News March 27, 2025
சவுக்கு சங்கர் வழக்கில் கைதானோருக்கு பிணை

சவுக்கு சங்கர் வழக்கில் கைதான 5 பேருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டை கடந்த மார்ச் 24ஆம் தேதி ஒரு கும்பல் சூறையாடியது. டைனிங் டேபிள், படுக்கை அறைகளில் சாக்கடை நீரை ஊற்றினர். இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று மாலை 2 பெண்கள் உட்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 23, 2025
100 ஆண்டுகளில் இதுவே முதல்முறை

வரும் 25-ம் தேதி உலகெங்கும் கொண்டாடப்படவுள்ள கிறிஸ்துமஸ் எவ்வளவு சிறப்புமிக்கது என்பது தெரியுமா? கிறிஸ்துமஸ் தினத்தின் தேதியை கொஞ்சம் கவனியுங்க, 25/12/25. இந்த எண் வரிசை என்பது 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வருகிறது. கடைசியாக 1925-ல் வந்தது. அடுத்து 2125-ல் தான் வரும். நீங்க எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் வாழ்கிறீர்கள் என்பதை உணர்ந்து, இப்பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
News December 23, 2025
ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு… வந்தாச்சு HAPPY NEWS

புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் அதுகுறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், துறைசார்ந்த அமைச்சர்களான சக்கரபாணி, பெரியகருப்பன் மற்றும் அதிகாரிகளுடன் CM ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், பொங்கல் பரிசுத் தொகை எவ்வளவு, பொங்கல் தொகுப்பில் இடம்பெறும் பொருள்கள் உள்ளிட்டவை இறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. SHARE IT.
News December 23, 2025
இலங்கைக்கு, இந்தியா ₹4,000 கோடி நிதியுதவி

இலங்கைக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அதிபர் அநுர குமார திசநாயகே, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் விஜித் ஹெராத்தை சந்தித்து பேசினார். அப்போது, டிட்வா புயல் சேதங்கள் குறித்து கேட்டறிந்த ஜெய்சங்கர், சீரமைப்பு பணிகளுக்காக இலங்கைக்கு, இந்தியா சார்பில், சுமார் ₹4,000 கோடி நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்தார். பாதிப்பில் இருந்து மீண்டுவர இந்தியா துணைநிற்கும் என்றும் கூறினார்.


