News March 28, 2025

அரசு பஸ்களில் தானியங்கி கதவுகள்: அமைச்சர் உறுதி

image

சட்டப்பேரவையில் நேற்று ADMK உறுப்பினர் ஜெயக்குமார், படிக்கட்டுகளில் பயணித்து பள்ளி மாணவர்கள் உயிரிழப்பதைத் தடுக்க பஸ்களில் தானியங்கி கதவுகள் அமைக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சிவசங்கர், சென்னையில் உள்ள பஸ்களுக்கு தானியங்கி கதவுகள் அமைக்கும் பணி முடிந்துள்ளதாகவும், தமிழகத்தின் மற்றப் பகுதிகளிலும் பஸ்களில் படிப்படியாக தானியங்கி கதவுகள் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Similar News

News December 4, 2025

அரியலூர் மாவட்டத்தின் மழையின் அளவு

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று மிதமான மழை பெய்தது. இதனை ஒட்டி அரியலூரில் 6.2 மி.மீ, திருமானூரில் 8.2 மி.மீ, ஜெயங்கொண்டத்தில் 16.4 மி.மீ செந்துறையில் 5.2 மி.மீட்டரும், ஆண்டிமடத்தில் 2.8 மி.மீட்டரும், சித்தமல்லி டேமில் 4 மி.மீட்டரும், குருவாடியில் 13 மிமீட்டரும், தா.பழூரில் 3 மி.மீ மழை பெய்துள்ளது. அதன்படி மாவட்டத்தின் மொத்தமாக 58.8 மில்லிமீட்டர் மழை பதிவாதியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 4, 2025

தங்கம் விலை இப்படி மாறியிருக்கே!

image

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $22 உயர்ந்து, $4,211.56-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டு வருகிறது. நேற்று (டிச.4) மட்டும் சவரனுக்கு ₹160 உயர்ந்து, ₹96,480-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

News December 4, 2025

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் BJP செய்யும் சூழ்ச்சி: காங்., MP

image

பாஜகவின் வேலையே மதங்களுக்கு இடையே சூழ்ச்சி செய்வதுதான் என MP சசிகாந்த் செந்தில் விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜக சூழ்ச்சிகளுக்கு TN இடமளிக்கக்கூடாது என்ற அவர், இங்கிருக்கும் கலாசாரம் வேறு என்பதை நாம் அவர்களுக்கு உணர்த்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மையை கொண்டாடும் கலாசாரமாக தமிழ் கலாசாரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!