India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் தேவை என CM ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார். NEP, மும்மொழிக் கொள்கை தொடர்பாக பிரதான் எழுதிய கடிதம் ஒன்றையும் தனது X தளத்தில் CM பதிவிட்டுள்ளார். மேலும், நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுவதாகவும், நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல என்றும் கடுமையாக சாடியுள்ளார்.
சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில் முதல் ரக பூண்டு ஒரு கிலோ ₹90 ஆகக் குறைந்துள்ளது. 2ஆம் ரக பூண்டு ₹80க்கும், 3ஆம் ரக பூண்டு ₹70க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ பூண்டு ₹100 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஒரு கிலோ பூண்டு ₹400 முதல் ₹500 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த விலை குறைப்பால் இல்லத்தரசிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக ஆர்.சக்திவேல் மற்றும் பி.தனபால் பதவியேற்றனர். கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்த இருவருக்கும், நிரந்தர நீதிபதிகளாக தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில், இன்னும் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கேரள திரைத்துறையை அதிர வைத்த பாலியல் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து, பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான வழக்குகளில் புகார்தாரர்கள் வாக்குமூலம் அளிக்கவில்லை. விசாரணைக் குழு நோட்டீஸ் அனுப்பினாலும், அதற்கு பதில் அளிக்கவும் இல்லை. பெண்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்க முன்வராத காரணங்களால், பல வழக்குகள் தள்ளுபடியாக வாய்ப்புள்ளது.
மும்மொழிக் கொள்கையை TN நிச்சயம் ஏற்காது என திமுக எம்.பி கனிமொழி திட்டவட்டமாக கூறியுள்ளார். பிரதானின் பேச்சுக்கு பதிலளித்த அவர், மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக MPகள் ஒருபோதும் கூறியதில்லை என்றார். TN MPகள் நாகரீகமற்றவர்கள் என பேசியது வருத்தம் அளிப்பதாகவும் கனிமொழி கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, மனதை புண்படுத்தியிருந்தால் அந்தக் கருத்தை வாபஸ் பெறுவதாக பிரதான் கூறினார்.
தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை ரன்யா ராவ் நிறுவனத்துக்கு அரசு நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 2023ல் அவரது நிறுவனத்திற்கு கர்நாடக தொழில்துறை மேம்பாட்டு வாரியம் 12 ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கியதாக கூறப்படுகிறது. இதன் பின்னணி என்ன? அரசியல் பின்புலம் உள்ளதா என்ற கோணத்தில் சிபிஐ விசாரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் நடிகைக்கு எதிராக விசாரணை வளையம் விரிவடைந்துள்ளது.
நிதி மோசடியில் சிக்கி வெளிநாடு தப்பிச்சென்ற IPL முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு வழங்கப்பட்ட வனுவாட்டு பாஸ்போர்ட்டை ரத்து செய்ய,
அந்நாட்டின் பிரதமர் ஜோதம் நபாட் உத்தரவிட்டுள்ளார். அவரது பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பரிசீலிக்கும்போது, எந்த குற்றப்பின்னணியும் தெரியவில்லை. ஒரு வேளை இன்டர்போல் அலர்ட் விடுத்திருந்தால், விண்ணப்பம் தானாகவே நிராகரிக்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஜினியின் ஜெயிலர் 2 படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. அதற்காக ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றையும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. முதல் பாகம் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நெல்சன் 2 ஆம் பாகத்தை கையில் எடுத்துள்ளார். படத்தில் எந்தெந்த நடிகர்கள் நடிக்கிறார்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?
தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்கப்படாதது தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் சரமாரியாக கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்க தமிழக முதல்வர் முதலில் சம்மதித்ததாக கூறினார். ஆனால், சூப்பர் முதல்வர் அதை தடுத்துவிட்டதாகவும், அந்த சூப்பர் முதல்வர் யார் என கனிமொழிதான் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
கிராம நத்தம் நில ஆவணங்களை ஆன்லைன் முறைக்கு மாற்றும் போது ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்க, தேவையான இடங்களில் புதிய சர்வே எண் ஒதுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 2000ஆம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்படும் பட்டா, நில அளவை வரைபடம் உள்ளிட்ட ஆவணங்கள் ‘தமிழ் நிலம்’ இணையதளம் வாயிலாக ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால், கிராமங்களில் உள்ள நத்தம் நில ஆவணங்களில் உள்ள பல சிக்கல்கள் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.