News March 30, 2024

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு தடை

image

நாடு முழுவதும் ஏப்.19 முதல் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பொதுவாக வாக்குப்பதிவு முடிந்ததும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஊடகங்கள் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், 7 கட்டங்களாக தேர்தல் நடப்பதால் ஏப்.19 காலை 7 மணி முதல் ஜூன் 1 மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

Similar News

News November 8, 2025

‘Sorry அம்மா, அப்பா.. நான் செத்துப் போறேன்’

image

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் உ.பி.யைச் சேர்ந்த முகமது ஆன் (21) என்ற மாணவர், ராவத்பூரில் உள்ள விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ‘அம்மா, அப்பா தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியவில்லை. நான் இறந்து கொண்டிருக்கிறேன். இதற்கு நான் முழு பொறுப்பு’ என்று எழுதப்பட்ட தற்கொலை கடிதத்தை போலீசார் மீட்டுள்ளனர்.

News November 8, 2025

X-Ray பிறந்த நாள் இன்று!

image

உடலை அறுக்காமலேயே, உள்ளே உள்ள பிரச்னைகளை எளிதாக கண்டறிய அதிகம் பயன்படுத்தும் ஒன்று X-Ray. நவ.8, 1895-ல், ஜெர்மானிய விஞ்ஞானி Wilhelm Conrad Rontgen இந்த கதிர்களை கண்டுபிடித்தார். கேத்தோடு கதிர்களை பரிசோதனை செய்தபோது, ஒரு கதிர் மட்டும் அட்டை வழியாக பாய்வதை கண்டார். தன் மனைவியின் கை எலும்புகளையே அவர் முதல் X-Ray படமாக பதிவு செய்தார். இதற்காக 1901-ல் அவர் இயற்பியலில் முதல் நோபல் பரிசை பெற்றார்.

News November 8, 2025

தாத்தாவானார் அன்புமணி

image

அரசியலில் இளைஞர் போல் ஆக்டிவ்வாக இருக்கும் பாமக தலைவர் அன்புமணி தாத்தாவும், செளமியா பாட்டியாகவும் அந்தஸ்து பெற்றுள்ளனர். ஆம்! அன்புமணியின் 2-வது மகள் சங்கமித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. சினிமா தயாரிப்பாளரான சங்கமித்ரா, கடந்த 2024 தேர்தலின்போது, செளமியாவுக்கு ஆதரவாக வீடுவீடாக பரப்புரை செய்து கவனத்தை ஈர்த்தவர். பாமகவின் அடுத்த அரசியல் வாரிசு இவர்தான் என பேச்சு அடிபடுவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!