News March 21, 2024
மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவுக்கு தடை

மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக பொய் செய்திகளை கண்டறிந்து நீக்குவதற்கு உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, அரசியல் சாசனம் தொடர்பாக எழும் கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டியுள்ளது. இதுதொடர்பான வழக்கில் மும்பை நீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்பு வரும் வரை உச்ச நீதிமன்றம் இக்குழுவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
Similar News
News February 15, 2026
பெண்களுக்கு பஸ்சில் தொல்லையா? Must Read..

அரசு பஸ்களில் ‘PANIC’ என்ற பட்டனை TNSTC அறிமுகப்படுத்தியுள்ளது. பயணத்தின்போது பெண்களுக்கு ஏதேனும் அசெளகரியங்கள் ஏற்பட்டால், இந்த பட்டனை அழுத்தலாம். உடனடியாக, அருகிலுள்ள Control Room-க்கு மெசேஜ் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பஸ்சின் லொகேஷனை கண்டறிவதற்காக VLTD என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இத்திட்டம், ஊட்டியில் 16 மாசில்லா பஸ்களில் தொடங்கப்பட்டுள்ளது.
News February 15, 2026
‘அம்மா, நான் சாகப் போகிறேன்’

‘அம்மா, அப்பா என்னை மன்னியுங்கள். நான் தாத்தாவை சந்திக்கப் போகிறேன். என்னைத் தேட வேண்டாம். அருகிலுள்ள மயானத்தின் குளத்தில் நான் இருப்பேன்’. குருகிராமைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி நேஹாவின் கடைசி வரிகள் இவை. தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டபோது போலவே, அங்குள்ள குளத்தில் இருந்து மாணவியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. தாத்தாவின் மறைவால் மன உளைச்சலில் இருந்த நேஹா, சோக முடிவை எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
News February 15, 2026
முடி அடர்த்தியாக வளர இதை செய்யுங்க!

முடி உதிர்வு, பொடுகு தொல்லை, வறண்ட சருமத்துக்கு ரோஸ்மெரி இலை சிறந்த தீர்வாக இருக்கிறது. தலைக்கு குளித்த பிறகு, ஈரமாக இருக்கும் கூந்தல் மற்றும் வேர்க்கால்களில் ரோஸ்மெரி வாட்டரை ஸ்ப்ரே செய்யுங்கள். பிறகு தலையை மென்மையாக மசாஜ் செய்யவும். இதன் பிறகு தண்ணீரில் முடியை அலச வேண்டிய அவசியமில்லை. வாரத்திற்கு 3 முறை இதை செய்து வந்தால், ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான கூந்தலை பெறலாம். SHARE IT


