News April 27, 2024

போர் கண்ட சிங்கமாக மாறிய பேர்ஸ்டோ!

image

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற புதிய சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது. நேற்று கொல்கத்தா அணி நிர்ணயித்த 262 ரன்கள் இலக்கை 18.3 ஓவரிலேயே எட்டிய பஞ்சாப் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 108 ரன்கள் குவித்த ஜோனி பேர்ஸ்டோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும், மற்றொரு வீரர் சஷாங்க் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார்.

Similar News

News August 14, 2025

உயராத தங்கம் விலை

image

கடந்த மூன்று நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹74,320-க்கும், கிராமுக்கு ₹9,290-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து விலை குறைந்ததால், இன்று உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதால், நகை பிரியர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

News August 14, 2025

இரவில் கைது.. கொந்தளித்த விஜய்

image

அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில், திமுக அரசு இரவோடு இரவாகக் கைது செய்துள்ளதாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையை மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாது. இது கொடுங்கோல் ஆட்சியின் வெளிப்பாடு என சாடிய அவர், கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

News August 14, 2025

இனி 3 மணி நேரத்தில் காசோலையை பணமாக்கலாம்

image

காசோலைகளை பணமாக்க தற்போது 2 நாள்கள் வரை ஆகிறது. CTS முறையில் பணமாக்கும் செயல்பாடு நடைபெறுகிறது. இந்நிலையில், அக்.4 முதல் 3 மணி நேரத்தில் காசோலையை பணமாக மாற்ற RBI அறிவுறுத்தியுள்ளது. Continuous Clearing மற்றும் Settlement on Realisation முறையில் இந்த செயல்பாடு விரைவாக முடிக்கப்படும். இதனால் தனிநபர்கள், வர்த்தக நிறுவனங்கள் சிரமத்தை தவிர்க்க முடியும்.

error: Content is protected !!