News June 24, 2024
பாலமுருகன் IRS காங்கிரஸில் இணைந்தார்

ஜிஎஸ்டி அலுவலகத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஆர்எஸ் அதிகாரி பாலமுருகன் தமிழக காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். மத்திய அரசு பணியிலிருந்த அவர், “அமலாக்கத்துறையை ஏவல் துறையாக மாற்றியிருக்கிறார் நிர்மலா சீதாராமன். அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்று குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதினார். இதை தொடர்ந்து காரணம் ஏதும் கூறாமல், பணி ஓய்வுக்கு ஒரு நாள் முன்னதாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
Similar News
News September 17, 2025
RECIPE: ஹெல்தியான சிறுதானிய பனியாரம்!

குதிரைவாலி, சாமை, இட்லி அரிசி & உளுந்து ஆகியவற்றை 6 மணி நேரம் ஊற வைத்து, இட்லி மாவு பதத்துக்கு அரைக்கவும். கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்து, அதை மாவில் சேர்க்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி & உப்பு சேர்க்கவும். இந்த மாவை மிதமான தீயில் சுட்டு எடுத்தால், ஹெல்தியான குதிரைவாலி- சாமை பனியாரம் ரெடி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். SHARE.
News September 17, 2025
எப்போதும் மக்கள் பக்கம் விஜய்.. தவெகவினர் பதிலடி

அரசியலுக்கு வருவதற்கு முன், மக்களுக்காக என்ன செய்தார் விஜய் என NTK உள்ளிட்ட கட்சிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகின்றன. இதற்கு 2016-ல் ஜல்லிக்கட்டு போராட்டம், 2017-ல் தங்கை அனிதா மரணம், 2018-ல் ஸ்டெர்லைட் படுகொலை, 2024-ல் கள்ளச்சாராய இறப்பு உள்ளிட்ட பல பிரச்னைகளில் மக்கள் பக்கம் நின்றவர். 2026-ல் ‘People’s only hope’ என விஜய்யின் போட்டோவுடன் தவெகவினர் பதிலடி கொடுக்கின்றனர்.
News September 17, 2025
வெற்றி நெருக்கடியில் பாகிஸ்தான்

ஆசிய கோப்பையில் குரூப் ‘A’-வில் உள்ள பாகிஸ்தான், முதல் போட்டியில் ஓமனை வீழ்த்தியது. ஆனால் 2-வது போட்டியில் இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்தது. இதனால், இன்றைய UAE-க்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தோற்றால் அந்த அணி சூப்பர் 4 சுற்று வாய்ப்பை UAE-விடம் பறிகொடுத்துவிடும். குரூப் ‘A’ ஏற்கெனவே இந்தியா சூப்பர் 4-க்கு தகுதி பெற்றுவிட்டது.