News March 16, 2025

திருமணத்திற்கு முன் குழந்தை! தாய் பால் இல்லாமல் மரணம்

image

கோவை அரசு ஹாஸ்பிடலில் திருமணம் ஆகாத இளம் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. திருமணமாகாமல் குழந்தை பிறந்ததால், வெளியே தெரிந்தால் அவமானம் என நினைத்த அப்பெண், ஹாஸ்பிடல் காவலாளியை அணுகியுள்ளார். அவர், தனக்கு தெரிந்த தம்பதிக்கு தத்து கொடுக்குமாறு கூறியுள்ளார். அப்பெண்ணும் சம்மதித்து, அவரிடமே குழந்தையை கொடுத்துவிட்டு ஊருக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், அக்குழந்தை தாய்பால் இல்லாமல் உயிரிழந்துள்ளது.

Similar News

News March 16, 2025

பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல்: 90 வீரர்கள் பலி?

image

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை கடத்தி பெரிய தாக்குதலை நடத்திய BLA இயக்கத்தினர், பாக்., அரசுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சியை அளித்துள்ளனர். குவெட்டாவில் இருந்து டஃப்டான் நோக்கி சென்ற 7 ராணுவ வாகனங்கள் மீது தாங்கள் நடத்திய தாக்குதலில் 90 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக BLA அறிவித்துள்ளது. ஆனால், 7 வீரர்கள் மட்டுமே பலியானதாகவும், 21 பேர் காயமடைந்ததாகவும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.

News March 16, 2025

பிரபல கவிஞர் காலமானார்.. முர்மு, மோடி இரங்கல்

image

பிரபல ஒடியா கவிஞரும், ஒடிஷா EX CS-மான ரமாகாந்த் ரத் காலமானார். அவர் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்ட இரங்கலில், தனது மறக்க முடியாத படைப்புகளால் ரமாகாந்த் அகில இந்திய இலக்கியத்தை வளப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். மோடி வெளியிட்ட இரங்கலில், ரமாகாந்த் மறைவு மிகுந்த வேதனையை அளித்ததாக கூறியுள்ளார். ரமாகாந்த், சாஹித்ய அகாடமி, பத்ம பூஷண் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

News March 16, 2025

நான் அதுக்கு சரிபட்டு வரமாட்டேன்: வருண் சக்ரவர்த்தி

image

இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத சுழற்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி. டி20, ODI போட்டிகளில் கலக்கும் அவருக்கு, டெஸ்ட் அணியிலும் வாய்ப்பளிக்க வேண்டும் என குரல்கள் எழுகின்றன. ஆனால், டெஸ்ட் போட்டிகளுக்கு தனது பந்துவீச்சு பொருத்தமாக இருக்காது என வருண் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக 20 – 30 ஓவர்களை தன்னால் வீச முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!