News June 7, 2024
விராட் கோலியை பின்னுக்குத் தள்ளிய பாபர் அசாம்

அமெரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் புதிய சாதனை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில், 3 Four, 2 Six என விளாசி 44 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (4,067 ரன்கள்) குவித்த முதல் வீரர் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். மேலும், 4,038 ரன்களுடன் முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளினார்.
Similar News
News August 9, 2025
ஆகஸ்ட் 9: வரலாற்றில் இன்று

*உலக பழங்குடிகள் நாள். *1329 – இந்தியாவின் முதலாவது கிறித்தவ மறைமாவட்டம் கேரளத்தில் கொல்லம் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. யோர்தானஸ் என்ற பிரான்சியர் முதலாவது பேராயராக நியமிக்கப்பட்டார். *1892 – தாமஸ் ஆல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார். *1991 – விடுதலைப் புலிகளின் ஆனையிறவு இராணுவ முகாமின் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது. இந்த போரில் 604 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
News August 9, 2025
2026 T20 WC வரை இவர்கள்தான் ஆஸி., ஓபனிங் பேட்ஸ்மென்கள்

2026 டி20 உலகக்கோப்பை வரை மிட்செல் மார்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தான் தங்கள் அணியின் ஓபனிங் பேட்ஸ்மென்கள் என ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ஜோடி இன்னும் டி20 -களில் ஓபனிங் இறங்கி பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை என்றாலும், ஒருநாள் போட்டிகளில் தாங்கள் கெத்து என நிரூபித்துள்ளது. வெறும் 5 இன்னிங்ஸ்களில் 70.50 சராசரியுடன் 282 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை இந்த ஜோடி அடித்துள்ளது.
News August 9, 2025
AI பயன்படுத்துவதில் இந்தியா 2-ம் இடம்: சாம்

OpenAI-ன் நவீன AI மாடலான GPT-5 அறிமுகமாகியுள்ளது. இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மன், அமெரிக்காவிற்கு பிறகு இந்தியாவில் தான் தங்களது AI மாடலை அதிகம் பயன்படுத்துவதாக கூறியுள்ளார். மேலும், இந்தியாவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் ChatGPT-ஐ இன்னும் மலிவான விலைக்கு கொடுக்க முயற்சிப்பதாகவும், இதற்காக உள்நாட்டு பங்குதாரர்களுடன் வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.