News October 27, 2024
7 மணிக்குள் மாநாட்டை முடிக்க அஸ்ரா கார்க் அறிவுறுத்தல்

தவெக மாநாட்டை இரவு 7 மணிக்குள் முடிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொண்டர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டும், வாகனங்களில் செல்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மாநாடு முன்னரே தொடங்கியுள்ளதால் 7 மணிக்குள்ளாகவே மாநாடு முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News July 9, 2025
நாடு முழுவதும் நடந்த ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம்

நாடு முழுவதும் இன்று 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போக்குவரத்து, பள்ளிகள், வங்கிகள் என அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டதால் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. தெலங்கானாவில் பைக் பேரணி, கேரளாவில் பேருந்தை மறித்து போராட்டம், மும்பையில் வங்கி முன் போராட்டம், கர்நாடகாவில் பேரணி உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன.
News July 9, 2025
PM KISAN: வங்கி கணக்கில் ₹2000 எப்போது?

நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் ஒரே எதிர்பார்ப்பு PM KISAN திட்ட தவணைத் தொகை எப்போது கிடைக்கும் என்பதுதான். ஜூனில் பணம் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியான நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், ஜூலை 18 அன்று பிஹாரின் மோட்டிஹரி பகுதியில் PM மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியில், பண வரவு குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
News July 9, 2025
அடுத்த தலைமுறைக்கான திட்டங்கள்: உதயநிதி பெருமிதம்

அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டு CM திட்டங்களை கொண்டு வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூரில் ₹40 கோடியில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்த பின் இவ்வாறு கூறியுள்ளார். அதேபோல் அதிமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயலிழந்து காணப்பட்டதாக குற்றம்சாட்டிய அவர் திமுக ஆட்சியில் அவை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.