News March 27, 2025
சவுக்கு சங்கர் வழக்கில் கைதானோருக்கு பிணை

சவுக்கு சங்கர் வழக்கில் கைதான 5 பேருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டை கடந்த மார்ச் 24ஆம் தேதி ஒரு கும்பல் சூறையாடியது. டைனிங் டேபிள், படுக்கை அறைகளில் சாக்கடை நீரை ஊற்றினர். இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று மாலை 2 பெண்கள் உட்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 19, 2025
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.. இத பண்ணுங்க!

தமிழகத்தில் இன்று <<18609101>>வரைவு வாக்காளர் பட்டியலை<<>> ECI வெளியிட உள்ளது. அதில், பெயர் விடுபட்டு போனவர்கள், பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க ‘வாக்காளர் படிவம் 6’-ல் விவரங்களை பதிவு செய்து BLO-க்களிடம் வழங்கவும். அப்படிவம் சரிபார்க்கப்பட்ட பின், தகுதியுடையவர்கள் வாக்காளர்கள் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படுவார்கள். பிப்ரவரி 17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. SHARE IT.
News December 19, 2025
சீன Cold-rolled steel-களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிப்பு

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் Cold-rolled steel-கள் மீது இந்தியா 5 ஆண்டுகளுக்கு கூடுதல் இறக்குமதி குவிப்பு தடுப்பு வரியை (Anti-dumping duty) விதித்துள்ளது. சீனா மிகக் குறைந்த விலையில் அவற்றை இந்திய சந்தையில் குவிப்பதால், உள்ளூர் உற்பத்தியாளர்கள் நஷ்டமடைவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, உள்நாட்டு தொழில்துறையை பாதுகாக்க ஒரு டன் எஃகு மீது சுமார் ₹20,000- ₹38,000 வரை வரி விதிக்கப்பட்டுள்ளது.
News December 19, 2025
இன்று களமிறங்குவாரா கில்?

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான <<18609098>>5-வது T20I<<>> போட்டி இன்று நடைபெறுகிறது. ஆனால், இந்த போட்டியில் அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. கால் விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் அவர் முழுமையாக குணமடையவில்லையாம். அவருக்கு பதிலாக, இன்று ஓப்பனராக சஞ்சு சாம்சன் களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!


