News March 27, 2024
பம்பரம் சின்னம் அளிக்க உத்தரவிட முடியாது

மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது என்று உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிட பம்பரம் சின்னத்தை ஒதுக்குமாறு அக்கட்சி கேட்டிருந்த நிலையில் தேர்தல் ஆணையம் அதனை தர மறுத்துவிட்டது. இதனையடுத்து பம்பரம் சின்னத்தை ஒதுக்க உத்தரவிடுமாறு மதிமுக நீதிமன்றத்தை நாடியது. ஆனால், அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
Similar News
News November 6, 2025
நாளையுடன் முடிகிறது… உடனே இதை பண்ணுங்க

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ்களை அப்லோடு செய்ய நாளையே(நவ.7) கடைசி நாள் என TNPSC தெரிவித்துள்ளது. நாளை சான்றிதழ்களை அப்லோடு செய்யாதவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல பரிசீலிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.<
News November 6, 2025
டி20ல் வாஷிங்டன் சுந்தர் புதிய சாதனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தி வாஷிங்டன் சுந்தர் அசத்தினார். இந்நிலையில், சர்வதேச டி20-யில் 50 விக்கெட்டுகளை எடுத்தவர் என்ற பெருமையையும் சுந்தர் பெற்றுள்ளார். கடந்த போட்டியில் பேட்டிங்கில் அதிரடி காட்டிய அவர், இந்த போட்டியில் பவுலிங்கில் கலக்கியுள்ளார். இதன்மூலம் 3 ஃபார்மட்டிலும் தடம் பதிக்கும் ஆல்ரவுண்டராக வாஷி உருவாகி வருகிறார்.
News November 6, 2025
30 தமிழக மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த அக்டோபர் 9-ம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 30 மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில், 30 பேரையும் நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அபராத தொகையாக தலா ₹2.50 லட்சம் செலுத்தினால் உடனடியாக விடுதலை ஆகலாம் என்றும், இல்லையென்றால் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் கோர்ட் தெரிவித்துள்ளது.


