News August 14, 2024
ட்ரோன்கள் பறக்க தடை – எஸ்.பி. உத்தரவு

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நாளை சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு கொடியேற்றி நலத்திட்டங்களை வழங்குகிறார். இதன் நிலையில் இந்த நிகழ்ச்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்கவும் படம் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேற்று தெரிவித்துள்ளார்.
Similar News
News January 17, 2026
நெல்லையில் சீருடை பணியாளர்கள் சிறப்பு வகுப்பு

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 17 முதல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் சீருடை பணிகளில் சேர ஆர்வமும் தேவையான உடல், கல்வித் தகுதி உடையவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த வகுப்பானது நாளை முதல் தொடங்க உள்ளதாகவும், இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளவும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். *ஷேர் பண்ணுங்க
News January 17, 2026
நெல்லை: 3 பேருக்கு அரிவாள் வெட்டு; ஒருவர் கைது!

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்த ஹரியின் அலைபேசியில் இருந்து அவரது நண்பர் பாலாஜி, பாஞ்சாலராஜன் என்பவரது மாமியாரிடம் கொடுத்த கடனை திருப்பி கேட்டுள்ளார். இந்நிலையில் ஹரி மற்றும் அவரது நண்பர்கள் பாலாஜி, இசக்கி பாண்டி ஆகிய மூவரை பாஞ்சாலராஜன் அரிவாளால் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து ஹரி கொடுத்த புகாரில் பாஞ்சாலராஜனை இன்று போலீசார் கைது செய்தனர்.
News January 17, 2026
நெல்லை: உங்க நீதிமன்ற CASE பற்றி ஈசியா தெரிஞ்சிக்கலாம்…

நெல்லை மக்களே நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்களாகி இருக்கும். இப்போது அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகிறீர்களா? இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போன்ல ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க. உங்கள் வழக்கு நிலை உடனே உங்க Phoneல் வரும் இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE IT


