News March 28, 2025
அரசு பஸ்களில் தானியங்கி கதவுகள்: அமைச்சர் உறுதி

சட்டப்பேரவையில் நேற்று ADMK உறுப்பினர் ஜெயக்குமார், படிக்கட்டுகளில் பயணித்து பள்ளி மாணவர்கள் உயிரிழப்பதைத் தடுக்க பஸ்களில் தானியங்கி கதவுகள் அமைக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சிவசங்கர், சென்னையில் உள்ள பஸ்களுக்கு தானியங்கி கதவுகள் அமைக்கும் பணி முடிந்துள்ளதாகவும், தமிழகத்தின் மற்றப் பகுதிகளிலும் பஸ்களில் படிப்படியாக தானியங்கி கதவுகள் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
Similar News
News November 21, 2025
இன்று முதல் அமலுக்கு வந்தது… 4 புதிய தொழிலாளர் சட்டங்கள்

மத்திய அரசு உருவாக்கியுள்ள 4 தொழிலாளர் நலச் சட்டங்கள் இன்று அமலுக்கு வந்துள்ளன. தற்போதுள்ள பணிச்சூழல் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப, ஏற்கெனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களும் மாற்றங்களும் செய்யப்பட்டு ஊதியச் சட்டம்(2019), தொழில் உறவுகள் சட்டம்(2020), சமூக பாதுகாப்பு சட்டம்(2020), பணியிட பாதுகாப்பு, உடல்நலம் & பணிச்சூழல் சட்டம்(2020) ஆகிய நான்கு சட்ட தொகுப்புகளாக உருவாக்கப்பட்டுள்ளன.
News November 21, 2025
உதடு வெடிப்பை தடுக்க உதவும் வழிகள்

குளிர்காலத்தில் உதடு வெடிப்பு, நமக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். அந்த நேரத்தில், சாப்பிடுவது கூட கஷ்டமாக இருக்கும். அதை எதிர்கொள்ள, எளிமையான வழிகள் உள்ளன. அவை என்னென்ன வழிகள் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News November 21, 2025
இவர்களுக்கு ₹1,000 மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைபவர்களின் லிஸ்ட் தயாராகி வருவதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தேர்வு செய்யப்படும் குடும்பத் தலைவிகளுக்கு, செல்போன் மூலம் டிசம்பர் முதல் வாரத்தில் குறுஞ்செய்தி அனுப்பப்படும். டிச.15-ல் அவர்களது வங்கிக் கணக்கில் ₹1,000 வரவு வைக்கப்படும். குறுஞ்செய்தி வராதவர்களுக்கு பணம் கிடைக்காது. அரசு அடுத்த அறிவிப்பு வெளியிடும் வரை காத்திருக்க வேண்டும்.


