News June 14, 2024
பக்ரீத் பண்டிகை: ரூ.10 கோடிக்கு ஆடு விற்பனை

வருகிற 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டி வருகிறது. அந்த வகையில், கடலூர் மாவட்டம் வேப்பூர் வாரச்சந்தையில் நேற்று மாலை 5 மணி முதல் அதிகாலை வரை அதிகபட்சமாக ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளன். அதேபோல், மதுரை திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்கப்பட்டுள்ளது.
Similar News
News March 9, 2026
ஆத்தூர்: மனைவிக்கு பிடித்த பாடலை வைக்காததால் பரபரப்பு!

ஆத்தூர் பழனியாபுரியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி அஜித்குமார். இவர் வீட்டில் நேற்று டிவி பார்த்துக் கொண்டு இருக்கும் போது அவரது அவரது மனைவி புவனேஸ்வரி (25) தனக்கு பிடித்த பாடலை டிவியில் போடும்படி கூறியுள்ளார். இதில் தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி சமையலறைக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளான். ஆத்தூர் போலீசார் விசாரணை!
News March 9, 2026
சீக்கிரம் தேர்தலை நடத்துங்க.. தயாரிப்பாளர் தனஞ்செயன்

த்ரிஷா சர்ச்சைக்கு பின்னும் விஜய்க்கான ஆதரவு குறையவில்லை என கூறப்படும் நிலையில், சீக்கிரம் தேர்தலை வச்சி முடிங்க, இந்த Opinion Poll தொல்லை தாங்க முடியலே என ECI-க்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு நாளும், அவங்க அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு Opinion Poll-ஐ Twitter-ல போட்டு நம்மள confuse பண்றாங்க; ஜனங்க நிம்மதியா, அவங்க இஷ்டப்படி ஓட்டு போட விடுங்கப்பா எனவும் கூறியுள்ளார்.
News March 9, 2026
மாணவர்கள் கல்வியில் சிறக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

ஓம் வாக்தேவ்யைச வித்மஹே விரிஞ்சி பத்ந்யைச தீமஹி தந்நோ வாணி: ப்ரசோதயாத் பொருள்: பேச்சின் தெய்வத்தை நாம் தியானிக்கிறோம், ஆசைகளை நிறைவேற்றுபவர் மீது நாம் கவனம் செலுத்துகிறோம், தெய்வீகம் நம்மை ஊக்கப்படுத்தி வழிகாட்டட்டும். (இந்த மந்திரத்தை சொல்வதோடு பாட புத்தகத்தை படிக்க வேண்டியதும் அவசியம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்) SHARE IT.


