News March 27, 2024

பம்பரம் சின்னம் அளிக்க உத்தரவிட முடியாது

image

மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது என்று உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிட பம்பரம் சின்னத்தை ஒதுக்குமாறு அக்கட்சி கேட்டிருந்த நிலையில் தேர்தல் ஆணையம் அதனை தர மறுத்துவிட்டது. இதனையடுத்து பம்பரம் சின்னத்தை ஒதுக்க உத்தரவிடுமாறு மதிமுக நீதிமன்றத்தை நாடியது. ஆனால், அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

Similar News

News November 24, 2025

TN-ல் பாஜக, RSS காலூன்ற முடியாது: செல்வப்பெருந்தகை

image

பிஹார் தேர்தல் முடிவுகளால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பின்னடைவும் இருக்காது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அது பிஹார், இது தமிழ்நாடு எனக் கூறியுள்ள அவர், பிஹாரில் பாஜக, JDU ஆளுங்கட்சியாக இருந்துள்ளதாகவும், தமிழகத்தில் ஒருபோதும் பாஜக ஆளுங்கட்சியாக இருந்ததில்லை எனவும் குறிப்பிட்டார். தமிழகத்தில் பாஜக, RSS எப்போதும் காலூன்ற முடியாது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

News November 24, 2025

MLA கொலை வழக்கு: பவாரியா கும்பலுக்கு ஆயுள் தண்டனை

image

2005-ல் அதிமுக MLA-வாக இருந்த சுதர்சனம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பவாரியா கொள்ளை கும்பலைச் சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில், குற்றவாளிகள் ராகேஷ், ஜெகதீஷ், அசோக் ஆகியோருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2005-ல் MLA சுதர்சனத்தை கொன்றுவிட்டு அவரது மனைவி, மகனை கொடூரமாக தாக்கிவிட்டு 65 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

News November 24, 2025

புயல் அலர்ட்: 28 மாவட்டங்களில் மழை பொளந்து கட்டும்

image

<<18376155>>புயல் <<>>உருவாகவுள்ளதால், பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், செங்கை, சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சி, குமரி, கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சை, நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி நெல்லை, தி.மலை, வேலூர், விழுப்புரம், விருதுநகரில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது.

error: Content is protected !!