News March 27, 2025
சவுக்கு சங்கர் வழக்கில் கைதானோருக்கு பிணை

சவுக்கு சங்கர் வழக்கில் கைதான 5 பேருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டை கடந்த மார்ச் 24ஆம் தேதி ஒரு கும்பல் சூறையாடியது. டைனிங் டேபிள், படுக்கை அறைகளில் சாக்கடை நீரை ஊற்றினர். இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று மாலை 2 பெண்கள் உட்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
Similar News
News November 24, 2025
BREAKING: பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா காலமானார்

பாலிவுட்டின் ‘ஹீ மேன்’ஆக கொண்டாடப்பட்ட தர்மேந்திரா (89) காலமானார். உடல்நலக்குறைவால் மும்பை பிரீச் கேண்டி தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவந்த அவர், கடந்த 12-ம் தேதி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதற்கு உடனே அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதால் வீடு திரும்பினார். இந்நிலையில், சற்றுநேரத்திற்கு முன் அவர் உயிரிழந்துள்ளார்.
News November 24, 2025
இலவசமாக AI பற்றி படிக்க அரசின் புதிய திட்டம்!

ஒரு பைசா செலவில்லாமல் AI பற்றி படிக்க, Yuva AI for All திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. AI பற்றிய அடிப்படை கான்செப்ட்டுகளை 4.5 மணி நேரத்தில் நீங்கள் கற்கலாம். அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. <
News November 24, 2025
தேஜஸ் போர் விமானம் விபத்து.. HAL பங்குகளின் விலை சரிந்தது

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சற்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. இருப்பினும், அதில் பட்டியலிடப்பட்டுள்ள, பொதுத்துறை நிறுவனமான HAL பங்குகளின் விலை 8.5% சரிந்து, ₹4,205-க்கு வர்த்தகமாகி வருகின்றன. துபாய் ஏர்ஷோவில் தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானதால், அதை தயாரித்த HAL நிறுவனத்தின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


