News March 27, 2025

சவுக்கு சங்கர் வழக்கில் கைதானோருக்கு பிணை

image

சவுக்கு சங்கர் வழக்கில் கைதான 5 பேருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டை கடந்த மார்ச் 24ஆம் தேதி ஒரு கும்பல் சூறையாடியது. டைனிங் டேபிள், படுக்கை அறைகளில் சாக்கடை நீரை ஊற்றினர். இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று மாலை 2 பெண்கள் உட்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

Similar News

News December 24, 2025

தாயுமானவர் திட்டம்: ரேஷன் கார்டுகளுக்கு புதிய தளர்வு

image

<<17336334>>’தாயுமானவர்’<<>> திட்டத்தில் ரேஷன் பொருள்கள் வழங்கும்போது கையெழுத்து பெற்றும் வழங்கலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் சிவராசு தெரிவித்துள்ளார். வீடு வீடாக சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும்போது 4G சர்வர் அடிக்கடி பழுதாவதால் கைவிரல் ரேகை, கருவிழி சரிபார்ப்பதில் சிரமம் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதனால், ரேஷன் ஊழியர்கள், பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று அரசு இந்த முடிவை அறிவித்துள்ளது. SHARE IT.

News December 24, 2025

உடலை மெருகேற்றும் 12-3-30 பயிற்சி

image

உடலை வலுவாக்குவதற்கு தினமும் ரன்னிங், எடை தூக்குதல் உள்ளிட்ட கடினமான பயிற்சிகள் செய்வதைவிட 12-3-30 பயிற்சி நல்ல பலன்களை தரும் என உடற்பயிற்சி நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த பயிற்சியை செய்வதற்கு டிரெட்மில்லை 12 % சாய்வாக (Incline) அமைத்து மணிக்கு 3 மைல் வேகத்தில் 30 நிமிடங்கள் இடைவெளி இன்றி நடக்க வேண்டும். இதனால் உடலில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும், தசை வலிமை கூடும், கொழுப்பு கரையும் என கூறப்படுகிறது.

News December 24, 2025

திமுக அரசின் போலி தமிழ்ப்பற்று: அண்ணாமலை

image

SI பணிக்கான, முதன்மைத் தேர்வில் தமிழ் கேள்விகள் நீக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். வழக்கமாக பகுதி 2-ல் 10 தமிழ் கேள்விகள் இடம்பெறும், ஆனால் இம்முறை எந்த முன்னறிவிப்புமின்றி அவற்றை நீக்கி வினாத்தாளை மாற்றியுள்ளதாக அவர் சாடியுள்ளார். இது திமுக அரசின் போலி தமிழ் பற்றை வெளிச்சமிட்டு காட்டியுள்ளதாக X-ல் கூறியுள்ள அவர், தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!