News April 14, 2025

திருமணமான 4 மாதத்தில் குழந்தை… புலம்பும் கணவன்

image

தேனியில் திருமணமான 4 மாதத்தில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணுக்கு இது 3-வது திருமணமாம். திருமணத்தின்போதே கர்ப்பமாக இருந்த அவர், உண்மையை மறைத்துள்ளார். கணவனுக்கு விஷயம் தெரிந்ததை அடுத்து அந்த பெண் வீட்டில் இருந்து மாயமானார். கணவன் கொடுத்த புகாரில் அந்த பெண்ணை போலீசார் தேடி கண்டுபிடித்தனர். தற்போது கைக்குழந்தையுடன் இருக்கும் அவர் கணவனுடன் வாழ விருப்பமில்லை என கூறிவிட்டாராம்.

Similar News

News November 22, 2025

தோனிக்கு அடுத்து ரிஷப் பண்ட்; எதுலன்னு பாருங்க..

image

தோனிக்கு அடுத்தபடியாக இந்திய டெஸ்ட் அணியை கேப்டனாக வழிநடத்தும் 2-வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரிஷப் பண்ட். காயம் காரணமாக சுப்மன் கில் விலகியதால் தெ.ஆ., அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு ரிஷப் பண்டுக்கு கிடைத்துள்ளது. 2008 முதல் 2014 வரை சுமார் 60 டெஸ்ட் போட்டிகளை தோனி வழிநடத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 22, 2025

இப்படியும் சில பிள்ளைகள்.. பெற்றோர் ஜாக்கிரதை!

image

ஆரணி அருகே அம்மாவின் நகைகளைத் திருடி தனது பெண் தோழிகளுக்கு செல்போன் உள்ளிட்ட ஆடம்பர பொருள்கள் வாங்கிக் கொடுத்து ஊர் சுற்றிவந்த +2 மாணவனின் செயலால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். வீட்டிலிருந்து 2.5 சவரன் நகை திருடப்பட்டதாக பெண் அளித்த புகாரை போலீசார் விசாரித்தபோது இது தெரியவந்துள்ளது. இந்நிலையில், பள்ளி செல்லும் பிள்ளைகளையும் பெற்றோர் கொஞ்சம் கண்காணிக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News November 22, 2025

BREAKING: கைதாகிறாரா சீமான்?

image

நெல்லையில் நாதகவின் மாடு மேய்க்கும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனால், தடையை மீறி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சீமான் தங்கியுள்ள ஹோட்டல் முன் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்திற்கு புறப்பட்டால், சீமானை கைது செய்ய போலீசார் ரெடியாக இருக்கின்றனர். ஏற்கெனவே, நள்ளிரவில் இருந்து நாதகவினர் கைது செய்யப்படுகின்றனர்.

error: Content is protected !!