News March 18, 2024

பாபநாசம் எம்எல்ஏ அலுவலகத்திற்கு சீல்!

image

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் எனவும், தமிழ்நாட்டிற்கு ஒரே கட்டமாக ஏப்.19ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் நேற்று(மார்ச் 17) பூட்டி சீல் வைக்கப்பட்டது.

Similar News

News January 17, 2026

தஞ்சை: 44 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

image

தஞ்சை மாவட்டத்தில் நிர்வாக காரணங்களுக்காக 44 காவல் நிலைய ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் ஜியாவுல் ஹக் உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனால் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த திடீர் பணியிட மாற்ற காவல்துறை வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

News January 17, 2026

தஞ்சை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு தஞ்சை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News January 17, 2026

தஞ்சை: 44 இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம்

image

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், நிர்வாக காரணங்களுக்காக 44 காவல் நிலைய ஆய்வாளர்கள் ஜன.14-ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் ஜியாவுல் ஹக், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஆய்வாளர்கள் தாங்கள் பணிபுரிந்த இடத்திலிருந்து வேறு பகுதிக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இந்த திடீர் பணியிட மாற்றத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

error: Content is protected !!