News April 14, 2025
திருமணமான 4 மாதத்தில் குழந்தை… புலம்பும் கணவன்

தேனியில் திருமணமான 4 மாதத்தில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணுக்கு இது 3-வது திருமணமாம். திருமணத்தின்போதே கர்ப்பமாக இருந்த அவர், உண்மையை மறைத்துள்ளார். கணவனுக்கு விஷயம் தெரிந்ததை அடுத்து அந்த பெண் வீட்டில் இருந்து மாயமானார். கணவன் கொடுத்த புகாரில் அந்த பெண்ணை போலீசார் தேடி கண்டுபிடித்தனர். தற்போது கைக்குழந்தையுடன் இருக்கும் அவர் கணவனுடன் வாழ விருப்பமில்லை என கூறிவிட்டாராம்.
Similar News
News November 10, 2025
USA-ல் உயிரிழந்த இந்திய மாணவி: சளி காரணமா?

USA டெக்சாஸில், ஆந்திராவை சேர்ந்த 23 வயது மாணவி ராஜ்யலட்சுமி தனது அப்பார்ட்மெண்ட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் பட்டம் பெற்று வேலை தேடிக்கொண்டிருந்த ராஜி, கடந்த சில நாள்களாக கடும் சளி மற்றும் நெஞ்சு வலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர இணையத்தில் நிதி திரட்டப்பட்டு வருகிறது.
News November 10, 2025
சுத்தமான காற்று.. டாப் 10 நகரங்கள்

இந்தியா, பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. சில நகரங்களில் காற்றின் தரம் மிகவும் கவலைக்கிடமாக இருந்தாலும், சில நகரங்களில் காற்று சுத்தமாகவும் சுவாசிக்க பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. எந்தெந்த நகரங்கள் சுத்தமான காற்றுடன் உள்ளன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் பண்ணுங்க. SHARE IT.
News November 10, 2025
பிரபல நடிகர் கவலைக்கிடம்… வென்டிலேட்டரில் சிகிச்சை

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரும், நடிகை ஹேமமாலினியின் கணவருமான தர்மேந்திராவின்(89) உடல்நிலை கவலைக்கிடமாகியுள்ளது. உடல்நலக் குறைவால் நவ.1-ம் தேதி மும்பையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, வென்டிலேட்டர் உதவியுடன் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தர்மேந்திராவின் உடல்நிலையை டாக்டர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது.


