காலிபணியிடமும். குரூப் 2ஏ-வில் 595 காலிபணியிடமும் அறிவிக்கப்பட்டுள்ளன. வாரந்தோறும் மாதிரி தேர்வும், மாநில அளவிலான முழுமாதிரி தேர்வுகளும் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் கூறினார்.

error: Content is protected !!