News December 7, 2024
விடுதலை புலிகள் மீதான தடை உறுதி

விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க டெல்லி தீர்ப்பாயம் மறுத்துள்ளது. ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின் இந்தியாவில் அந்த அமைப்பிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, கடந்த மே 14ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விடுதலை புலிகள் மீதான தடையை தீர்ப்பாயம் உறுதி செய்தது.
Similar News
News September 12, 2025
மூலிகை: நன்னாரியின் நன்மைகள்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின் படி,
➤நன்னாரி சாற்றை குடிப்பது சிறுநீர் போக்கை கூட்டுவதற்கும், குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படுகிறது.
➤உடல் உஷ்ணத்தைத் தணித்து உடலை குளிர்ச்சியாக்கவும், ஒற்றைத் தலைவலிக்கும் நன்னாரி சாறு நல்ல மருந்தாகும்.
➤பச்சைவேரை 20 கிராம் சிதைத்து 200 மி.லி. நீரில் ஒருநாள் ஊறவைத்து வடிகட்டி காலை, மாலை குடித்து வந்தால், சொறி சிரங்கு குணமாகும். Share it to friends.
News September 12, 2025
ஓடும் ரயிலில் இருந்து குதித்த நடிகை.. ஹாஸ்பிடலில் அனுமதி!

ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பாலிவுட் நடிகை கரிஷ்மா சர்மா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஷூட்டிங்கிற்காக மும்பை ரயிலில் ஏறிய அவர், நண்பர்கள் ரயிலில் ஏறாததால் இறங்க முயன்றுள்ளார். சேலை அணிந்திருந்தால், கால் இடறி கீழே விழ, முதுகு & தலையில் அடிபட்டுள்ளது. மிகவும் பிரபலமான‘ராகினி MMS’ வெப் தொடரிலும், ‘பியார் கா பஞ்ச்நாமா’, ‘ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ்’ போன்ற படங்களிலும் கரிஷ்மா நடித்துள்ளார்.
News September 12, 2025
BREAKING: கடன் கட்டாவிட்டால் செல்போன் இயங்காது

கடனை முறையாக திருப்பி செலுத்த தவறுவோரின் செல்போன் இயக்கத்தை முடக்குவதற்கு RBI அனுமதி அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருள்களை பலரும் கடனில் வாங்குகின்றனர். ஆனால், பலரும் அந்த கடனை திருப்பி கட்டாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தனிநபர் தகவல்கள் ரகசியமாக காக்கவும் நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இந்த முடிவு பற்றிய உங்கள் கருத்து என்ன?