News August 27, 2024

கனரக வாகனங்களில் கனிமங்கள் கொண்டு செல்ல தடை

image

நெல்லை மாவட்டத்தில் 10 சக்கரங்களுக்கு மேலுள்ள கனரக வாகனங்களில் கனிமங்கள் ஏற்றிச் செல்ல தடை விதித்து ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் விதிகளை மீறிய 100 க்கும் மேற்பட்ட லாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று குவாரி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விதிமீறல் குறித்து பொதுமக்கள் 94981 01765 எண்களில் புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 26, 2025

நெல்லை: துணை வட்டாட்சியருக்கு சிறை

image

2019 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் மன் குவாரி நடத்தி வந்த ரவி என்பவரிடம் மாதம் ஐந்தாயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் பாளையங்கோட்டை துணை வட்டாட்சியர் விஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் துணை வட்டாட்சியர் விஜிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் பத்தாயிரம் அபராதம் விதித்து விஜிலன்ஸ் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுப்பையா இன்று தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

News November 26, 2025

நெல்லை: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க.

News November 26, 2025

நெல்லை: மூதாட்டியிடம் 5 பவுன் தாலிச்செயின் பறிப்பு

image

திருநெல்வேலி மாவட்டம், கூடன்குளம் ஆவுடையாள்புரம் கிராமத்தில், தனியாக வசித்து வந்த மூதாட்டி, நேற்று (நவ.25) மாலை வீட்டில் இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் வீட்டுக்குள் நுழைந்து, அவர் கழுத்தில் கிடந்த, 5 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக் கொண்டு, தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, கூடன்குளம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தி, வருகின்றனர்.

error: Content is protected !!