News August 27, 2024

நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை

image

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை மாநகர போலீஸ் சட்டம் 1997 பிரிவு 41(2)ன் படி நெல்லை மாநகரப் பகுதியில் நேற்று(ஆக.,26) முதல் அடுத்த மாதம் 9ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, தர்ணா நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது அமைதி, மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Similar News

News August 11, 2025

நெல்லையில் பள்ளிக்கு விடுமுறை…

image

நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் உள்ள திலகர் வித்யாலயா பள்ளி நிர்வாக குழு தலைவர் ராகவன் மறைவையொட்டி, இன்று (ஆகஸ்ட்-11) மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பள்ளி நிர்வாகம் இன்று வெளியிட்டது. விடுமுறைக்கான நாள் மற்றொரு நாளில் ஈடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 11, 2025

நெல்லை: ரயில் பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்!

image

அக்டோபர் 13 முதல் 26 வரை ரயில் பயணம் செய்பவர்கள் நவம்பர் 17 முதல் டிசம்பர் 1 வரை ரிட்டன் பயணம் 2ம் வகுப்பு டிக்கெட் எடுத்தால் அவர்களுக்கு 20% பயண கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. நெல்லையிலிருந்து சென்னை, மும்பை, பெங்களூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு இது பொருந்தும். SHARE பண்ணுங்க!

News August 11, 2025

நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் அழைப்பு

image

இன்று (11.08.2025) காலை 11:00 மணியளவில் மாநகராட்சி மைய அலுவலக இராஜாஜி மண்டப கூட்ட அரங்கில் மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஆணையாளர் மற்றும் துணை மேயர் ராஜி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் விவாதிக்கப்பட உள்ளதால் கவுன்சிலர்கள் பங்கேற்க வேண்டும் என மேயர் அழைப்பு கொடுத்துள்ளார்.

error: Content is protected !!