News March 16, 2025

திருமணத்திற்கு முன் குழந்தை! தாய் பால் இல்லாமல் மரணம்

image

கோவை அரசு ஹாஸ்பிடலில் திருமணம் ஆகாத இளம் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. திருமணமாகாமல் குழந்தை பிறந்ததால், வெளியே தெரிந்தால் அவமானம் என நினைத்த அப்பெண், ஹாஸ்பிடல் காவலாளியை அணுகியுள்ளார். அவர், தனக்கு தெரிந்த தம்பதிக்கு தத்து கொடுக்குமாறு கூறியுள்ளார். அப்பெண்ணும் சம்மதித்து, அவரிடமே குழந்தையை கொடுத்துவிட்டு ஊருக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், அக்குழந்தை தாய்பால் இல்லாமல் உயிரிழந்துள்ளது.

Similar News

News March 16, 2025

ஆற்றில் கலந்த 5 கோடி லிட்டர் ஆசிட்

image

ஜாம்பியா ஆற்றில் 5 கோடி லிட்டர் ஆசிட் கலந்ததால் இயற்கை சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. சீன காப்பர் சுரங்கத்தில் இருந்து வெளியேறும் ஆசிட், கழிவை சேமிக்க தடுப்பணை இருந்தது. அது உடைந்து ஆசிட், கைபூ ஆறில் கலந்துள்ளது. இதனால் அந்த ஆற்று நீரில் மீன்கள் ஆயிரக்கணக்கில் செத்து மிதக்கின்றன. இந்த விவகாரத்தில் உதவும்படி நிபுணர்களுக்கு ஜாம்பியா அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.

News March 16, 2025

நடிகை ‘பிந்து கோஷ்’ காலமானார்

image

பல நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நடிகை பிந்து கோஷ், சென்னையில் காலமானார். 1982ஆம் ஆண்டு வெளியான ‘கோழி கூவுது’ படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்த இவர், தென்னிந்திய மொழிப் படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். விமலா என்ற இயற்பெயர் கொண்ட இவர், களத்தூர் கண்ணம்மா படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பின்னர், ரஜினி, சிவாஜி ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

News March 16, 2025

திமுகவுக்கு ஆதரவாக பேசிய பிரேமலதா

image

திமுக அரசை கடுமையாக எதிர்த்து வந்த பிரேமலதா, தற்போது ஆதரவு கருத்துகள் தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பட்ஜெட்டை வரவேற்பதாக கூறியிருக்கும் அவர், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசுடன் தேமுதிக இணைந்து போராடும் என்றும் கூறியுள்ளார். இதனால், அரசியலில் காற்றின் திசை திரும்புகிறதா என்று விமர்சகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!