News April 25, 2024
புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை

ஆன்லைன் மற்றும் செல்போன் செயலி மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடைவிதித்துள்ளது. கடந்த 2022, 2023 ஆண்டுகளில் ஆன்லைன் சேவையில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளை மீறியதன் காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் மூலம் புதிய கிரெடிட் கார்டு வழங்கவும் தடை விதித்துள்ளது. இருப்பினும், பழைய வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க எந்தத் தடையும் இல்லை.
Similar News
News January 11, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 577 ▶குறள்: கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்.. ▶பொருள்:கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்.
News January 11, 2026
இந்தியாவுக்கு பின்னடைவு.. பண்ட் விடுவிப்பு?

NZ-க்கு எதிரான ODI தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், பயிற்சியின் போது வயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிஷப் பண்ட் இந்த தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கடைசியாக 2024 ஆகஸ்டில் நடந்த SL-க்கு எதிரான ODI தொடரில் விளையாடினார். இடைப்பட்ட காலத்தில் அணியில் இடம்பெற்றாலும், Playing 11-ல் இடம்பெறாமல் இருந்த நிலையில், தற்போதும் அந்த துரதிர்ஷ்டம் தொடர்கிறது.
News January 11, 2026
டிரோன் காட்சியை மெய்மறந்து ரசித்த PM மோடி

குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற சோமநாதர் ஆலயத்தில் PM மோடி நேற்று இரவு சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது, கோயில் வளாகத்தில் நடைபெற்ற கண்கவர் டிரோன் காட்சியை கண்டுகளித்தார். இது தொடர்பான புகைப்படங்களை தனது X பக்கத்தில் பகிர்ந்த அவர், நமது தொன்மையான நம்பிக்கையும், நவீன டெக்னாலஜியும் இணைந்து, இந்தியாவின் கலாசார சக்தியை உலகிற்கு உணர்த்தியதாக பதிவிட்டுள்ளார்.


