News April 14, 2025
திருமணமான 4 மாதத்தில் குழந்தை… புலம்பும் கணவன்

தேனியில் திருமணமான 4 மாதத்தில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணுக்கு இது 3-வது திருமணமாம். திருமணத்தின்போதே கர்ப்பமாக இருந்த அவர், உண்மையை மறைத்துள்ளார். கணவனுக்கு விஷயம் தெரிந்ததை அடுத்து அந்த பெண் வீட்டில் இருந்து மாயமானார். கணவன் கொடுத்த புகாரில் அந்த பெண்ணை போலீசார் தேடி கண்டுபிடித்தனர். தற்போது கைக்குழந்தையுடன் இருக்கும் அவர் கணவனுடன் வாழ விருப்பமில்லை என கூறிவிட்டாராம்.
Similar News
News November 28, 2025
கடலூரில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து- ஆட்சியர்

கடலூர் முதுநகரில் உள்ள சரக்கு துறைமுகத்தின் மூலம் உற்பத்திப் பொருட்களை இலங்கைக்கு எளிதில் கொண்டும் செல்லும் வகையில் புதிய கப்பல் போக்குவரத்து விரைவில் துவங்கப்பட உள்ளது. மேலும், பொதுமக்கள் வந்துசெல்லும் பொருட்டு அவர்களுக்கு தேவையான உணவுக்கூடங்கள், ஓய்வறைகள், பொழுதுபோக்கு அம்சங்களுடன் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
News November 28, 2025
எயிட்ஸுக்கு தடுப்பூசி… விரைவில் இந்தியாவில்!

100% செயல்திறன் கொண்ட எயிட்ஸ்(HIV) தடுப்பூசி இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. USA-வின் கிலீட் சயன்சஸ் நிறுவனத்தின் இந்த தடுப்பூசி, FDA அங்கீகாரம் பெற்றுவிட்டது. இந்நிலையில் அதன் உரிமம் பெற்று இந்தியாவில் lenacapavir என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு விற்கப்படவுள்ளது. ஆண்டுக்கு 2 முறை இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் போதும். HIV தொற்று தாக்கும் ரிஸ்க் அதிகம் உள்ளவர்களுக்கு இது சிறந்த தீர்வாக அமையும்.
News November 28, 2025
இதெல்லாம் கூடிய சீக்கிரமே நடக்கப்போகுது..

தற்போது சாத்தியமில்லை எனக் கூறப்படும் இந்த விஷயங்கள் வருங்காலத்தில் சாத்தியமாகலாம். ➤ரூபாய் நோட்டுகள் பயன்பாடே இல்லாமல் போகலாம் ➤மனிதர்கள் 100 வயதை கடந்தும் வாழ்வர் ➤பலரின் நெருங்கிய நண்பனாக AI இருக்கும் ➤போனின் சார்ஜ் பல ஆண்டுகள் நீடிக்கலாம் ➤Mars-ல் மனிதர்கள் நடமாடலாம் ➤வீட்டுக்கு ஒரு ரோபோ இருக்கும் ➤வின்வெளியில் டூர் அடிப்பது சாதாரணமாகிவிடும். இதில் எதை பார்க்க நீங்கள் ஆவலுடன் இருக்கீங்க?


