News June 10, 2024
2 ஆயிரம் எருமைகளைத் தத்தெடுத்த ஆவின்

தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழ் எருமைகளை தத்தெடுக்க ₹8.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், கொழுப்பு சத்து நிறைந்த பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக சேலம், ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள பால் பண்ணைகளில் இருந்து 2 ஆயிரம் எருமை கன்றுகளை தத்தெடுத்துள்ளது ஆவின் நிறுவனம். தமிழகத்தில் எருமைகளின் எண்ணிக்கை குறைந்த நிலையில், இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 3, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News September 3, 2025
ராமதாஸ், அன்புமணி சேர வேண்டும்: காங் தலைவர்

ராமதாஸும், அன்புமணியும் ஒன்று சேர வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். பூந்தமல்லியில் பேசிய அவர், ஏராளமான போராட்டங்களை நடத்தி பல்வேறு மருத்துவர்களை உருவாக்கியவர் ராமதாஸ் என குறிப்பிட்டார். எந்தக் கூட்டணியில் இருந்தாலும் இருவரும் தங்கள் சார்ந்த சமூக மக்களின் நலனுக்காக, ஒன்றிணைய வேண்டும் என்பதே தனது விருப்பம் என திருநாவுக்கரசர் கூறினார்.
News September 3, 2025
3-ம் உலகப்போர்? ஆர்டர் போட்ட ஃபிரான்ஸ்

போர் சூழலுக்கு ஏற்றவாறு 2026-க்குள் தயாராகும்படி ஹாஸ்பிடல்களுக்கு ஃபிரான்ஸ் அரசு அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யா – NATO நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரிக்கும் நிலையில், அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 10 -180 நாள்களுக்குள் காயம்பட்ட வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க தயாராக அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யா – NATO நாடுகளுக்கு இடையே போர் மூண்டால், அது 3-ம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.