India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1998 முதல் 2025 வரையில், 9 முறை சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்றுள்ளது. இதில், அதிக முறை கோப்பையை வென்றது இந்தியா. 2013, 2025 ஆகிய ஆண்டுகளில் இந்தியா வென்றுள்ளது. 2002ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் மழை காரணமாக இந்தியா – இலங்கைக்கு கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது. இதற்கு அடுத்த இடத்தில், ஆஸ்திரேலியா 2 முறை வென்றுள்ளது. SA, NZ, WI, PAK ஆகிய அணிகள் தலா ஒருமுறை வென்றுள்ளன.
அஜித் நடிப்பில் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது குட் பேட் அக்லி திரைப்படம். அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ‘OG சம்பவம், கொளுத்துறோம் மாமே’ என குறிப்பிட்டு படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இதனால், விரைவில் பாடல் வெளியாகும் என அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஏன் குறைவான திரைப்படங்களில் மட்டும் நடிக்கிறீர்கள் என பேட்டியொன்றில் நெறியாளர் கேட்ட கேள்விக்கு நடிகை ஜோதிகா பதிலளித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் ஆண்களை முன்னிலைப்படுத்தும் படங்கள்தான் பெரும்பாலும் வருகின்றன. அதில், பெண்கள் நடனமாடவும், ஆண்களை புகழவுமே பயன்படுத்தப்படுகிறார்கள். அதனால்தான், நான் மாற்றுப்பாதையை தேர்ந்தெடுத்தேன். நிறைய படங்களுக்கு நோ சொல்லியிருக்கிறேன் என ஜோதிகா கூறினார்.
ஏழை மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த தலைசிறந்த நரம்பியல் மருத்துவர் வேல் முருகேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார். சென்னையில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு உதயநிதி நேரில் அஞ்சலி செலுத்தினார். இதன்பின் பேசிய அவர், கருணாநிதி, ஸ்டாலின் மீது பற்றுக் கொண்டிருந்த வேல் முருகேந்திரன், என் மீது பாசமும் – அக்கறையும் கொண்டிருந்தார். அவரது மறைவு பெரும் பேரிழப்பு என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
CT ஃபைனலில் 252 ரன்கள் இலக்கை எட்ட இந்திய அணி போராடி வருகிறது. அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 76 ரன்னில் அவுட் ஆக, நிதானமாக விளையாடி ஸ்ரேயஸ் ஐயர் ரன் குவிப்பில் ஈடுபட்டார். 2 ரன்னில் அரை சதத்தை நழுவ விட்ட அவர் 62 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தபோது, சான்ட்னர் பந்துவீச்சில் அவுட் ஆனார். இதனையடுத்து, அக்சர் படேலும் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
CBSE 10th மாணவர்கள் தமிழ் தேர்வுக்கு 6 பாடப்பிரிவுகளை மட்டும் படித்து தேர்வெழுதிய நிலையில், சமச்சீர் கல்வி மாணவர்கள் 9 பாடப்பிரிவுகளை படித்தனர். இதனால், மாணவர்கள் அவதிப்படுவதாகவும், CBSE பாடத்திட்டத்துக்கு இணையாக பாடப் பிரிவுகளை குறைக்கவும் ஆசிரியர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில், ஒன்பது பாடப்பிரிவுகள் 7-ஆக குறைக்கப்பட்டு, அறிவியல் தொழில்நுட்பம், ஆளுமை பாடப் பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஒரு கிராமத்தில் திருமணத்திற்குப் பிறகு மணமகள் 7 நாட்கள் ஆடை அணிய மாட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?. ஆம்! இந்த தனித்துவமான பாரம்பரியம் இமாச்சலப் பிரதேசத்தின் மணிகரன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பினி கிராமத்தில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த சடங்கு கிராமவாசிகளின் வலுவான நம்பிக்கை மற்றும் பக்தியுடன் தொடர்புடையது. இந்த நேரத்தில், மணமகனும், மணமகளும் எந்த தொடர்பும் கொள்ளமாட்டார்கள்.
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள Diet கடைபிடிக்கும் பழக்கம், இளம் தலைமுறையிடம் அதிகரித்து வருகிறது. இது பயனுள்ளது என்றாலும், சரியான முறையில் Diet இருப்பது அவசியம். கேரளாவில் உடல் எடையை குறைக்க யூடியூப் பார்த்து உணவுப் பழக்கத்தை மாற்றிய 18 வயது பெண், உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். குடல் சுருங்கி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். Diet கடைபிடிக்கும்போது கவனம் தேவை நண்பர்களே!
வெள்ளை மாளிகையில் ட்ரம்புடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டதால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்திருந்தார். தற்போது மீண்டும் மஸ்க், ஜெலன்ஸ்கியை வம்புக்கு இழுப்பது போல் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில்,எனது ஸ்டார்லிங்க் இன்டர்நெட்தான் உக்ரைன் ராணுவத்தின் முதுகெலும்பாக உள்ளது. அதை ஆப் செய்தால் உக்ரைனின் ஒட்டுமொத்த பாதுகாப்பும் காலியாகிவிடும் என பதிவிட்டுள்ளார்.
சனி பகவான் ஏப்ரல் 28ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார். இது, பல ராசிகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தினாலும், ரிஷபம், சிம்மம், மேஷம் ஆகிய ராசிக்காரர்களுக்கு நன்மையை அள்ளிக் கொடுக்க போகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். தன்னம்பிக்கையும், அசாத்திய துணிச்சலும் அதிகரிக்கும். வருமானம் இரட்டிப்பாகும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
Sorry, no posts matched your criteria.