News April 27, 2025
Live செய்வதை தவிருங்கள்.. ஊடகங்களுக்கு அரசு அட்வைஸ்

நாட்டின் நலனுக்காக, அனைத்து ஊடகங்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான செய்தியை வெளியிடும்போது பொறுப்புடன் செயல்பட வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. மேலும், பாதுகாப்பு படைகளின் நடமாட்டத்தை நேரலை செய்வதை தவிர்க்குமாறும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News November 3, 2025
மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைக்கு ஸ்பெஷல் பரிசு

மகளிர் கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்ற நிகழ்வை நாடே கொண்டாடி வருகிறது. இந்நிலையில், இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றிய மத்தியப் பிரதேச வீராங்கனை கிராந்தி கௌடுக்கு ₹1 கோடி பரிசாக வழங்கப்படும் என அம்மாநில CM மோகன் யாதவ் அறிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் கிராமத்தில் பிறந்து வீராங்கனை கிராந்தி, இந்தியாவுக்கே பெருமை தேடி தந்திருப்பதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.
News November 3, 2025
BREAKING: நாடு முழுவதும் ₹3,000 ஆக உயர்கிறது

பிஎப் உச்சவரம்பை EPFO உயர்த்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பிஎப் பிடிக்க உள்ள சம்பள உச்ச வரம்பை ₹15,000-லிருந்து ₹25,000 ஆக உயர்த்தவும், வரும் டிசம்பர் / ஜனவரி முதல் இது அமலுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் மணி கன்ட்ரோல் செய்தி வெளியிட்டுள்ளது. அப்படி நடந்தால், தற்போது ₹1,800 (12%) ஆகவுள்ள அதிகபட்ச பிஎப் பிடித்தம், ₹3,000 ஆக உயரும். இதனால் பணியாளரின் பிஎப் தொகை அதிகரிக்கும்.
News November 3, 2025
‘இபிஎஸ்-க்கு நோபல் பரிசு’

தமிழகத்தில் மன்னராட்சிக்கு முடிவு கட்டி, மக்களாட்சியை கொண்டுவர EPS முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறார் என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். ஜனநாயகத்தை வளர்க்க அவர் பாடுபட்டு வருகிறார் என்றும் இதற்காக அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் எனவும் அவர் சிபாரிசு செய்துள்ளார். முன்னதாக, துரோகத்துக்கான நோபல் பரிசு EPS-க்கு கொடுக்கவேண்டும் என செங்கோட்டையன் கூறியிருந்தார். இதை பற்றி உங்கள் கருத்து?


