India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஓம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்.
பொருள்:
ஞானத்தின் இருப்பிடமும், ஆனந்த மயமானவரும்; படிகம் போன்ற நிர்மலமான குணம் உள்ளவரும்; எல்லாக் கலைகளுக்கும், கல்விக்கும் ஆதாரமாகத் திகழ்பவருமான ஹயக்ரீவரை வணங்குகிறேன்.
இந்தியாவில் உடல் பருமன் பிரச்னை தற்போது பூதாகரமாகியுள்ளது. அதிலும் குழந்தைகள் மத்தியில் 4 மடங்கு அதிகரித்துள்ளது. சமீபத்தில் மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூட, எண்ணெய் அளவை 10% குறைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதற்கு தீர்வு இருக்கிறது. நம்ம ஊரை பொறுத்தவரை நல்லெண்ணெய், கடலை எண்ணெய் தான். ஆகவே அதை யூஸ் பண்ணுங்க. பொரித்த எண்ணெயை மீண்டும், மீண்டும் பயன்படுத்தவே கூடாது. That’s All.
தெலுங்கானா, நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கத்தை தோண்டும்போது அதன் மேற்பகுதி இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் சிக்கினர். கடந்த 2 வார கால மீட்புப் பணியில் 11 தேசிய அளவிலான மீட்பு குழுவினர் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒரு தொழிலாளரின் உடல் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது. மாநில அரசு அவரின் குடும்பத்துக்கு ₹25 லட்சத்தை இழப்பீடாக அறிவித்துள்ளது.
ரீ-ரிலீஸ் படங்களின் வரிசையில் வரும் 14 ஆம் தேதி தமிழ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான். ரவி மோகன் ஜெயம் ரவியாக இருந்தபோது நடித்த மெகா ஹிட் படமான ‘எம்.குமரன் S/O மகாலட்சுமி’ மற்றும் SKயின் ‘ரஜினிமுருகன்’ படம் வெளியாகின்றன. பராசக்தியில் தான் சண்டைபோட போகிறார்கள் என்றால், இப்போது ரீ-ரிலீசிலும் சண்டை தான். இந்த இரண்டு படங்களில் உங்க ஃபேவரைட் எது?
மாசி மாத சுபமுகூர்த்த நாளான இன்று, பத்திரப்பதிவு மேற்கொள்ள, கூடுதல் டோக்கன் வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வழக்கமாக, 100 டோக்கன் வழங்கப்படும் சார்-பதிவாளர் அலுவலகங்களில் 150 டோக்கன்களும், 200 டோக்கன் வழங்கப்படும் அலுவலகங்களில் 300 டோக்கன்களும் வழங்கப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது. கடந்த மாதம் 10ஆம் தேதி ஒரே நாளில் ₹237 கோடி அரசு வருவாய் ஈட்டியது கவனிக்கத்தக்கது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில், ஒருசில இடங்களில் நாளை (மார்ச் 11) மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுத்துள்ளது. மேலும், தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அந்த மையம் கணித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?
கனடா பிரதமராக லிபரல் கட்சியின் மார்க் கார்னே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து வங்கியின் முன்னாள் கவர்னரான இவர், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை குறைக்கப் போவதில்லை என டிரம்புக்கு டஃப் கொடுத்துள்ளார். பிரதமர் போட்டியில், துணை பிரதமர், முன்னாள் அமைச்சர் என 4 பேரை முந்தியிருக்கிறார். இதுவரை தேர்தலையே சந்திக்காதவர் எப்படி வெற்றி பெற்றார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகி இருக்கிறது.
புகழ்பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா தேரோட்டத்தை ஒட்டி இன்று (மார்ச் 10) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோயில் திருவிழா தேரோட்டத்தை ஒட்டி வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறையாகும். அதேநேரம் பொதுத்தேர்வில் எவ்வித மாற்றமுமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள 45 KV பள்ளிகளில், சில பள்ளிகளில் மட்டுமே 3 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை பால்வாடிகா என்ற KG முதல்நிலை வகுப்பில் சேர்க்கும் வசதி உள்ளது. அதன்படி, <
உதவி பேராசிரியர்களை தேர்வு செய்வதற்காக TN அரசால் நடத்தப்படும் ‘செட்’ தேர்வு இனி ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தற்போது நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான முடிவுகள், விரைவில் வெளியிடப்பட்டு ஜூன் மாதம் 4,000 உதவி பேராசியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 2 முறை, செட் தேர்வு நடத்தி காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.