News March 27, 2025
சவுக்கு சங்கர் வழக்கில் கைதானோருக்கு பிணை

சவுக்கு சங்கர் வழக்கில் கைதான 5 பேருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டை கடந்த மார்ச் 24ஆம் தேதி ஒரு கும்பல் சூறையாடியது. டைனிங் டேபிள், படுக்கை அறைகளில் சாக்கடை நீரை ஊற்றினர். இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று மாலை 2 பெண்கள் உட்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
Similar News
News November 22, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 527
▶குறள்:
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.
▶பொருள்: தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும். அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு.
News November 22, 2025
NATIONAL 360°: மூதாட்டியிடம் ₹32 லட்சத்தை பறித்த கும்பல்

*பெங்களூருவில் குடும்பத்துக்கு பிரச்னையாக இருந்த தம்பியை கொன்ற அண்ணன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். *மும்பையில் போலீசார் போல் ஏமாற்றி 72 வயது மூதாட்டியிடம் இருந்து ₹32 லட்சத்தை மர்ம நபர்கள் பறித்துள்ளனர். *டெல்லியில் 8 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். *பிஹாரில் மாநில மகளிர் அணி தலைவர் ராஜிநாமா செய்து, கட்சி தலைமையகம் எதிரே போராட்டம் நடத்தினார்.
News November 22, 2025
வேலையில் எந்த ஷிப்ட் சிறந்தது தெரியுமா?

பொதுவாக பணியிடங்களில் பகல் (ஜெனரல்) ஷிப்ட் இருக்கும். பல இடங்களில் காலை, மதியம், மற்றும் நைட் ஷிப்ட் என மாறிமாறி வரும். ரொட்டேஷனல் ஷிப்ட் இருக்கும். பகல் ஷிப்ட் (அ) தினமும் ஒரே ஷிப்ட் உடல்நலத்துக்கு பாதுகாப்பானது என்கின்றனர் டாக்டர்கள். ஷிப்ட் மாறி மாறி வேலை செய்யும்போது, அதற்கேற்ப உடல் மாற சிரமப்படுகிறது. இதன் விளைவால் இதயநோய், நீரிழிவு, தூக்கமின்மை பாதிப்புகள் ஏற்படும் ஆபத்தும் அதிகரிக்கிறது.


