News April 25, 2024
புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை

ஆன்லைன் மற்றும் செல்போன் செயலி மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடைவிதித்துள்ளது. கடந்த 2022, 2023 ஆண்டுகளில் ஆன்லைன் சேவையில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளை மீறியதன் காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் மூலம் புதிய கிரெடிட் கார்டு வழங்கவும் தடை விதித்துள்ளது. இருப்பினும், பழைய வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க எந்தத் தடையும் இல்லை.
Similar News
News January 25, 2026
பல ஆண்டுகள் ஒரே குக்கரை பயன்படுத்துறீங்களா?

வீட்டில் ஒரே குக்கரை பல ஆண்டுகளாக பயன்படுத்தினால், உடலில் காரீயம்(Lead – Pb) கலக்குமாம். இது உடல்நலத்திற்கு மிகவும் ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு மிக ஆபத்தானதாம். இதன் பாதிப்பின் அறிகுறிகள்: அதீத உற்சாகம் *தலைவலி *வாந்தி * குமட்டல் *ரத்தசோகை *வயிற்று வலி *உடலுறவில் நாட்டம் இல்லாமல் போவது *குழந்தையின்மை *சிறுநீரக பாதிப்பு. உஷாரா இருங்க!
News January 25, 2026
12 பேரை காதலித்த தமிழ் நடிகை

ஒருவரை காதலித்து கரம் பிடிப்பதே பெரிய சோதனையாக இருக்கும் நிலையில், இங்கு ஒருவர் 12 பேரை காதலித்து டேட்டிங் செய்திருக்கிறார். ‘பம்பாய்’, ‘இந்தியன்’, ‘பாபா’ படங்களில் நடித்து தமிழில் ஒரு கலக்கு கலக்கிய மனிஷா கொய்ராலா பீக்கில் இருந்த காலத்தில் 12 பேரை காதலித்துள்ளாராம். கடைசியாக, தொழிலதிபரான சாம்ராட் தஹாலை திருமணம் செய்த அவர், அடுத்த 2 வருடங்களிலேயே அவரை விவகாரத்து செய்துவிட்டார்.
News January 25, 2026
ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு மட்டும் போதாது: அன்புமணி

மொழிப்போர் தியாகிகள் தினத்தை கடைப்பிடிப்பதன் நோக்கம் ஹிந்தி திணிப்பை எதிர்ப்பது மட்டுமல்ல, தமிழை வளர்ப்பதும் தான் என அன்புமணி கூறியுள்ளார். தனது X-ல், தமிழ் கட்டாயப் பயிற்றுமொழி அரசாணை பிறப்பித்து 26 ஆண்டுகள் ஆகியும், இன்றுவரை நடைமுறைக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார். SC-ல் நிலுவையில் உள்ள இதுகுறித்த வழக்குகளை விரைவாக விசாரணைக்கு கொண்டுவர திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சாடியுள்ளார்.


