India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
CT கோப்பையை வென்ற IND அணிக்கு ₹20 கோடியை ICC பரிசாக வழங்கியுள்ளது. அதேபோல், ரன்னரான NZக்கு ₹9.72 கோடி பரிசு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 12 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபியை நாட்டுக்கு பெற்று தந்த காரணத்தால், இந்திய அணி வீரர்களுக்கு BCCI பரிசு வழங்கி கவுரவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடந்த CT ஃபைனலில் NZஐ 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் IND வீழ்த்தியது.
மதுரையில் மத நல்லிணக்க பேரணிக்கு திமுக அரசு அனுமதி மறுத்தது எந்த வகையில் நியாயம் என்று தவெக கேள்வி எழுப்பியுள்ளது. அனுமதி மறுத்ததன் மூலம் மத நல்லிணக்கம் தொடர்பாக திமுக இரட்டை வேடம் போடுவதாகவும், பாஜக மீதான தனது மறைமுக பாசத்தை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை என்றும் விமர்சித்துள்ளது. மேலும், கொஞ்சம், கொஞ்சமாக திமுக அரசின் சாயம் வெளுக்க தொடங்கி உள்ளதாக கடுமையாக சாடியுள்ளது.
LocalCircles சமூகவலைதளம் 40,000 இந்தியர்களிடம் தூங்குவது குறித்து ஆய்வு நடத்தியது. அதில் 39% பேர் 6- 8 மணி நேரமும், மேலும் 39% பேர் 3-6 மணி நேரமும், 2% பேர் 8-10 மணி நேரமும், 20% பேர் 4 மணி நேரமும், 59% பேர் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவதும் தெரிய வந்துள்ளது. வாஸ்ரூம் செல்வது, அதிகாலை வேலை, கொசுக்கடி போன்றவையே தங்கள் தூக்கம் பாதிக்கப்பட காரணம் என அவர்கள் கூறியுள்ளனர்.
ஜார்கண்ட்: பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 சிறார் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். பட்டாசுகளை வெளியே வைத்திருந்தபோது தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதில் பயந்து போய் அனைவரும் கடைக்கு உள்ளே சென்று சாத்திக் கொண்டதாகவும் FIRஇல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைக்குள்ளே புகை சூழ்ந்ததால், மூச்சடைத்து 5 பேரும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் வெளியே ஓடியிருந்தால் மரணம் ஏற்பட்டிருக்காது என்று போலீசார் கூறுகின்றனர்.
பாமக நிழல் நிதிநிலை அறிக்கையில், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. * தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் அரசு வேலை *அடுத்த 4 ஆண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசு வேலை * உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு * தொகுதிக்கு ஒரு அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படும். திருநங்கையருக்கு 1% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டார்டிகாவில் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட முட்டை எந்த விலங்கினுடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. கோழி முட்டை போல வலுவான ஓடு இல்லாமல் இந்த முட்டையின் ஓடு மிருதுவானதாக இருக்கிறது. ஆகையால், இது கடல் பிராணியான மொசாசர்ஸ் விலங்கினுடையதாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. யானைப் பறவையின் முட்டைக்குப் பிறகு இதுதான் உலகின் பெரிய முட்டை என்றும் கூறப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்காக மத்திய அரசு அடல் பென்சன் யோஜனாவை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் மாதந்தோறும் ₹5000 ஓய்வூதியம் பெறலாம். ஏழைகள், பொருளாதாரத்தில் நலிவடைந்த தனிநபர்கள், அமைப்பு சாரா துறையில் உள்ள தொழிலாளர்கள் (18 – 40 வயதுக்குள்) இத்திட்டத்தில் இணையலாம். இத்திட்டத்தில் தினம் ₹7 வீதம் மாதம் ₹210 முதலீடு செய்தால், 60 வயதை அடையும் போது, ஓய்வூதியமாக ₹5000 வீடு தேடி வரும்.
மஹாராஷ்டிராவில் ஹிந்துக்களுக்கென ஹிந்துக்களால் நடத்தப்படும் பிரத்யேக ஜத்கா இறைச்சி கடைகள் செயல்பட உள்ளதாக அம்மாநில அமைச்சர் நிதேஷ் ராணே அறிவித்துள்ளார். இதற்கென ‘Malhar’ சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஹலால் முறைக்கு மாற்றாக இந்த ஜத்கா முறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஹிந்து மரபு படி, விலங்குகள் வலியில் துடிக்காமல் ஒரே அடியில் பலியிடப்பட்டு ஜத்கா இறைச்சி தயாரிக்கப்படுகிறது.
உலக அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா (8.3%) 2ஆவது இடத்தில் இருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் (SIPRI) தெரிவித்துள்ளது. முதலிடத்தில் உக்ரைன் (8.8%), 3-5 இடங்களில் கத்தார், சவூதி அரேபியா, பாகிஸ்தான் இருப்பதாக SIPRI கூறியுள்ளது. ஆயுதங்களுக்கு ரஷ்யாவை அதிகம் சார்ந்திருந்த நிலை மாறி, USA, பிரான்ஸ், இஸ்ரேலிடம் தற்போது இந்தியா அதிக ஆயுதம் வாங்கி உள்ளதாகவும் SIPRI குறிப்பிட்டுள்ளது.
ஜெயலலிதாவை அதிமுகவினர் அம்மா என அழைப்பார்கள். CM ஸ்டாலினை திமுகவினர் அப்பா என பிரசாரம் செய்து வருகின்றனர். இதே பாணியில் விஜய், தன்னை மக்களிடையே அண்ணா என அடையாளப்படுத்த திட்டமிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தளபதி என்பதற்கு பதில் அண்ணா என விஜய்யை அழைக்க வேண்டும் என தவெகவினர் கேட்டுக் கொள்ளப்பட்டு இருப்பதாகவும், அண்ணா என பாடல் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.