News March 27, 2025
சவுக்கு சங்கர் வழக்கில் கைதானோருக்கு பிணை

சவுக்கு சங்கர் வழக்கில் கைதான 5 பேருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டை கடந்த மார்ச் 24ஆம் தேதி ஒரு கும்பல் சூறையாடியது. டைனிங் டேபிள், படுக்கை அறைகளில் சாக்கடை நீரை ஊற்றினர். இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று மாலை 2 பெண்கள் உட்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
Similar News
News November 25, 2025
‘அம்மா Sorry.. என் சாவுக்கு இவர்தான் காரணம்’

சத்தீஸ்கரில் தனியார் பள்ளியில் மாணவி(15) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரின்சிபல் பாலியல் தொல்லை கொடுத்ததே, தனது சோக முடிவுக்கு காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், பிரின்சிபலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களே அவசரப்படாதீர், தற்கொலை எதற்கும் தீர்வல்ல!
News November 25, 2025
T20 WC: பிப்.15-ல் இந்தியா Vs பாகிஸ்தான்

இந்தியா, இலங்கை இணைந்து நடத்தும் 2026 டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் பிப்.7-ம் தேதி தொடங்குகிறது. குரூப் ஏ-ல் இடம்பெற்றுள்ள IND பிப்.7-ல் USA, பிப்.12-ல் நமீபியா, பிப்.15-ல் பாகிஸ்தான், பிப்.18-ல் நெதர்லாந்துடன் மோதுகிறது. பைனல் மார்ச்.8-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. PAK பைனலுக்கு முன்னேறினால் போட்டி கொழும்புவில் நடத்தப்படும்.
News November 25, 2025
முடி உதிர்வுக்கு Full Stop; இந்த ஒரு எண்ணெய் போதும்!

முடி கொட்டும் பிரச்னை நீங்கி, நிற்காமல் வளர பூசணி விதை எண்ணெய் பெரிதும் உதவும் என டாக்டர்கள் சொல்கின்றனர். இந்த விதையில் உள்ள வைட்டமின்கள் முடி உதிர்வை கட்டுப்படுத்துவதோடு, பொடுகு தொல்லை, Dry Scalp போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும். இந்த எண்ணெயை தடவி 1 மணி நேரம் ஊறவைத்த பின்பு தலைக்கு குளியுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்தால் முடி சம்பந்தமான அனைத்து பிரச்னைகளும் நீங்கும். SHARE.


