News August 14, 2024

ட்ரோன்கள் பறக்க தடை – எஸ்.பி. உத்தரவு

image

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நாளை சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு கொடியேற்றி நலத்திட்டங்களை வழங்குகிறார். இதன் நிலையில் இந்த நிகழ்ச்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்கவும் படம் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேற்று தெரிவித்துள்ளார்.

Similar News

News December 6, 2025

நெல்லையில் வேலை நிறுத்தம் அறிவிப்பு..!

image

மத்திய அரசு மோட்டார் வாகன தகுதிச் சான்று கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதைக் கண்டித்து, திருநெல்வேலி மாவட்டத்தில் டிசம்பர் 9 நள்ளிரவு முதல் 5,000-க்கும் மேற்பட்ட லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. இதனால் சுமார் 25,000 தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

News December 6, 2025

நெல்லை: B.E. முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

நெல்லை மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, முதுகலை டிகிரி படித்தவர்கள் டிச 29க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.40,000 – ரூ.1,40,000 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை SHARE IT.

News December 6, 2025

நெல்லை: விஷம் அருந்தி இளம்பெண் தற்கொலை!

image

விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் பகுதியை சேர்ந்த முத்தரசு என்பவருடைய மகள் பரமேஸ்வரி (28). இவர் கடந்த சில வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்தார். அவரை மீட்டு பாளை ஜகிரவுண்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரசிங்கபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!