News March 27, 2025

சவுக்கு சங்கர் வழக்கில் கைதானோருக்கு பிணை

image

சவுக்கு சங்கர் வழக்கில் கைதான 5 பேருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டை கடந்த மார்ச் 24ஆம் தேதி ஒரு கும்பல் சூறையாடியது. டைனிங் டேபிள், படுக்கை அறைகளில் சாக்கடை நீரை ஊற்றினர். இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று மாலை 2 பெண்கள் உட்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

Similar News

News October 18, 2025

National Roundup: PM மோடியை சந்தித்த எகிப்து அமைச்சர்

image

*கடந்த 75 மணி நேரத்தில் 303 மாவோயிஸ்ட்கள் சரணடைந்துள்ளதாக PM மோடி அறிவிப்பு. *நிதி மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்‌ஷியை நாடு கடத்த பெல்ஜியம் அனுமதி.*ஜம்மு & காஷ்மிர் CM-ஆக உமர் அப்துல்லா ஒரு ஆண்டை நிறைவு செய்தார். *இந்தியா வந்துள்ள எகிப்து வெளியுறவு அமைச்சர் பத்தர் அப்தெலாட்டி PM மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை. *லடாக்கின் லே மாவட்டத்தில் பொதுவெளியில் மக்கள் கூட மீண்டும் கட்டுப்பாடு.

News October 18, 2025

அக்டோபர் 18: வரலாற்றில் இன்று

image

*1922 – பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது. *1929 – கனடாவில் பெண்களும் மனிதர்கள் என சட்டபூர்வமாக எழுதப்பட்டது. *1931 – விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் இறந்தநாள். *1991 – தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது. *2004 – சந்தனக் கடத்தல் வீரப்பன் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார். *1978 – நடிகை ஜோதிகா பிறந்தநாள்.

News October 18, 2025

விற்பனைக்கு வந்த RCB: வாங்க போவது இவர்கள் தானா?

image

மதுபான விளம்பரங்களை ஒலிபரப்ப மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் RCB அணியை விற்க, அதன் தாய் நிறுவனமான Diageo முடிவு செய்துள்ளது. RCB-ஐ வாங்க ஆதார் பூனவாலா (சீரம் இன்ஸ்டிடியூட்) , பாரத் ஜிண்டால் (JSW குழுமம்), அதானி குழுமம், டெல்லியை சேர்ந்த நிறுவனம் மற்றும் 2 அமெரிக்க நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. பிரிட்டனை சேர்ந்த மதுபான நிறுவனம் தான் Diageo என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!