News August 14, 2024
ட்ரோன்கள் பறக்க தடை – எஸ்.பி. உத்தரவு

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நாளை சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு கொடியேற்றி நலத்திட்டங்களை வழங்குகிறார். இதன் நிலையில் இந்த நிகழ்ச்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்கவும் படம் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேற்று தெரிவித்துள்ளார்.
Similar News
News January 14, 2026
நெல்லை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

நெல்லை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே க்ளிக் செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!
News January 14, 2026
நெல்லை: உங்கள் குழந்தையை கோடீஸ்வரர் ஆக்கும் திட்டம்

மத்திய அரசின் NPS வாத்சல்யா திட்டத்தில் மாதம் ₹1,000 சேமித்தால், உங்கள் குழந்தைகளுக்கு 18 வயதில் சுமார் ₹5.5 லட்சமும், 60 வயதில் ₹2.75 கோடி வரையும் கிடைக்கும். கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்காக இடையில் பணம் எடுக்கும் வசதி உண்டு. உங்கள் குழந்தைளை எதிர்கால கோடீஸ்வரராக மாற்ற இன்றே இணையுங்கள்; கூடுதல் விவரங்களுக்கு <
News January 14, 2026
நெல்லை: சோதனையில் சிக்கிய கள்ளத் துப்பாக்கி

நெல்லை மாநகர மேலப்பாளையத்தில் பொங்கல் பாதுகாப்பை முன்னிட்டு விடிய விடிய சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் அமீர், பாலா ஆகிய இருவரிடமிருந்து கள்ளத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவர்களிடமும் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் மணிவண்ணன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


