India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரஜினியின் ஜெயிலர் 2 படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. அதற்காக ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றையும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. முதல் பாகம் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நெல்சன் 2 ஆம் பாகத்தை கையில் எடுத்துள்ளார். படத்தில் எந்தெந்த நடிகர்கள் நடிக்கிறார்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?
தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்கப்படாதது தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் சரமாரியாக கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்க தமிழக முதல்வர் முதலில் சம்மதித்ததாக கூறினார். ஆனால், சூப்பர் முதல்வர் அதை தடுத்துவிட்டதாகவும், அந்த சூப்பர் முதல்வர் யார் என கனிமொழிதான் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
கிராம நத்தம் நில ஆவணங்களை ஆன்லைன் முறைக்கு மாற்றும் போது ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்க, தேவையான இடங்களில் புதிய சர்வே எண் ஒதுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 2000ஆம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்படும் பட்டா, நில அளவை வரைபடம் உள்ளிட்ட ஆவணங்கள் ‘தமிழ் நிலம்’ இணையதளம் வாயிலாக ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால், கிராமங்களில் உள்ள நத்தம் நில ஆவணங்களில் உள்ள பல சிக்கல்கள் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், தமிழகத்திற்கான நிதி குறித்து சரமாரியாக கேள்வியெழுப்பினார். மத்திய அரசின் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் எனக் கூறுவது கூட்டாட்சி தத்துவத்துக்கு முற்றிலும் எதிரானது என அவர் குற்றம்சாட்டினார். மேலும், கல்வி நிதியை தமிழகத்திற்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையாக பயன்படுத்தக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கியது. இதில் பட்ஜெட் தொடர்பாக 13 மசோதாக்களையும், மணிப்பூர் மாநில பட்ஜெட்டையும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு ஆகிய பிரச்னைகளை எழுப்ப திமுக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து டெல்லிக்கு 348 பயணிகளுடன் நேற்றிரவு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. விமானத்தில் 10 கழிவறைகள் இருந்த நிலையில், அதில் ஒன்று மட்டுமே செயல்பட்டுள்ளது. இதனால் 10 மணிநேரமாக கடும் சிரமத்தை சந்தித்த பயணிகள், ஒருகட்டத்தில் கோபமடைந்தனர். இதனால் வேறு வழியின்றி மீண்டும் சிகாகோவுக்கே விமானம் திரும்பிச் சென்றது. என்ன கொடுமை பாஸ்..
டொமினிகன் குடியரசில் காணாமல் போன இந்திய வம்சாவளி மாணவி சுதிக்ஷாவை தீவிரமாக தேடி வருகின்றனர். அமெரிக்காவில் டாக்டருக்கு படித்து வரும் அவர், டொமினிகன் குடியரசில் உள் ரியூ ரெப்யூப்ளிகா ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்குள்ள கடற்கரையில் குளிக்கச் சென்றபோது மர்மமான முறையில் மாயமாகியுள்ளார். ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சக மாணவிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.
லோகேஷ் கனகராஜின் கதை மற்றும் தயாரிப்பில் ராகவா லாரன்ஸின் ‘பென்ஸ்’ படம் பாதியில் நின்றிருக்கிறது. பணப் பிரச்னை காரணமாக இந்த படத்தினை தொடர முடியாமல் போனதால் தான், லாரன்ஸ் தற்போது ‘காஞ்சனா 4’ படத்திற்கு சென்று விட்டாராம். கூலி படத்தை முடித்த கையோடு இந்த படத்தின் ஷூட்டிங்கை லோகேஷ் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய சினிமாவின் முக்கிய டைரக்டருக்கே இந்த நிலைமையா?
IDBI வங்கியில் 650 Junior Assistant Manager காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. 20 – 25 வயதிற்குட்பட்ட எந்த டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். எழுத்து, நேர்முக தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ஊக்கத்தொகையுடன் PG Diploma பயிற்சி அளிக்கப்படும். சம்பளம் மாதம் ₹51,000 வரை வழங்கப்படும். வரும் 12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
இதனை எத்தனை பேர் கவனித்தீர்கள்! CT தொடரில் மட்டும் ஜெர்சியுடன் வெள்ளை கலர் கோட்டையும் அணிந்து கோப்பையை பெறுவார்கள். இது மரியாதையின் அடையாளம் என்று கூறப்படுகிறது. வீரர்களின் மகத்துவத்தையும், விடாமுயற்சியையும் பிரதிபலிப்பதாக ICC சுட்டிக்காட்டுகிறது. CT தொடர் 1998 இல் தொடங்கினாலும், இந்த வெள்ளை சூட்டை அணியும் வழக்கம் 2009 ஆம் ஆண்டில் இருந்து தான் தொடங்கியது.
Sorry, no posts matched your criteria.