News March 17, 2024
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள்

திருப்பூர், உடுமலை அனைத்து மகளிர் காவல் காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களிடையே
குழந்தை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு என்ற கருத்து அடிப்படையில் தனியார் திருமண மண்டபத்தில் திறனறி போட்டிகள் இன்று நடைபெற்றன. இப்போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உடுமலை டிஎஸ்பி சுகுமாரன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
Similar News
News January 9, 2026
திருப்பூரில் அதிரடி கைது!

திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டீச்சர்ஸ் காலனி பகுதியில், வடக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த, உதயகுமார் என்பவரை சோதனை செய்தபோது, அவரிடம் குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து உதயகுமார் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1.9 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
News January 8, 2026
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (ஜன.08) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.
News January 8, 2026
திருப்பூர் மக்களே: இத தெரிஞ்சு வச்சுக்கோங்க!

1).திருப்பூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077. 2).மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 0421-2971137/38/40. 3).காவல் கட்டுப்பாட்டு அறை 100. 4).விபத்து அவசர வாகன உதவி 102. 5).குழந்தைகள் பாதுகாப்பு 1098. 6).பெண்கள் உதவி எண் 181. 7).பேரிடர் கால உதவி1077. 8).கிராம ஊராட்சி குறை தீர் கட்டுப்பாட்டு அறை 0421 – 2971163, 1800 425 7023. 9).சைபர் க்ரைம் உதவி எண்1930. மிக முக்கிய எண்களான இவற்றை SHARE பண்ணுங்க.


