News April 11, 2024

23 இன நாய்களுக்கு மத்திய அரசு விதித்த தடை ரத்து

image

பிட் புல் உள்ளிட்ட 23 இன நாய்களுக்கு மத்திய அரசு விதித்த தடையை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என அடையாளம் காணப்பட்ட 23 இன நாய்களுக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், உரிய ஆலோசனைக்கு பிறகு, புதிதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கலாம் எனக் கூறி, தடையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Similar News

News April 25, 2025

போருக்கு தயாராகும் பாகிஸ்தான்!

image

இந்திய எல்லையில் உள்ள வீரர்களின் எண்ணிக்கையை பாக். ராணுவம் அதிகரித்து வருகிறது. பதுங்கு குழியில் இருந்து மட்டுமே கண்காணிக்கவும், ராவல்பிண்டியில் உள்ள 10 படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் தீவிர உஷார் நிலையில் இருக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய எல்லை பகுதி மட்டுமில்லாமல், சர்வதேச எல்லைகளான சியால்கோட், குஜ்ரன்வாலா பகுதிகளிலும் வீரர்களை அதிகரித்து வருகிறது.

News April 25, 2025

தேசப்பிதா மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்..!

image

▶ உண்மையான போருக்கு எதிரான ஒரு போரை தொடங்க வேண்டுமென்றால், அதனை குழந்தைகளிடம் இருந்துதான் தொடங்க வேண்டும். ▶ வன்முறையை விரும்பும் மனிதர்கள் பிற வன்முறையாளர்களால் கொல்லப்படுவதில்லை. அவர்களின் கொள்கையால்தான் கொல்லப்படுகிறார்கள். ▶ அரசியலுக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் தெரிவிப்பவர்களுக்கு மதம் பற்றி ஒன்றும் தெரியாது.

News April 25, 2025

பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறிய RR?

image

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணியும் கட்டாயமாக 8 போட்டிகளில் வெல்ல வேண்டும். ஆனால், RR அணி 9 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வென்றுள்ளது. இதனால், எஞ்சிய 5 போட்டிகளில் வென்றாலும் அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது கடினம்தான். ஒருவேளை மற்ற அணிகளின் ரன்ரேட் குறைவாக இருந்தால் ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அதுவும் ரொம்ப ரொம்ப கஷ்டமே.

error: Content is protected !!