News March 28, 2025
அரசு பஸ்களில் தானியங்கி கதவுகள்: அமைச்சர் உறுதி

சட்டப்பேரவையில் நேற்று ADMK உறுப்பினர் ஜெயக்குமார், படிக்கட்டுகளில் பயணித்து பள்ளி மாணவர்கள் உயிரிழப்பதைத் தடுக்க பஸ்களில் தானியங்கி கதவுகள் அமைக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சிவசங்கர், சென்னையில் உள்ள பஸ்களுக்கு தானியங்கி கதவுகள் அமைக்கும் பணி முடிந்துள்ளதாகவும், தமிழகத்தின் மற்றப் பகுதிகளிலும் பஸ்களில் படிப்படியாக தானியங்கி கதவுகள் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
Similar News
News December 6, 2025
சாலை விபத்துகளில் ஒரே ஆண்டில் 1.77 லட்சம் பேர் பலி

நாடு முழுவதும் 2024-ல் மட்டும் சாலை விபத்துகளால் 1.77 லட்சம் பேர் பலியாகி இருப்பதாக பார்லிமெண்டில் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சராசரியாக ஒவ்வொரு நாளும் 485 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகம். அதேநேரத்தில், சாலை போக்குவரத்து இறப்புகளின் எண்ணிக்கையை 2030-க்குள் பாதியாக குறைக்க இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாகவும் கட்கரி தெரிவித்துள்ளார். சாலை விதிகளை மதித்து, விலை மதிப்பற்ற உயிர்களை காப்போம்!
News December 6, 2025
ஒரே வாரத்தில் 100 டன் வெள்ளி விற்பனை!

வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மக்கள் வீட்டில் இருக்கும் பழைய வெள்ளி பொருள்களை விற்று வருகின்றனர். IBJA தரவுகளின் படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 100 டன் வெள்ளி விற்பனைக்காக சந்தைக்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது. பொதுவாக, ஒரு மாதத்திற்கு 10-15 டன் தான் விற்பனைக்கு வரும். தற்போது ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹1.90 லட்சத்தை தொட்டதால், இந்த சூழலை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
News December 6, 2025
திருப்பரங்குன்றம் விவகாரம்.. பவன் கல்யாண் காட்டம்

ஹிந்துக்கள் தங்கள் நம்பிக்கையை பின்பற்றக் கூட, நீதிமன்றத்தை நாட வேண்டி இருப்பதாக, திருப்பரங்குன்றம் விவகாரத்தை குறிப்பிட்டு பவன் கல்யாண் வேதனை தெரிவித்துள்ளார். ஹிந்து மரபுகளை கேலி செய்வது சில குழுக்களுக்கு வழக்கமாகிவிட்டது. பிற மத நிகழ்வுகளை அவர்களால் கேலி செய்ய முடியுமா? சாதி, மொழி பிரிவினைகளை கடந்து ஹிந்துக்கள் ஒன்றிணையும் வரையில், இந்த அவலம் தொடரும் என்றும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.


