News March 20, 2024
மதுபான விநியோகத்திற்கு தடை

சர்வதேச கருத்தரங்குகளில் மதுபானம் விநியோகிக்கக் கூடாது என ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பாமக வழக்கறிஞர் கே.பாலு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மதுபானம் விநியோகிப்பது குறித்து தமிழக அரசு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. மேலும், வழக்கு விசாரணை முடியும் வரை கூடுதல் கட்டணம் வசூலித்து அதற்கு அன்பளிப்பாக மதுபானம் வழங்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
Similar News
News November 25, 2025
திருவாரூர்: கொடியசைத்து துவக்கி வைத்த ஆட்சியர்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆண்களுக்கான தழும்பில்லாத நவீன குடும்ப நல சிகிச்சை முகாம் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன் சந்திரன் கொடியசைத்து இன்று துவக்கி வைத்தார். இதில் மருத்துவ துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
News November 25, 2025
வரலாற்று படுகொலையின் சாட்சி மௌனமானது!

வரலாற்றின் கருப்பு பக்கமாக கருதப்படும் நிகழ்வுகளில் ஒன்றான துல்சா இனப்படுகொலையில் இருந்து தப்பித்தவரான வயோலா பிளெட்சர் காலமானார். 1921-ல் அமெரிக்காவின் துல்சா நகரில் கருப்பின மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். நகரமே அழிக்கப்பட்ட நிலையில், சுமார் 6,000 பேர் பாதிக்கப்பட்டு, 300 பேர் பலியாகினர். அப்போது 7 வயதாக இருந்த வயோலா பிளெட்சர், தற்போது 111 வயதில், வயது மூப்பு காரணமாக காலமாகியுள்ளார்.
News November 25, 2025
தாக்கத்தை ஏற்படுத்துமா OPS, செங்கோட்டையன் அரசியல்

அதிமுகவை ஒருங்கிணைத்தே தீருவோம் என்று தேவர் குருபூஜை அன்று டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் சபதம் ஏற்றனர். ஆனால், சபதம் எடுத்து 25 நாள்களிலேயே புதிய கட்சியை தொடங்குவேன் என்று OPS கூறுகிறார். மறுபுறம் செங்கோட்டையனோ தவெகவில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்க தொடங்கினால், 2026-ல் தமிழக அரசியலில் எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கமெண்டில் சொல்லுங்க.


