News March 27, 2025
சவுக்கு சங்கர் வழக்கில் கைதானோருக்கு பிணை

சவுக்கு சங்கர் வழக்கில் கைதான 5 பேருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டை கடந்த மார்ச் 24ஆம் தேதி ஒரு கும்பல் சூறையாடியது. டைனிங் டேபிள், படுக்கை அறைகளில் சாக்கடை நீரை ஊற்றினர். இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று மாலை 2 பெண்கள் உட்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 12, 2025
5 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த இந்தியா!

SA-வுக்கு எதிரான 2-வது T20-ல் இந்திய அணி 5 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. 157-வது ரன்னில் ஜிதேஷ் சர்மா, 158-வது ரன்னில் துபே, 162-வது ரன்னில் அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி & திலக் வர்மா ஆகியோர் வரிசையாக அவுட்டாகினர். 213 ரன்களை சேசிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பமே முதலே தடுமாறியது. திலக் வர்மாவை தவிர, பேட்டிங்கில் அனைவருமே சொதப்பிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
News December 12, 2025
ரஜினியின் 2-வது தாயார்.. இவரை பற்றி தெரியுமா?

ரஜினி தாயாகவே பாவிப்பவரின் பெயர் ரெஜினா. 1979-ல் ரஜினி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்களாலும் அவரை கட்டுப்படுத்த முடியாத சூழலில், ‘அம்மா.. அம்மா’ என முனங்கியபடி அவர் தவித்துள்ளார். அப்போது, ரெஜினாவின் தாயன்பே அவரை குணப்படுத்தியுள்ளது. சமூக சேவகியான ரெஜினாவை ஷூட்டிங்கின் ஒன்றின் போது பார்த்த கணமே, ரஜினி அவரை ‘அம்மா’ என அழைத்துள்ளார். அன்றிலிந்து ரஜினிக்கு ரெஜினா 2-வது தாயாக மாறினார்.
News December 12, 2025
நிதிஷிடம் புதிய பஞ்சாயத்தை கூட்டும் லாலு மகள்!

லாலு பிரசாத்தின் மகள் <<18303650>>ரோகிணி ஆச்சார்யா<<>> குடும்ப சண்டை காரணமாக அரசியலை விட்டு விலகினார். இந்நிலையில், X பதிவில் நிதிஷ்குமாரின் மகளிர் திட்டங்களை சூசகமாக பாராட்டிய அவர், ‘ஒவ்வொரு மகளும் எந்தவித பயமும் இல்லாமல் பெற்றோர் வீட்டிற்கு பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது, குடும்ப பூசலின் உச்சமா? JDU-வில் இணைவதற்கான அச்சாரமா? என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.


