News March 10, 2025

13 நாடுகளில் தேதி குறிச்சாச்சி.. இளையராஜா செம ஹேப்பி!

image

சிம்பொனி நிகழ்ச்சியை முடித்து சென்னை திரும்பிய இளையராஜா, நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு மொமண்ட்டிற்கும் கைதட்டி ரசிகர்கள் கொண்டாடினர் என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அனைவரும் மனமார வாழ்த்தியதால் தான், நிகழ்ச்சி பெரிய வெற்றி பெற்றது எனவும், அரசின் சார்பாக வரவேற்றது மகிழ்ச்சி என்றும் கூறினார். இந்நிகழ்ச்சியை 13 நாடுகளில் நடத்த தேதி குறிச்சாச்சு எனக் கூறி அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

News March 10, 2025

தாயை பின் தொடரும் ஸ்ரீதேவியின் மகள்

image

ஸ்ரீதேவி கடைசியாக நடித்த ‘மாம்’ படத்தின் 2ஆம் பாகத்தில் அவரின் மகள் குஷி கபூர் நடிக்க உள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவரது தந்தை போனி கபூர் ‘மாம் 2’ படத்தை தானே தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். தனது மகள்கள் இருவரும் ஸ்ரீதேவியின் வழியில் செல்வதையே விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். மாம் படத்திற்காக ஸ்ரீதேவி தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

News March 10, 2025

இலங்கை கிரிக்கெட்டருக்கு இந்தியாவில் இலவச இடம்?

image

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், செவ்லான் என்ற குளிர்பான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்திற்கு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் ₹1,600 கோடியில் அலுமினியம் கேன் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க, 25.75 ஏக்கர் நிலம் இலவசமாக ஒதுக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. காஷ்மீர் சட்டசபையில் தற்போது இவ்விவகாரம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

News March 10, 2025

‘நீட்’ விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய நாளை கடைசி நாள்

image

UG ‘நீட்’ தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய நாளையுடன் (மார்ச் 11) அவகாசம் நிறைவடைகிறது. கடந்த 07.02.2025 முதல் 07.03.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் மே 4ஆம் தேதி தேர்வு நடைபெறவுள்ள நிலையில், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 011 40759000 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

News March 10, 2025

இசை ‘ராஜா’வை வரவேற்க ரெடியாகும் தமிழ்நாடு!

image

லண்டனில் தனது முதல் சிம்பொனியான ‘VALIANT’யை அரங்கேற்றம் செய்து, இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த இசைஞானி இளையராஜா இன்று சென்னை திரும்புகிறார். அவரை சிறப்பான முறையில் வரவேற்க தமிழ்நாடு அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இசைஞானி மீனம்பாக்கம் வந்திறங்கியதும், அதிகாரிகள் புடைசூழ அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்கவுள்ளார். தவிர, ரசிகர்களும் அவருக்காக ஏர்போர்ட்டில் காத்திருப்பார்கள்.

News March 10, 2025

ரன்வேயில் உரசிய விமானம்.. சென்னை ஏர்போர்ட்டில் ஷாக்

image

சென்னை வந்திறங்கிய விமானத்தில் இருந்த பயணிகளுக்கு உயிர் பயம் ஏற்பட்ட சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. மும்பையில் இருந்து 192 பேருடன் வந்த விமானம், லேண்ட் ஆனபோது ஓடுபாதையில் அதன் வால் உரசியிருக்கிறது. தீப்பொறி எழும்ப, பைலட் சட்டென சுதாரித்து விமானத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விமான பாதுகாப்பு ஆணையம் விசாரிக்கிறது. பயணிகளிடமும் Sorry கேட்டுள்ளனர்.

News March 10, 2025

பருப்புகளுக்கு 10% இறக்குமதி வரி விதிப்பு

image

பருப்பு இறக்குமதிக்கு 10% வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டு விநியோகத்தை அதிகரிக்க, மசூர் உள்ளிட்ட பருப்பு வகைகளுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படுவதாகவும், துவரை உள்ளிட்ட பிற பருப்புகளுக்கு இறக்குமதியை மே 31 வரை நீட்டிப்பதாகவும் கூறியுள்ளது. இதுவரை பருப்பு இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த 10% வரி விதிப்பால் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

News March 10, 2025

கல்வி ஞானத்தை வழங்கும் ஹயக்ரீவர் காயத்ரி மந்திரம்!

image

ஓம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்.

பொருள்:

ஞானத்தின் இருப்பிடமும், ஆனந்த மயமானவரும்; படிகம் போன்ற நிர்மலமான குணம் உள்ளவரும்; எல்லாக் கலைகளுக்கும், கல்விக்கும் ஆதாரமாகத் திகழ்பவருமான ஹயக்ரீவரை வணங்குகிறேன்.

News March 10, 2025

சமையலுக்கு உகந்த எண்ணெய் எது?

image

இந்தியாவில் உடல் பருமன் பிரச்னை தற்போது பூதாகரமாகியுள்ளது. அதிலும் குழந்தைகள் மத்தியில் 4 மடங்கு அதிகரித்துள்ளது. சமீபத்தில் மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூட, எண்ணெய் அளவை 10% குறைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதற்கு தீர்வு இருக்கிறது. நம்ம ஊரை பொறுத்தவரை நல்லெண்ணெய், கடலை எண்ணெய் தான். ஆகவே அதை யூஸ் பண்ணுங்க. பொரித்த எண்ணெயை மீண்டும், மீண்டும் பயன்படுத்தவே கூடாது. That’s All.

News March 10, 2025

2 வாரங்களுக்கு பிறகு ஒருவர் உடல் மட்டும் கண்டெடுப்பு

image

தெலுங்கானா, நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கத்தை தோண்டும்போது அதன் மேற்பகுதி இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் சிக்கினர். கடந்த 2 வார கால மீட்புப் பணியில் 11 தேசிய அளவிலான மீட்பு குழுவினர் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒரு தொழிலாளரின் உடல் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது. மாநில அரசு அவரின் குடும்பத்துக்கு ₹25 லட்சத்தை இழப்பீடாக அறிவித்துள்ளது.

error: Content is protected !!