News March 27, 2025

சவுக்கு சங்கர் வழக்கில் கைதானோருக்கு பிணை

image

சவுக்கு சங்கர் வழக்கில் கைதான 5 பேருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டை கடந்த மார்ச் 24ஆம் தேதி ஒரு கும்பல் சூறையாடியது. டைனிங் டேபிள், படுக்கை அறைகளில் சாக்கடை நீரை ஊற்றினர். இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று மாலை 2 பெண்கள் உட்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

Similar News

News December 21, 2025

திருப்பூருக்கு பெருமை: தட்டித்தூக்கிய நிறுவனங்கள்!

image

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பாக, நாடு முழுவதும் ஜவுளி ஏற்றுமதியில் சிறந்த நிறுவனங்களுக்கான விருது வழங்கும் விழா, டெல்லியில் நடைபெற்றது. துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருப்பூரைச் சேர்ந்த 11 நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அதிக ஏற்றுமதி, சிறந்த செயல் திறன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

News December 21, 2025

பொங்கல் பரிசு ₹5000.. வந்தாச்சு ஜாக்பாட் HAPPY NEWS

image

பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ₹3000 அல்லது ₹5000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பையும் வழங்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. வழக்கமாக ஜனவரி முதல் வாரத்தில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும். இதனால், புத்தாண்டு வாழ்த்தோடு CM ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகை அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News December 21, 2025

இந்தியாவின் எதிரிகளுடன் ராகுல் சந்திப்பு: பாஜக

image

ஜெர்மனி பயணத்தில் ராகுல் காந்தி ‘இந்தியாவின் எதிரிகளை’ சந்தித்ததாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. பேராசிரியர் கார்னிலியா வோல் என்பவருடன் ராகுல் இருக்கும் போட்டோவை வெளியிட்ட பாஜக, அவர் இந்தியாவிற்கு எதிராக சதி செய்யும் USA கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸிடம் நிதியுதவி பெறும் பல்கலை.,யின் டிரஸ்ட்டி என தெரிவித்துள்ளது. ராகுலின் வெளிநாட்டு பயணங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் எனவும் BJP வலியுறுத்தியுள்ளது.

error: Content is protected !!