News March 27, 2025

சவுக்கு சங்கர் வழக்கில் கைதானோருக்கு பிணை

image

சவுக்கு சங்கர் வழக்கில் கைதான 5 பேருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டை கடந்த மார்ச் 24ஆம் தேதி ஒரு கும்பல் சூறையாடியது. டைனிங் டேபிள், படுக்கை அறைகளில் சாக்கடை நீரை ஊற்றினர். இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று மாலை 2 பெண்கள் உட்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

Similar News

News November 6, 2025

வார விடுமுறை.. 920 சிறப்பு பஸ்கள் இயக்கம்

image

வார விடுமுறை நாள்களை முன்னிட்டு 920 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. சொந்த ஊர் செல்ல கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை 340 பஸ்களும், நாளை மறுநாள் 350 பஸ்களும் புறப்படும். அதே போல கோயம்பேட்டில் நாளை 55 பஸ்களும், நாளை மறுநாள் 55 பஸ்களும், திருப்பூர், கோவை, ஈரோட்டில் இருந்து பல இடங்களுக்கு 100 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 20 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

News November 6, 2025

வசீகரிக்கும் அழகில் ஸ்ருதி ஹாசன்!

image

எப்போதுமே SM-ல் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், ‘கூலி’ படத்திற்கு பிறகு சற்று இன்-ஆக்டிவாகி விட்டார். எனினும், வாடிக்கையாக போட்டோஷூட் செய்வதை அவர் தவறவிடுவதில்லை. ஸ்டைலிஷாகவும், கவர்ச்சியாகவும் போட்டோஷூட் செய்யும் ஸ்ருதி ஹாசன், இம்முறை மிளிரும் சேலை அணிந்து கிளாஸியான புகைப்படங்கள் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது SM-ல் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

News November 6, 2025

பாலில் ஊறவைத்த உலர் திராட்சையின் நன்மைகள்

image

*பாலில் ஊறவைத்த கருப்பு உலர் திராட்சையை சாப்பிடுவதால் எலும்புகள் வலுப்பெறும். *உடலில் ரத்த பற்றாக்குறையை தீர்க்க இது உதவும். *நம் குடலில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்கும். *உடலில் உள்ள அனைத்து நச்சுகளும் வெளியேற்றப்படும். *ரத்த அழுத்த பிரச்னையை குறைத்திடும். *ஆண்களின் விந்தணு இயக்கம் அதிகரிக்கும். *பாலை நன்கு கொதிக்கவைத்து, அதன் பிறகு 10-15 உலர் திராட்சையை போட்டு ஊறவைத்து குடிக்கவும்.

error: Content is protected !!