News March 29, 2024

ஆட்டோ டிரைவருக்கு லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு

image

கேரள ஆட்டோ டிரைவருக்கு லாட்டரியில் ரூ.10 கோடி பரிசுத் தொகை விழுந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கேரள அரசின் கோடைகால பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ.10 கோடி அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான குலுக்கலில் 308797 என்ற எண் கொண்ட லாட்டரிக்கு முதல் பரிசு கிடைத்தது. அந்த லாட்டரியை கண்ணூர் மாவட்டம் கர்திகாபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நாசர் வாங்கியது தெரிய வந்துள்ளது.

Similar News

News December 9, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவர்கள், பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். வருகிற டிச.31ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328-296565 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 9, 2025

நீதிபதிகளை திமுக பயமுறுத்த நினைக்கிறது: அண்ணாமலை

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி G.R.சுவாமிநாதன், இந்திய இறையாண்மைக்கு எதிராக தீர்ப்பு வழங்கவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். நீதிபதியை பதவிநீக்கம் செய்ய திமுக கூட்டணி MP-க்கள் நாடாளுமன்றத்தில் கையெழுத்து வாங்கி வருகின்றனர். அரசுக்கு ஒரு தீர்ப்பு பிடிக்கவில்லை என்பதற்காக நீதிபதியை பதவிநீக்கம் செய்வோம் என்றால், அது மற்ற நீதிபதிகளை பயமுறுத்துவதாகத்தான் அர்த்தம் என்றும் அவர் கூறியுள்ளார்.

News December 9, 2025

நடிகை வன்கொடுமை வழக்கு: பார்வதி அதிருப்தி

image

<<18502482>>நடிகை பாலியல் வன்கொடுமை<<>> வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதை, நடிகை பார்வதி காட்டமாக வெளிப்படுத்தியுள்ளார். எது நீதி? கவனமாக உருவாக்கப்பட்ட திரைக்கதை தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது; இதை நாம் கவனித்து கொண்டிருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்ததில் பார்வதியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!