News March 16, 2025
திருமணத்திற்கு முன் குழந்தை! தாய் பால் இல்லாமல் மரணம்

கோவை அரசு ஹாஸ்பிடலில் திருமணம் ஆகாத இளம் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. திருமணமாகாமல் குழந்தை பிறந்ததால், வெளியே தெரிந்தால் அவமானம் என நினைத்த அப்பெண், ஹாஸ்பிடல் காவலாளியை அணுகியுள்ளார். அவர், தனக்கு தெரிந்த தம்பதிக்கு தத்து கொடுக்குமாறு கூறியுள்ளார். அப்பெண்ணும் சம்மதித்து, அவரிடமே குழந்தையை கொடுத்துவிட்டு ஊருக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், அக்குழந்தை தாய்பால் இல்லாமல் உயிரிழந்துள்ளது.
Similar News
News March 17, 2025
CSK போட்டி.. ரசிகர்களுக்கு கட்டுப்பாடு

CSK – MI அணிகளுக்கிடையே மார்ச் 23ஆம் தேதி நடைபெறும் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் 19ஆம் தேதி விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட் விலை ₹1,700 முதல் ₹7,500 வரை. ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும்; பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக்கூடாது. கார், இருசக்கர வாகனங்களை நிறுத்துவோர் போட்டி தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னரே வர வேண்டும் என ரசிகர்களுக்கு கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளன.
News March 17, 2025
தமிழகத்தை செழிப்பாக்கும் ஆறுகள்! (1/2)

சம்மர் லீவுக்கு ஊட்டி, கொடைக்கானல் போகப் போறீங்களா. உங்க லிஸ்டுல 4 அழகான ஆறுகளையும் சேர்த்துக்கோங்க. முதல்ல பார்க்க, தமிழ்நாட்டோட ஜீவாதாரமான காவிரி ஆறு. மேற்குத் தொடர்ச்சி மலையில ஆரம்பிச்சு ஒகேனக்கல்ல சீறிப் பாய்ந்து வர்ற அழகே தனி. இரண்டாவதா, வைகை. மதுரைக்கு சித்திரைத் திருவிழா மட்டுமில்ல, வைகை ஆறோட வனப்பும் அழகு தான். மீனாட்சி அம்மனோட அருளால ஓடுற ஆறுனு இதுக்கு புராண பெருமையும் இருக்கு.
News March 17, 2025
தமிழகத்தை செழிப்பாக்கும் ஆறுகள்! (2/2)

நெல்லை, தூத்துக்குடி பகுதிகளை செழிப்பாக்கும் தாமிரபரணிக்கு தனி வரலாற்றுக் கதையே இருக்கு. இலக்கிய காலத்துல பொருநை என அழைக்கப்பட்ட தாமிரபரணி, பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில இருந்து தூத்துக்குடியோட சங்குமுகம் வரைக்கும் பாயுது. நீலகிரியில் இருந்து கோவை, ஈரோடு மாவட்டங்கள் வழியா பாய்ந்து வரும் ஆறு பவானி. வனப்பகுதி வழியா ஓடும் பவானியோட அழகே தனி. கடைசியாக காவிரியுடன் சங்கமித்துவிடும்.