News August 14, 2024
ட்ரோன்கள் பறக்க தடை – எஸ்.பி. உத்தரவு

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நாளை சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு கொடியேற்றி நலத்திட்டங்களை வழங்குகிறார். இதன் நிலையில் இந்த நிகழ்ச்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்கவும் படம் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேற்று தெரிவித்துள்ளார்.
Similar News
News January 11, 2026
நெல்லை: 3 மணி நேரத்தில் மாணவனை மீட்ட போலீஸ்

V.K.புரத்தை சேர்ந்த சலீம் என்ற மாணவன் அங்குள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவனின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் போலீசார் காணாமல் போன மாணவனை இரவு 9 மணிக்குள் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். காணாமல் போன 3 மணி நேரத்தில் மாணவனை மீட்ட காவல்துறைக்கு பாராட்டு தெரிவிக்கபட்டது.
News January 11, 2026
நெல்லையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

திருநெல்வேலியில் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.நெல்லை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0462-2572689
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.மதுரை உயர் நீதிமன்றம்: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News January 11, 2026
நெல்லை: பாதயாத்திரை சென்ற இளைஞர் பரிதாப பலி

தென்மலைப்பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் (25). இவர் அங்கிருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு மானூர் அருகே மேல பிள்ளையார் குளம் சந்திப்பு பகுதியில் நடந்து சென்றபோது, அங்கு வந்த பைக் மோதி படுகாயம் அடைந்தார். நெல்லை G.H-ல் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீராம் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மானூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


