News August 16, 2024
அவந்தா குழும ₹678 கோடி சொத்துக்கள் முடக்கம்

வங்கி மோசடி, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அவந்தா குழும ₹678 கோடி சொத்துக்களை ED முடக்கியது. தொழிலதிபர் கவுதம் தாபரின் (படத்தில் இருப்பவர்) அவந்தா குழுமம், SBI உள்ளிட்ட வங்கிகளிடம் ₹2,400 கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாததோடு, ₹1,307 கோடியை வேறு நிறுவனத்துக்கு திருப்பி விட்டதை ED கண்டுபிடித்தது. இதுதொடர்பாக தாபர் மீது வழக்குப்பதிந்து ₹14 கோடி சொத்தை ஏற்கெனவே ED முடக்கியது.
Similar News
News November 27, 2025
இந்த அறிகுறிகள் இருக்கா? உடனே செக் பண்ணுங்க

மாரடைப்பு என்பது ஒரே நாளில் வருவதல்ல, மாறாக பல ஆரம்பகட்ட அறிகுறிகளை காட்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர். மார்பில் வலி, மூச்சுவிடுவதில் சிரமம், கை, முதுகு, வயிற்றுப்பகுதியில் நாள்பட்ட வலி அல்லது சிரமம், அளவுக்கு அதிகமாக வேர்வை வெளியாவது, தொடர் வாந்தி ஆகியவையே அந்த அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் ஹாஸ்பிடலுக்கு செல்லுங்கள் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE.
News November 27, 2025
தங்கம் விலை தாறுமாறாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $20.51 உயர்ந்து, $4,162.94-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டு வருகிறது. நேற்று (நவ.26) மட்டும் சவரனுக்கு ₹640 உயர்ந்து, ₹94,400-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
News November 27, 2025
ஈரோட்டில் மக்கள் சந்திப்பை நடத்துகிறாரா விஜய்?

MLA பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், இன்று தவெகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், KAS-ன் சொந்த மாவட்டமான ஈரோட்டில் அடுத்த மக்கள் சந்திப்பை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோபியில், நவ.30-ல் EPS பரப்புரை மேற்கொள்ளவுள்ள நிலையில், விஜய்யும் கொங்கு மண்ணில் கால் பதிக்கவுள்ளார். இதற்கான அனுமதி வாங்கும் பணிகளை தவெகவினர் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


