India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக MP-க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? என தர்மேந்திர பிரதானுக்கு CM ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். NEP, மும்மொழிக் கொள்கையை, தமிழக அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என தனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?. நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது என்றும் எதிர்வினையாற்றியுள்ளார்.
சமையல் எரிவாயு ₹318க்கு (₹500 மானியம்) வழங்கப்படும் என்று பாமக நிழல் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. * ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை ₹1000இல் இருந்து ₹2000ஆக உயர்த்தப்படும். *முதியோர்/ ஆதரவற்றோர் உதவித்தொகை ₹3000ஆக உயர்த்தப்படும். *வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ₹5000 வழங்கப்படும். *மின் கட்டணம் குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் பிரதானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். PM SHRI திட்டத்தில் முதலில் கையெழுத்திட முன்வந்த TN CM, பின்னர் யூடர்ன் அடித்துவிட்டதாக அமைச்சர் குற்றம்சாட்டினார். யாரோ ஒரு சூப்பர் முதல்வர் இதன் பின்னணியில் இருப்பதாகவும் விமர்சித்திருந்தார். அவரது இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பார்லிமென்ட் வளாகத்தில் திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
PM SHRI பள்ளிகள் விவகாரம் தொடர்பாக திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் ஜெயக்குமார். இதுகுறித்து பேசிய அவர், PM SHRI திட்டத்தை ஸ்டாலின் முதலில் ஏற்றுக்கொண்டதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதை சுட்டிக்காட்டினார். மேலும், இதிலிருந்து திமுக பச்சோந்தித்தனமான சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொள்வது உறுதியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் என்ற அறிவிப்பால் தென் மாநிலங்களில் தொகுதிகள் குறையலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதனால், ஆந்திர CM சந்திரபாபு நாயுடு, தமிழக CM ஸ்டாலின் ஆகியோர் அதிக குழந்தைகளை பெற்றெடுக்க ஊக்கப்படுத்துகின்றனர். இதில் ஒருபடி மேலே போய், அதிக குழந்தை பெறுபவர்களுக்கு பசு, கன்று, ₹50,000 என பரிசுகளை அறிவித்திருக்கிறார் TDP எம்பி அப்பலா. உங்கள் கருத்து என்ன?
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவித்து வருகிறார். ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சுனிதா மற்றும் பட்ச் வில்மோர் பூமி திரும்ப முடியவில்லை. இந்நிலையில் இருவரும் மார்ச் 16ஆம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.
மும்மொழிக்கொள்கை பற்றி லோக்சபாவில் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், TN மாணவர்களின் நலனுக்காக திமுக பாடுபடவில்லை, அவர்களின் எதிர்காலத்தை பாழாக்குகிறார்கள் என குற்றஞ்சாட்டினார். தமிழை வைத்து அரசியல் செய்கிறார்கள். ஜனநாயகமற்ற முறையிலும், நாகரிகம் இல்லாமலும் நடந்து கொள்கிறார்கள் என தெரிவித்தார். ஆனால் இந்த பேச்சு தமிழர்களை அவமதித்துவிட்டதாகக் கூறி, திமுக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர்.
கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பின் அவர் பேசுகையில், உலக நிறுவனங்களுக்கு தமிழ்நாடுதான் முதல் முகவரி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ₹515 கோடியில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆலை மூலம் சுமார் 1,010 பேர் வேலை பெறுவார்கள் என்று பெருமிதம் தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் நுகர்வோர் பொருளின் தேவை அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் திரைப்படம் சிக்கந்தர். இப்படம் விஜய்யின் சர்க்கார் ரீமேக் என சமீபத்தில் தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள முருகதாஸ், சிக்கந்தர் படம் முழுக்க முழுக்க புதுமையான கதைக் களத்தை கொண்டது. ஒரு முக்கிய சமூக பிரச்னையை பேசும் இப்படம், இந்திய சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு பக்கா கமர்ஷியலாக இருக்கும் என தெரிவித்தார்.
பாமக வெளியிட்டுள்ள பொது நிழல் நிதிநிலை அறிக்கையில் 158 முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, *அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் *8வது ஊதியக்குழு பரிந்துரைகளை ஏற்று ஊதிய உயர்வு வழங்கப்படும் *அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு முழு அகவிலைப்படி உயர்வு * தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.