News May 19, 2024
திமுகவுக்கு மீண்டும் தேர்தல் பணி செய்ய பி.கே. ஒப்புதல்

அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு தேர்தல் பணி செய்தார். பிறகு எந்த அரசியல் கட்சிக்கும் இனி பணி செய்யப் போவதில்லை என அவர் அறிவித்தார். இந்நிலையில் அண்மையில் சென்னை வந்த அவரிடம் திமுக தரப்பில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பணியாற்ற கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், இதற்கு நீண்ட யோசனைக்கு பிறகு அவர் ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 7, 2026
புதுச்சேரியில் கம்யூனிஸ்ட் தனித்து போட்டி.. திமுக ஷாக்!

புதுச்சேரியில் 2 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளதால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது. TN-ல் நீண்ட இழுபறிக்கு பிறகு ஒருவழியாக கூட்டணி இறுதி வடிவம் பெற்றுள்ளது. ஆனாலும், புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் மோதல் போக்கு நீடிக்கிறது. இதனால், லாஸ்பேட்டை மற்றும் திருபுவனை தொகுதியில் தனித்து களம் காண்பதாக CPM அறிவித்துள்ளது. இது பற்றி உங்கள் கருத்து?
News March 7, 2026
இந்தியாவை போட்டியாளராக மாற விடமாட்டோம்: அமெரிக்கா

சீனாவை போல இந்தியாவை எங்களது போட்டியாளராக மாற விடமாட்டோம் என டெல்லியில் நடந்த மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவுக்கு சந்தையை திறந்து விட்டது மிகப்பெரிய தவறு; அதை நாங்கள் மீண்டும் செய்ய மாட்டோம் என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் செய்யும் எந்த ஒரு ஒப்பந்தமும் அமெரிக்க மக்களின் நலனுக்கானது எனவும் கூறியுள்ளார்.
News March 7, 2026
புஸ்ஸி ஆனந்தை ஓரங்கட்டுகிறாரா விஜய்?

ஆரம்பத்தில் தவெகவில் All in All-ஆக வலம் வந்தவர் தான் புஸ்ஸி ஆனந்த். இடையில் இவர்மீது ஜானுக்கும், ஆதவுக்கும் அதிருப்தி அதிகரித்ததாக பேசப்பட்டது. எனவே ஆனந்த் குறித்து இருவரும் விஜய்யிடம் பலமுறை புகார் வைத்தனராம். போதாத குறைக்கு ஆனந்தின் மேடைபேச்சுகளும் ஆன்லைனில் கேலிக்கு உள்ளானதால் விஜய் மொத்தமாக ஆனந்தை ஒதுக்கிவைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால்தான் அவர் தவெக மேடைகளில் பேசுவதில்லை என்கின்றனர்.


