India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶மார்ச்- 13 ▶மாசி – 29 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 01:30 PM – 02:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM ▶ராகு காலம்: 01:30 PM – 03:00 PM ▶எமகண்டம்: 06:00 AM – 07:30 AM ▶குளிகை: 09:00 AM- 10:30 AM ▶திதி: பெளர்ணமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶சந்திராஷ்டமம்: திருவோணம் ▶நட்சத்திரம் : பூரம்.
கம்பீரின் கவனம் முழுக்க 2026 டி20 WC, 2027 WTC, 2027 ODI WC தொடர்களில் தான் உள்ளதாம். இதற்கான அணிகளை தேர்வு செய்யும் மும்முரத்தில் அவர் உள்ளார். SKY தலைமையிலான தற்போதைய டி20 அணிதான், 2026 டி20 WCக்கும். வயது, ஃபிட்னஸ் காரணமாக ரோஹித் 2027 ODI WCயில் கேப்டனாக செயல்படுவது கஷ்டம். எனவே BCCI தரப்பில் அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படலாம். டெஸ்ட் அணி வீரர்களை தேர்வு செய்வதுதான் சவாலாக உள்ளதாம்.
தவெக இறுதிக்கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை விஜய் இன்று வெளியிடுகிறார். நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாக பிரித்துள்ள அவர், அதற்கு செயலாளர்களையும் அறிவித்து வருகிறார். ஏற்கெனவே, 95 மா.செ.கள் பட்டியல் வெளியான நிலையில், மீதமுள்ள மாவட்ட பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணியளவில் அந்த மாவட்ட பொறுப்பாளர்களை சந்தித்து, அவர் பொறுப்புகளை வழங்குவார் எனத் தெரிகிறது.
போஸ்ட் ஆபீஸ்களில் E-KYC மூலம் சேமிப்பு கணக்கு தொடங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காகித பயன்பாட்டை குறைக்க ஆதார் எண்ணை தெரிவித்து, கைவிரல் ரேகையை பதிவு செய்ததும் கணக்கு தொடங்கப்பட்டு விடும். இனி ஆவண நகல்களை காகிதமாக கொண்டு செல்ல வேண்டாம். முதலில் 20 தலைமை போஸ்ட் ஆபீஸ்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிறகு அனைத்து போஸ்ட் ஆபீஸ்களிலும் கொண்டு வரப்படவுள்ளது.
இன்று (மார்ச் 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
சிறு தவறு செய்ததற்காக அமெரிக்காவை சேர்ந்த டேனியல் (47) என்பவன், தனது 8 வயது வளர்ப்பு மகளான ஜெய்லினை, ‘ட்ராம்ப்போலைன்’ எனும் குதித்து விளையாடும் இடத்துக்கு அழைத்து சென்றிருக்கிறான். அங்கு 110 டிகிரி வெயிலில், ஜெய்லினை குதிக்க சொல்லி இருக்கிறான். தண்ணீர் கூட கொடுக்காமல் குதிக்கச் செய்ததால், ஜெய்லின் சுருண்டு விழுந்து இறந்திருக்கிறாள். இந்தக் கொடூரனுக்கு 18 ஆண்டு சிறைத்தண்டனை கிடைத்துள்ளது.
தனது ஐஸ்க்ரீமை சாப்பிட்ட தாய்க்கு எதிராக, 4 வயது சிறுவன் போலீசுக்கு போன் செய்த சுவாரஸ்ய சம்பவம் USAவில் நடந்துள்ளது. எனது மம்மி ரொம்ப மோசம், அவரை அரெஸ்ட் செய்ய வேண்டும் என அந்த சிறுவன் புகாரளித்துள்ளான். வீட்டிற்கு வந்து விசாரித்த போலீசார், உண்மை தெரிந்ததும், வேறு ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்து சிறுவனை சமாதானம் செய்துள்ளனர். மேலும், உதவிக்கு போலீஸை அழைக்க தெரிந்ததற்காக சிறுவனை பாராட்டினர்.
பிஹார் CM நிதிஷ்குமார் பாங்கு குடித்துவிட்டு சட்டப்பேரவை வருவதாக ஆர்ஜேடி மூத்த தலைவர் ராப்ரி தேவி குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமார் நிலையானவராக இல்லை என்றும், அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் சட்டப்பேரவையில் பெண் எம்எல்ஏக்களை நிதிஷ், தேஜ கூட்டணி கட்சியினர் அவமதிப்பதாக கூறி, ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாட்டில் அமையவிருக்கும் தொழிற்சாலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து EV கார்களை தயாரிக்க இருந்த திட்டத்தை ஜாக்குவார் லேண்ட் ரோவர் கைவிட்டுள்ளது. உள்ளூரில் EV பாகங்களுக்கான சரியான விலை, தரம் தொடர்பான கவலைகள் எழுந்ததால், இத்திட்டம் கடந்த 2 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், EVஐ விட Hybrid கார்களுக்கான தேவை அதிகரித்து வருவதும் இம்முடிவுக்கு ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.
பெண்கள் திருமணத்திற்கு ரூ.1 லட்சம் அளிக்கப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. ஜான்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், முக்யமந்திரி சமுஹிக் விவாக் யோஜனா திட்டத்தின்கீழ் மாநிலத்தில் திருமணம் செய்யும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தலா ரூ.1 லட்சம் அளிக்கப்படும் என கூறினார். படிப்பில் சிறந்த மாணவிகளுக்கு ஸ்கூட்டிகள் வழங்கப்படும் திட்டத்தையும் அவர் அறிவித்தார்.
Sorry, no posts matched your criteria.