News March 27, 2025

சவுக்கு சங்கர் வழக்கில் கைதானோருக்கு பிணை

image

சவுக்கு சங்கர் வழக்கில் கைதான 5 பேருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டை கடந்த மார்ச் 24ஆம் தேதி ஒரு கும்பல் சூறையாடியது. டைனிங் டேபிள், படுக்கை அறைகளில் சாக்கடை நீரை ஊற்றினர். இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று மாலை 2 பெண்கள் உட்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

Similar News

News December 28, 2025

BREAKING: விஜய் கார் விபத்தில் சிக்கியது

image

சென்னை ஏர்போர்டில் <<18697507>>விஜய் தடுமாறி கீழே விழுந்ததால்<<>> சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், அங்கிருந்து புறப்பட்டபோது அவரின் கார் மீது மற்றொரு கார் மோதி விபத்து ஏற்பட்டது. பின்னோக்கி வந்த கார், விஜய் இருந்த காரின் முன்பக்கத்தில் மோதியது. இதில், விஜய் இருந்த காரின் இண்டிகேட்டர் பகுதி சேதமடைந்தது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

News December 28, 2025

இந்தியாவில் கால் தடத்தை விரிவாக்கும் Rolls Royce!

image

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல இன்ஜின் தயாரிப்பு நிறுவனமான Rolls Royce, வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியாவில் பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவின் போர் விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்களுக்காக, அதிநவீன இன்ஜின்களை தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் US, ஜெர்மனிக்கு பிறகு இந்தியாவை தங்களின் உள்நாட்டு சந்தையாக விரிவுபடுத்த விரும்புவதாகவும் கூறியுள்ளது.

News December 28, 2025

ஒரேநாளில் 2.56 லட்சம் பேர் விண்ணப்பம்!

image

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, TN-ல் நேற்று ஒரே நாளில் 2.56 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 நாள்களில் மட்டும் 4.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை தெரிவித்து 4,741 பேர் மனு அளித்துள்ளனர். SIR-க்கு பிறகு 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், பெயர்களை சேர்க்க 4 நாள்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

error: Content is protected !!