News March 27, 2025

சவுக்கு சங்கர் வழக்கில் கைதானோருக்கு பிணை

image

சவுக்கு சங்கர் வழக்கில் கைதான 5 பேருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டை கடந்த மார்ச் 24ஆம் தேதி ஒரு கும்பல் சூறையாடியது. டைனிங் டேபிள், படுக்கை அறைகளில் சாக்கடை நீரை ஊற்றினர். இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று மாலை 2 பெண்கள் உட்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

Similar News

News January 17, 2026

கரும்பு மிச்சம் இருக்கா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

image

பொங்கலுக்காக வாங்கிய கரும்பு மீதமாகிவிட்டால் கவலைப்படாதீங்க. முதலில் தோல் சீவிய கரும்புகளை துண்டுகளாக வெட்டி மிக்சியில் அரைத்து நன்றாக வடிகட்டி, சாறை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இதனை காய்ச்சி சிறிதளவு தண்ணீர், தேவையான அளவு தேயிலை சேர்த்து மீண்டும் கொதிக்க விடுங்கள். பின்னர் அதில் தேவையான அளவு பால் சேர்த்து கொதி வந்தவுடன் இறக்கி விடுங்கள். சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த ’கரும்பு தேநீர்’ ரெடி!

News January 17, 2026

AR ரஹ்மான் அதிக வெறுப்பு கொண்ட மனிதர்: கங்கனா

image

AR ரஹ்மான் போல அதிக வெறுப்பு கொண்ட ஒரு மனிதரை தான் இதுவரை சந்தித்ததில்லை என பாஜக MP கங்கனா ரனாவத் கூறியுள்ளார். மத ரீதியான பாகுபாட்டால் கடந்த 8 ஆண்டுகளாக பாலிவுட்டில் வாய்ப்புகள் குறைந்ததாக ARR சமீபத்தில் கூறியிருந்தார். அதற்கு பதிலடியாக, ‘எமர்ஜென்சி’ பட கதையை சொல்ல வந்தபோது, தன்னை சந்திக்கக்கூட ARR மறுத்துவிட்டதாகவும், வெறுப்பால் அவர் பார்வையற்றவர் ஆகிவிட்டதாகவும் கங்கனா விமர்சித்துள்ளார்.

News January 17, 2026

தவெகவில் இணைகிறாரா முன்னாள் மத்திய அமைச்சர்?

image

தஞ்சையில் நடந்த மகளிர் மாநாட்டில் புறக்கணிக்கப்பட்டதால், திமுக முன்னாள் மத்திய இணை அமைச்சர் S.S.பழனிமாணிக்கம், தவெகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில், தன்னை அடையாளப்படுத்தியது திமுகதான். வரும் தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினால் போட்டியிடுவேன், இல்லையென்றால் தேர்தல் வெற்றிக்காக பாடுபடுவேன். என் உயிர் மூச்சு உள்ளவரை திமுகதான் என்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

error: Content is protected !!