News April 13, 2024

ஏப்.15 முதல் தடை: வங்கிக் கணக்கில் ₹5000 செலுத்தப்படும்

image

ஏப்.15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக கடல் பகுதியில் 60 நாட்களுக்கு மீன்களின் இனப்பெருக்க காலமாக அமல்படுத்தப்படுவதால், மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் தங்களது குடும்பத்தை சிரமமின்றி நடத்த, குடும்பம் ஒன்றுக்கு தலா ₹5000 வழங்கப்படும். இந்த நிதி விரைவில் மீனவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

Similar News

News November 8, 2025

மார்க்ஸ்.. பெரியார்.. அம்பேத்கர்: ஜனநாயகனின் அரசியல்

image

ஜனநாயகன் படத்தின் முதல் பாடலான <<18236201>>‘தளபதி கச்சேரி’யின்<<>> பீட் ஃபுல் பவர்பேக்டாக மட்டுமல்ல, விஜய்யின் அரசியலை பேசுவதாகவும் உள்ளது. காலம் பொறக்குது… தனக்குனு வாழாத, தரத்திலும் தாழாத.. புது வழி என்றெல்லாம் வருகிறது. அதிலும் ‘ஜாதி பேதமெல்லாம் லேதய்யா’ என்ற வரிக்கு காரல் மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் உருவங்களை காண்பித்து, தனது அரசியல் வழியை விஜய் அடித்துச் சொல்கிறார் என்கின்றனர் ரசிகர்கள்.

News November 8, 2025

முடி கொட்டுதா? அப்போ இத யூஸ் பண்ணுங்க!

image

நோயில்லாத வாழ்வுக்கு தினமும் முருங்கையை உணவில் சேர்க்க வேண்டும் என சொல்வர். இத்தனை சிறப்பு மிக்க முருங்கையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், முடி உதிர்வுக்கும் அருமருந்தாகிறதாம். முருங்கை விதைகளை காயவைத்து பொடியாக்கி, தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, எடுத்துக்கொள்ளுங்கள். வாரத்திற்கு 2 முறை இந்த எண்ணெயை தலையில் தேய்த்துவர முடி உதிர்வு குறையுமாம். முடி எல்லாருக்கும் கொட்டுது, SHARE THIS.

News November 8, 2025

தமிழகத்தில் பள்ளி பஸ்ஸுக்கு பாதுகாப்பு இல்லையா? EPS

image

திமுக ஆட்சியில் பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக குற்றச் செயல்கள் அரங்கேறுவது தொடர்கதையாகியுள்ளதாக EPS குற்றம்சாட்டியுள்ளார். மயிலாடுதுறையில் பள்ளி பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல், நாகையில் VAO சடலமாக மீட்பு உள்ளிட்டவைகளை சுட்டிக்காட்டி இந்த குற்றச்சாட்டை அவர் வைத்துள்ளார். பள்ளி பஸ் கூட சாலையில் பாதுகாப்பாக செல்ல முடியாத அவல நிலைக்கு CM என்ன பதில் வைத்திருக்கிறார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!