News March 19, 2025

ரூ.3,500 கோடி பெற்ற அயோத்தி கோயில் அறக்கட்டளை

image

அயோத்தி ராமர் கோயில் 2024இல் மோடியால் திறக்கப்பட்டது. எனினும், அங்கு விடுபட்ட சில பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 96% பணிகள் முடிவடைந்த நிலையில், எஞ்சிய பணிகளை ஏப்ரல் 30க்குள் முடிக்க கோயில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இதுவரை கட்டுமானத்திற்கு ரூ.3,000 கோடி நன்கொடை பெற்ற அறக்கட்டளை, 5 ஆண்டுகளில் ரூ.2,150 கோடியை செலவிட்டுள்ளது. அத்துடன் அரசுக்கு ரூ.396 கோடி வரியையும் கட்டியுள்ளது.

Similar News

News July 7, 2025

இபிஎஸ் சுற்றுப்பயணம்.. போட்டோ எடுக்க தடை!

image

2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இந்த பயணத்தின்போது, இபிஎஸ் உடன் புகைப்படம் எடுப்பவர்கள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், குற்றப் பின்னணி உள்ளவர்கள் யாரையும் அவருடன் போட்டோ எடுக்க விட வேண்டாம் என உத்தரவு பறந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை தவிர்க்க அதிமுக இந்த புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளது.

News July 7, 2025

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விஜய்..!

image

விஜய் செயற்குழு கூட்டத்தை நடத்திய பிறகு ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதி என்ற விமர்சனத்தை தகர்த்துள்ளார்.இது ஒருபுறமிருக்க கட்சியில் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்த நிர்வாகிகள் நியமனத்தை தீவிரப்படுத்தியுள்ளார் விஜய். தவெகவுக்கு தற்போது 120 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில், மாநகரம், நகரம், ஒன்றிய அளவிலான நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும் விரைவில் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் உள்ளன.

News July 7, 2025

வீட்டில் வேல் வைத்து வழிபடலாமா?

image

‘வேலுண்டு வினையில்லை’ என்பதிலேயே இதற்கான விடை தெரிந்துவிடும். திருச்செந்தூர் ராஜகோபுரத்தில் திருநீறு பூசப்பட்டு, அதற்கு மேல் செம்பு வர்ணத்தில் ஒரு வேலும் வைக்கப்பட்டது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இப்படிப்பட்ட முருகனின் ஆயுதமான வேலினை வீட்டில் வைத்து வழிபட்டால் கர்ம வினைகள் அகற்றப்படும். வேலுக்கே உரிய மூலமந்திரத்தை நா மணக்க மணக்க கூற வாழ்வை செழிப்புறச் செய்வான் வேலாயுத நாயகன்.

error: Content is protected !!