News March 27, 2025
சவுக்கு சங்கர் வழக்கில் கைதானோருக்கு பிணை

சவுக்கு சங்கர் வழக்கில் கைதான 5 பேருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டை கடந்த மார்ச் 24ஆம் தேதி ஒரு கும்பல் சூறையாடியது. டைனிங் டேபிள், படுக்கை அறைகளில் சாக்கடை நீரை ஊற்றினர். இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று மாலை 2 பெண்கள் உட்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 15, 2025
BREAKING: அறிவித்தார் செங்கோட்டையன்

வரலாறு படைக்கும் அளவிற்கு ஈரோட்டில் விஜய்யின் பரப்புரை கூட்டம் நடைபெறும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். வரும் 18-ம் தேதி காலை 11 முதல் மதியம் 1 மணிக்குள் கூட்டம் நடத்தப்படும் எனவும், குடிநீர், ஆம்புலன்ஸ் என அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்கள் கூட்டத்திற்கு வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
News December 15, 2025
IPL: அதிக விலைக்கு வாங்கப்பட்ட டாப் 10 வீரர்கள்

திறமையான வீரர்களை எந்த விலை கொடுத்தேனும் எடுத்துவிட வேண்டும் என IPL அணிகள் முனைப்பு காட்டும். அந்த வகையில், IPL ஏலத்தில் அதிகம் தொகைக்கு வாங்கப்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்களின் போட்டோக்களையும் தொகையையும் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News December 15, 2025
ஜோர்டனில் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்த PM மோடி

அரசுமுறை பயணமாக ஜோர்டன் சென்றுள்ள PM மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு குழந்தைகளுடன் PM மோடி விளையாடி மகிழ்ந்தார். ஜோர்டன் மன்னரை சந்திக்கும் PM மோடி, இந்தியா – ஜோர்டன் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார். ஈராக், UAE, சீனாவுக்கு அடுத்தபடியாக ஜோர்டனின் 4-வது பெரிய வர்த்தக கூட்டாளியாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.


