India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனுஷை தொடர்ந்து, நடிகர் ரவிமோகனும் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பராசக்தி, கராத்தே பாபு உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும், இயக்குநர் பணியை தொடங்க உள்ளார். யோகி பாபுவை ஹீரோவாக வைத்து தான் இயக்க உள்ளாராம். இதனை யோகி பாபுவே உறுதிப்படுத்தியுள்ளார். இப்படி, நடிகர்கள் எல்லாம் இயக்குநர் அவதாரம் எடுத்தால், நாங்க எங்க போறது என இயக்குநர்கள் குமுறுகின்றனர்.
WPL 2025ல் இன்று மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே எலிமினேட்டர் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இத்தொடரில் இதுவரை குஜராத் அணிக்கு எதிராக MI தோல்வியடைந்தது இல்லை. அதனால், இன்றைய போட்டி சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாமல் இருக்கும். மறுபுறம், டெல்லி அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு சென்றுவிட்டது. இறுதிப் போட்டி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
Manicure எனப்படும் கைவிரல் நக ஒப்பனையை தொடர்ந்து செய்து வந்த பெண்ணின் விரல்களில், தோல் கேன்சருக்கான செல்கள் உருவானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரல்களில் கோடு போன்று திடீரென உருவானதை கவனித்த அப்பெண், டாக்டரை அணுகியுள்ளார். அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், ‘0 melanoma’ என்ற தொடக்க நிலை தோல் புற்றுநோய்க்கான பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. Manicure பண்ற உங்க தோழிகளுக்கு இதை SHARE பண்ணுங்க.
வார விடுமுறையை முன்னிட்டு, 966 சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகம் இயக்கவுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 14ஆம் தேதி 270 பஸ்கள், 15ஆம் தேதி 275 பஸ்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. கோயம்பேட்டில் இருந்து 14, 15ஆம் தேதிகளில் தலா 51 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 14, 15ஆம் தேதிகளில் தலா 20 பஸ்களும் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து கழகம் குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதும் SBI வங்கியின் <<15739560>>UPI சேவைகள்<<>> முடங்கியதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து விளக்கமளித்த எஸ்பிஐ, UPI பரிவர்த்தனைகளில் தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொண்டுள்ளதால், வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனை தோல்வியடைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. இதனை சரிசெய்ய முயற்சித்து வருவதாகவும், வாடிக்கையாளர்கள் UPI LITEஐ பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முக்கிய முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. ODI WC-2027 வரை விளையாட முடிவு செய்துள்ள அவர், உடற்தகுதியில் கவனம் செலுத்த உள்ளார். இதற்காக இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும், அவரிடம் பேட்டிங் மற்றும் ஃபிட்னஸ் டிப்ஸ்களை பெறுவார் என்றும் கூறப்படுகிறது. அபிஷேக் IPLல், தினேஷ் கார்த்திக்கிற்கு வழிகாட்டியாக இருந்தார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: தீவினையச்சம் ▶குறள் எண்: 205 ▶குறள்: இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து. ▶பொருள்: யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.
ரூ.4,386 கோடி மோசடி தடுக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் சஞ்சய் பண்டி குமார் தாக்கல் செய்துள்ள பதிலில், மோசடி குறித்து தொலைபேசி மூலம் 13.36 லட்சம் புகார்கள் சைபர் க்ரைம் தடுப்பு மையத்திற்கு வந்ததாக கூறப்பட்டுள்ளது. மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 7.81 லட்சம் சிம்கார்டுகளின் சேவை துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (மார்ச் 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
பாகிஸ்தான் பயணிகள் ரயில் கடத்தல் சம்பவத்தில், சிக்கிய பணயக்கைதிகள் அனைவரையும் அந்நாட்டு ராணுவம் மீட்டுள்ளது. அதன்படி, 346 பணயக்கைதிகள் மீட்கப்பட்டதாகவும், 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இந்த நடவடிக்கையின் போது கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் 28 பாக்., ராணுவ வீரர்களும், 21 பணயக்கைதிகளும் உயிரிழந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.