News April 3, 2024
மச்சானை விட பச்சான் தான் முக்கியம்

மச்சானை விட பச்சான் (தங்கர் பச்சான்) தான் முக்கியம் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் குரல் கொடுக்கும் தங்கர் பச்சானை கடலூர் தொகுதி மக்கள் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், இவரை விட ஒரு சிறந்த வேட்பாளர் யாராவது இருந்தால் எனக்கு அடையாளம் காட்டுங்கள் எனக் கூறினார். இதே தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத் அன்புமணியின் மச்சான் ஆவார்.
Similar News
News November 10, 2025
30% வாக்காளர்களை காணோம்: கடம்பூர் ராஜூ

தனது கோவில்பட்டி தொகுதியிலேயே 30% வாக்காளர்களை காணோம் என்று கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் தில்லுமுல்லு என்பது திமுகவுக்கு கை வந்த கலை. இரட்டைபதிவு, இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளது என 30% பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும்; ஆனால், ஆள் இருக்க மாட்டார்கள். வாக்குப்பதிவு அன்று மட்டும் வந்து அந்த வாக்குகள் விழும் என்று சாடினார்.
News November 10, 2025
சுவாசக் கோளாறுகளை குணப்படுத்தும் கசாயம்!

சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடவும், சுவாசக் கோளாறுகளிலிருந்து நிவாரணம் பெறவும் புதினா கசாயம் உதவும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✤தேவையானவை: புதினா, மிளகுத்தூள், உப்பு ✤செய்முறை: புதினாவை கிள்ளி போட்டு, தண்ணீரில் 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். பின்னர் அதை வடிகட்டி, இறக்கி உப்பு, மிளகு தூள் கலந்தால் புதினா கசாயம் தயார். அனைவருக்கும் இச்செய்தியை பகிரவும்.
News November 10, 2025
தமிழகத்தில் இன்று மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு

2027 பிப்ரவரியில் நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதன் முன்னோட்டமாக, தமிழகத்தில் 3 இடங்களில் இன்று மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளன. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா, காஞ்சிபுரம் மாவட்ட மாங்காடு நகராட்சியில் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இதன்போது, 34 வகையான கேள்விகள் மக்களிடம் கேட்கப்படும்.


