News March 27, 2025
சவுக்கு சங்கர் வழக்கில் கைதானோருக்கு பிணை

சவுக்கு சங்கர் வழக்கில் கைதான 5 பேருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டை கடந்த மார்ச் 24ஆம் தேதி ஒரு கும்பல் சூறையாடியது. டைனிங் டேபிள், படுக்கை அறைகளில் சாக்கடை நீரை ஊற்றினர். இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று மாலை 2 பெண்கள் உட்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 24, 2025
அதிமுக + பாஜக + ஓபிஎஸ் கூட்டணி.. முடிவை அறிவித்தார்

EPS இருக்கும் வரை <<18654367>>அதிமுகவுடன் கூட்டணி<<>> இல்லை என OPS திட்டவட்டமாக அறிவித்துள்ளார். சென்னையில், நேற்று நடைபெற்ற NDA கூட்டணி பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு, கூட்டணியில் இடம்பெறவுள்ள கட்சிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. அப்போது, OPS, TTV தினகரனை கூட்டணியில் இணைத்துக் கொள்ள EPS பச்சைக்கொடி காட்டியதாக செய்தி வெளியானது. ஆனால், இதனை OPS தரப்பு நிராகரித்துள்ளது.
News December 24, 2025
MGR என்னும் சகாப்தம்!

ஒருவரின் பெயர் தலைமுறைகள் தாண்டியும் பேசப்படுவது சாதாரண புகழல்ல, அபூர்வம்! அது MGR-க்கு சாத்தியமானது. அவருக்கு இன்று 38-வது நினைவு நாள். அவரது ஆட்சியில் தான், அண்ணா யூனிவர்சிட்டி உருவானது. சத்துணவு திட்டம் அறிமுகமானது. திரையில் மக்கள் நாயகனாகவும், நிஜத்தில் புரட்சித் தலைவராக இன்றும் அரசியலின் மையப்புள்ளியாக தொடர்கிறார். உங்களுக்குள் இருக்கும் MGR-ன் நினைவை கமெண்ட்ல சொல்லுங்க.
News December 24, 2025
அரசு ஊழியர்களுக்கு Good News: அன்பில் மகேஸ்

ஜாக்டோ-ஜியோ சார்பில் ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு பின்னரும் போராட்டம் நடத்துவதில் அரசு ஊழியர்கள் உறுதியாக உள்ளதாக அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மத்திய அரசு TN-க்கான நிதியை கொடுப்பதில்லை என்பதை அவர்களிடம் தெரிவித்ததாகவும், எனினும் ஜன.6-க்குள் அவர்களுக்கான நல்ல செய்தியை CM அறிவிப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


