India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு மற்றும் நிதி உதவிகளை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதன்படி, விபத்து மரணத்திற்கான நிதியுதவி ₹2.50 லட்சத்தில் இருந்து ₹4 லட்சமாகவும், 2 குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை ₹25 ஆயிரத்தில் இருந்து ₹50 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களின் ஒரு பெண் குழந்தைக்கான திருமண உதவித்தொகையும் ₹60,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு தனது அப்பா தான் முதல் ஹீரோ. அவர்களுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். பாகிஸ்தானில் அப்பாவுக்காக மகள் செய்த தியாகம் சோகத்தில் முடிந்துள்ளது. 20 வயது பெண் Muqaddas, உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தைக்காக, தனது கல்லீரலை தானம் செய்துள்ளார். இதனையடுத்து நடந்த சிகிச்சையில் இளம்பெண் உயிரிழந்துள்ளார். அப்பாவை காப்பாற்ற உயிரைவிட்ட Muqaddas தான் உண்மையான Dad’s Little Princess
பனிப்போர் காலத்தில் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புக்காக நேட்டோ உருவாக்கப்பட்டது. இதிலிருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் என அதிபர் டிரம்பின் ஆலோசகரான எலான் மஸ்க் வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புக்காக அமெரிக்கா ஏன் நிதியை அதிகம் செலவிட வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். அப்படி அமெரிக்கா வெளியேறினால், நேட்டோவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது.
2020ஆம் ஆண்டு இதே நாளில்தான் கொரொனாவை பெருந்தொற்றாக (pandemic) உலக சுகாதார மையம் அறிவித்தது. 2019 டிசம்பர் மாதத்தில் சீனாவில் முதல் கோவிட் தொற்று கண்டறியப்பட்டது. அது, 2020 ஜனவரி மாதத்தில் உலகம் முழுவதும் பரவியது. பின்னர், 2020 மார்ச் மாதத்தில் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர் நடந்த லாக்-டவுன், மாஸ்க், தடுப்பூசி, குவாரண்டைன் கதைகள் எல்லாம் உங்களுக்கே தெரியும்.
ஹாலிவுட்டில் வசூலை குவித்த படங்களில் ஹாரிபாட்டர் படங்களும் ஆகும். அதில் 2001இல் வெளியான ‘ஹாரிபாட்டர் அன்ட் தி பிளாசபர் ஸ்டோன்’ படத்தில் Ghost The Fat Friar கதாபாத்திரத்தில் நடித்தவர் சைமன் பிசர் (63) ஆவார். அவர் நேற்று மதியம் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மரணத்திற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. சைமன் பிசர் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஜெயலலிதா உயிரோடு இருக்கையில், அதிமுகவினர் தங்களுக்குள் ஒருவரையொருவர் விமர்சித்தது இல்லை. கூட்டணி குறித்து பேட்டி அளித்தது இல்லை. ஆனால், அண்மையில் ராஜேந்திர பாலாஜி, மா.பா. பாண்டியராஜன் மோதல் விவகாரம், கூட்டணி குறித்த மூத்த தலைவர்கள் பேட்டி உள்ளிட்டவை தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மட்டும் இன்று இருந்திருந்தால், இதுபோல நடக்குமா? என அவர்கள் பேசி வருகின்றனர்.
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடியோரைக் கொண்டு புதிய அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அதில், ரச்சின் ரவீந்திரா, இப்ராஹிம் சத்ரான், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் (WK), க்ளென் பிலிப்ஸ், அஸ்மத்துல்லா ஓமர்சாய், மிட்ச்செல் சாண்ட்னர் (C), முகமது ஷமி, மேட் ஹென்ரி, வருண் சக்ரவர்த்தி, அக்ஷர் பட்டேல் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். உங்கள் பேவரைட் யார்?
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் UPI விதிகளில் பெரிய மாற்றங்களை செய்ய NPCI முடிவு செய்துள்ளது. அதன்படி, செயல்படாத செல்ஃபோன் எண்கள் உடனுக்குடன் தகுதி நீக்கம் செய்யப்படவுள்ளது. தற்போதைய நிலவரப்படி, பழைய எண்களை பலர் UPIயில் பயன்படுத்தி வருவதால் மோசடிகள் அதிகரித்துள்ளது. அதனை தடுக்கும் வகையில் வாரம் ஒருமுறை செயல்படாத எண்களை நீக்குமாறு UPI நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
‘சப்தம்’ படத்திற்கு போதிய புரமோஷன் செய்யாமல் கொன்றுவிட்டதாக அப்படத்தின் இயக்குநர் அறிவழகன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். பட ரீலீஸ் தாமதம் என பல குளறுபடிகளை செய்தாலும், ஹவுஸ்ஃபுல் காட்சிகள் மூலம் ரசிகர்கள் அன்பையும், ஆதரவையும் பெற்றதாக அவர் கூறியுள்ளார். பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என யாரையும் அவர் நேரடியாக குற்றஞ்சாட்டவில்லை. கடந்த பிப்.28ஆம் தேதி இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
நெட்பிளிக்ஸ்-ல் வெளியான நயன்தாராவின் ஆவணப் படத்தில், நானும் ரவுடி தான் பட காட்சி இடம்பெற்றிருந்தது. இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ், ரூ.10 கோடி இழப்பீடு கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய நெட்பிளிக்ஸ்-ன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 9ம் தேதி நடைபெறும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. தீர்ப்பு யார் பக்கம் வருமோ?
Sorry, no posts matched your criteria.