News March 27, 2025
சவுக்கு சங்கர் வழக்கில் கைதானோருக்கு பிணை

சவுக்கு சங்கர் வழக்கில் கைதான 5 பேருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டை கடந்த மார்ச் 24ஆம் தேதி ஒரு கும்பல் சூறையாடியது. டைனிங் டேபிள், படுக்கை அறைகளில் சாக்கடை நீரை ஊற்றினர். இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று மாலை 2 பெண்கள் உட்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 28, 2025
உங்க ஆதார் தவறாக யூஸ் பண்றாங்க என சந்தேகமா?

உங்க ஆதார் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தால் ★myAadhaar போர்ட்டலுக்கு சென்று, மொபைல் எண்ணுடன் Login செய்யுங்க ★மெனுவில் ‘Authentication History’-ஐ தேர்ந்தெடுக்கவும் ★ஆதார் பயன்பாட்டு விவரங்கள் அறிய, தேதி வரம்பைத் தேர்வு செய்து பயன்பாட்டை அறியுங்கள் ★அப்படி சந்தேகமான செயல்பாடு தெரிந்தால், 1947 என்ற எண்ணுக்கு டயல் செய்தோ அல்லது help@uidai.gov.in -க்கு மின்னஞ்சல் அனுப்பவும். SHARE.
News December 28, 2025
உள்ளூர் போட்டிகளிலும் கெத்து காட்டிய விராட் கோலி

சர்வதேச போட்டிகளை தொடர்ந்து, உள்ளூர் தொடர்களிலும் விராட் கோலியும் சாதனை படைத்து வருகிறார். அந்த வகையில் இப்போது விஜய் ஹசாரே கோப்பையில் அதிகவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை கோலி படைத்துள்ளார். டெல்லி அணிக்காக VHT-ல் விளையாடி வரும் அவர் நடப்பு சீசனில் களம் கண்ட 2 போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார். 2027 WC-ல் பங்கேற்பதற்காக இப்போது உள்ளூர் போட்டிகளில் அவர் விளையாடுகிறார்.
News December 28, 2025
தமிழின் பெருமை, இந்தியாவின் ஒற்றுமை: PM மோடி

உலகின் பழமையான மொழியான தமிழை கற்க, நாட்டின் பிற பகுதிகளிலும் ஆர்வம் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக PM மோடி தெரிவித்துள்ளார். மன்கி பாத் உரையில், இதுவே மொழியின் வலிமை, பாரதத்தின் ஒற்றுமை என பாராட்டினார். இந்தாண்டு தேசிய பாதுகாப்பு, விளையாட்டு, அறிவியல் என இந்தியா எல்லா துறைகளிலும் முத்திரையை பதித்துள்ளதாக கூறினார். ஆபரேஷன் சிந்துார் நாட்டின் அடையாளமாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


