News March 27, 2025
சவுக்கு சங்கர் வழக்கில் கைதானோருக்கு பிணை

சவுக்கு சங்கர் வழக்கில் கைதான 5 பேருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டை கடந்த மார்ச் 24ஆம் தேதி ஒரு கும்பல் சூறையாடியது. டைனிங் டேபிள், படுக்கை அறைகளில் சாக்கடை நீரை ஊற்றினர். இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று மாலை 2 பெண்கள் உட்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
Similar News
News January 7, 2026
பொங்கல் பரிசு.. அரசு அதிகரித்தது

பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ₹3,000 தொகையை உள்ளடக்கிய பொங்கல் தொகுப்பை வழங்கும் பணியை நாளை (ஜன.8) CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து, ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லாமல், தமிழகம் முழுவதும் ஜன.8 – 12 வரை பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜன.13 வரை ஒரு நாள் நீட்டித்து பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 7, 2026
உஷார்.. இந்த நோய் உயிரை பறிக்கும்!

40 வயதான பெண்களுக்கு brain aneurysm நோய் வருவதற்கான அபாயம் அதிகம் இருக்கிறதாம். மூளையிலுள்ள ரத்த நாளங்கள் வீங்கி, வெடிப்பதைதான் brain aneurysm என்கின்றனர். அப்படி நடந்தால் ரத்தக்கசிவு ஏற்பட்டு, உயிர் பறிபோகலாம். இதற்கு Stress-ம் ஒரு காரணமாக இருக்கிறது. எனவே, அடிக்கடி கழுத்து வலி, கடுமையான தலைவலி, திடீரென பார்வை மங்குவது போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டாமல் டாக்டரை அணுகுங்கள். SHARE.
News January 7, 2026
12-ம் தேதிக்கு தள்ளிப்போகிறதா ‘ஜனநாயகன்’?

<<18783030>>தணிக்கை குழு<<>> சான்றிதழ் கிடைக்காமல், ‘ஜனநாயகன்’ படம் தவித்து வருகிறது. இன்று ஐகோர்ட்டில் விசாரணை நடைபெறவுள்ள நிலையில், 9-ம் தேதி படம் வெளிவருமா என்ற சந்தேகம் நிலவுகிறது. இந்நிலையில்தான், Bookmyshow-ல் படத்திற்கான முன்பதிவு 12-ம் தேதி முதல் தொடங்கியிருக்கும் நிலையில், ரசிகர்கள் படம் அன்றைய தேதிக்கு தள்ளிபோகிறதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதற்கெல்லாம் விடை இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.


