News April 14, 2025
திருமணமான 4 மாதத்தில் குழந்தை… புலம்பும் கணவன்

தேனியில் திருமணமான 4 மாதத்தில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணுக்கு இது 3-வது திருமணமாம். திருமணத்தின்போதே கர்ப்பமாக இருந்த அவர், உண்மையை மறைத்துள்ளார். கணவனுக்கு விஷயம் தெரிந்ததை அடுத்து அந்த பெண் வீட்டில் இருந்து மாயமானார். கணவன் கொடுத்த புகாரில் அந்த பெண்ணை போலீசார் தேடி கண்டுபிடித்தனர். தற்போது கைக்குழந்தையுடன் இருக்கும் அவர் கணவனுடன் வாழ விருப்பமில்லை என கூறிவிட்டாராம்.
Similar News
News December 6, 2025
தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான கடைசி ODI போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. Vizaz-ல், இரவுநேரம் அதிக பனிப்பொழிவு இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி கண்டிப்பாக பந்துவீச்சை தேர்வு செய்யும். இந்தியாவின் பேட்டிங் வலுவாக இருந்தாலும், பந்துவீச்சில் முன்னேற்றம் காண வேண்டிய அவசியம் உள்ளது. SA-வும் கடும் சவால் அளிப்பதால் போட்டி அனல் பறக்கும்.
News December 6, 2025
மகளிர் உரிமைகளை மீட்க.. செளமியா அன்புமணி பயணம்

அன்புமணியின் TN மக்கள் உரிமை மீட்பு பயணத்தை தொடர்ந்து, செளமியா அன்புமணி மகளிர் உரிமை மீட்பு பயணத்தை இன்று தொடங்குகிறார். காஞ்சிபுரத்தில் இருந்து பயணத்தை தொடங்கும் அவர், அதிகாரத்தில் பெண்களுக்கு சமவாய்ப்பு, வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் செய்யவுள்ளார். மகளிர் வாக்குகளை கவர்வதற்கு அவர், இந்த பயணத்தை தொடங்குவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News December 6, 2025
புன்னகை அரசி சினேகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

வயசானாலும் அழகும், ஸ்டைலும், புன்சிரிப்பும் என்னிடம் மாறாது என்பது போல சினேகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் உள்ளன. அதில், மிளிரும் ஆடை மற்றும் ஆபரணங்கள் அணிந்து தங்கம் போல சினேகா ஜொலி ஜொலிக்கிறார். இந்த போட்டோக்களை பார்த்த மெய்சிலிர்த்து போன ரசிகர்கள், ஹீரோயினாக நடிப்பதை ஏன் நிறுத்தினீர்கள் என்று SM-ல் கேட்கின்றனர். SWIPE செய்து நீங்களும் போட்டோக்களை பாருங்க


