News August 14, 2024

ட்ரோன்கள் பறக்க தடை – எஸ்.பி. உத்தரவு

image

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நாளை சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு கொடியேற்றி நலத்திட்டங்களை வழங்குகிறார். இதன் நிலையில் இந்த நிகழ்ச்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்கவும் படம் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேற்று தெரிவித்துள்ளார்.

Similar News

News December 18, 2025

நெல்லை – தாம்பரம் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

image

நெல்லை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் எண்: 06166 வருகிற 28ம் தேதி மற்றும் ஜனவரி 4ம் தேதி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் இரவு 11:30 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்படும். மறு மார்க்கத்தில் தாம்பரம் சென்னை சிறப்பு ரயில் எண் 06165 தாம்பரத்தில் இருந்து டிசம்பர் 29 மற்றும் ஜனவரி 5ஆம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 18, 2025

நெல்லையில் மின்தடை சேவை அழைப்பு எண்கள்!

image

நெல்லை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை ஏற்படுகிறதா? கரண்ட் எப்ப வரும்ன்னு தெரியலையா? இனி அடிக்கடி மின்தடை ஏற்பட்டால் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் செயலி <>(TNPDCL OFFICIAL APP)<<>> திருநெல்வேலி மின்தடை நீக்கும் மையம் தொலைபேசி எண்கள் 0462 2562900, 0462 12660 மற்றும் மின் நுகர்வோர் சேவை மையத்தில் தகவல் தெரிவிக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க.

News December 18, 2025

நெல்லை ரயிலில் 18 கிலோ கஞ்சா

image

சென்னை எக்மோரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை ரயில்வே இருப்பு பாதை, பாதுகாப்பு படையினர் இணைந்து நேற்று சோதனை செய்தனர். அப்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் 3வட மாநில வாலிபர்களிடம் 18 கிலோ கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர். 10 நாட்களில் 55 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.

error: Content is protected !!