News March 11, 2025

ஆங்கிலத்தில் கடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

image

ஆங்கிலத்தில் கடல் OCEAN, SEA என்று 2 பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதில் OCEAN என்பது பெருங்கடலை அழைக்க பயன்படுத்தப்படுகிறது. அதாவது, அட்லாண்டிங் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல் ஆகியவை OCEAN என அழைக்கப்படுகிறது. இதுதவிர்த்து, SEA என்ற வார்த்தை சிறிய கடலை அழைக்க பயன்படுகிறது. வங்கக் கடல், அரபிக்கடல் ஆகியவற்றை இதற்கு உதாரணமாக கூற முடியும்.

News March 11, 2025

ரகளையான ‘ரெட்ரோ’ காமிக்ஸ் உங்களுக்காக..

image

‘ரெட்ரோ’ திரைப்படத்தின் காமிக் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்காக முதன்முதலாக தனது சொந்த குரலில் நடிகை பூஜா ஹெக்டே தமிழில் டப்பிங் பேசியுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ரகளையான விஷயங்களையும், பூஜா ஹெக்டேவுக்கு தமிழ் கற்றுக் கொடுத்த சிரமங்களையும் கலாய்த்து காமிக்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படம், வரும் மே 1ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

News March 11, 2025

இலவச பஸ் பயணம்.. தெலுங்கானா வேற லெவல்

image

தமிழகத்தைப் போல், தெலுங்கானாவிலும் பெண்கள் இலவசமாக அரசு பஸ்களில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதில் தமிழகத்திற்கும், தெலுங்கானாவிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. தமிழகத்தில் எந்த மாநில பெண் என்றாலும் இலவசமாக பயணிக்கலாம். ஆனால் தெலுங்கானாவில் அந்த மாநில பெண்கள் மட்டுமே பயணிக்க முடியும். ஆதாரை நடத்துநர் பார்த்து உறுதிசெய்த பிறகே பஸ்சில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

News March 11, 2025

ஒடிசா: 10 ஆண்டுகளில் 118 மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர்

image

ஒடிசாவில் கடந்த 10 ஆண்டுகளில் 118 மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டு இருப்பதாக CM மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இது தொடர்பான கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில், இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து 315 மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், 238 பேர் சரண் அடைந்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 11, 2025

கே.எல்.ராகுல் vs அக்சர்: DC கேப்டன் யார்?

image

IPL விரைவில் துவங்க உள்ள நிலையில், DC கேப்டனை வரும் நாள்களில் அந்த அணி அறிவிக்க உள்ளது. இந்த ரேஸில் அக்சர் படேலும், கே.எல்.ராகுலும் உள்ளனர். இதில், DCக்காக 7 சீசன்கள் விளையாடியுள்ள ஆல்ரவுண்டர் அக்சரின் கையே ஓங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் கேப்டன்சியில் அனுபவம் இல்லாத காரணத்தால் LSG, பஞ்சாப் அணியை வழிநடத்திய அனுபவம் கொண்ட, முதல்முறையாக DCக்காக விளையாட உள்ள ராகுலின் பெயரும் அடிபடுகிறது.

News March 11, 2025

நாக்பூரில் இருந்து வரலாறு எழுதப்படாது: கனிமொழி

image

தமிழை விட சமஸ்கிருதம் பழமையானது என பாஜக MP நிஷிகாந்த் துபே கூறியதை சுட்டிக்காட்டி, வரலாறு நாக்பூரில் எழுதப்படவில்லை என கனிமொழி சாடியுள்ளார். தமிழ் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பேசப்பட்டும், எழுதப்பட்டும் செழித்து வளரும் மொழி எனவும், சமஸ்கிருதம் போல் பாஜகவின் பிரச்சாரத்தால் ஆதரிக்கப்படும் மொழி அல்ல எனவும் அவர் விமர்சித்துள்ளார். பாஜகவின் பொய்களை விடவும் தமிழ் நிலைத்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

News March 11, 2025

ராசி பலன்கள் (11.03.2025)

image

➤மேஷம் – பரிசு ➤ரிஷபம் – தனம் ➤மிதுனம் – தேர்ச்சி ➤கடகம் – செலவு ➤ சிம்மம் – ஓய்வு ➤கன்னி – சினம் ➤துலாம் – நஷ்டம் ➤விருச்சிகம் – மறதி ➤தனுசு – ஆதரவு ➤மகரம் – பக்தி ➤கும்பம் – சலனம் ➤மீனம் – ஓய்வு.

News March 11, 2025

வீடியோ காலில் ஆப்ரேஷன்.. கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்

image

பிஹாரில் கர்ப்பிணி பெண் ஒருவர் தனியார் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியுள்ளார். அப்போது டாக்டர் சஞ்சய் டெல்லியில் இருந்ததால், தனது உதவியாளரை வீடியோ காலில் அழைத்து தான் சொல்ல சொல்ல ஆப்ரேஷன் செய்ய சொல்லி இருக்கிறார். இதில், தவறு நடக்கவே கர்ப்பிணி உயிரிழந்த கொடுமை நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஹாஸ்பிடல் நிர்வாகத்திற்கு ஆதரவாக, போலீஸ் செயல்படுவதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

News March 10, 2025

ஏழைகள் கந்துவட்டிக்கு பலிகடா ஆவதா? சீமான் ஆவேசம்

image

வங்கி நகைக்கடன் குறித்த புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற சீமான் வலியுறுத்தியுள்ளார். நகைகளை அசல், வட்டி செலுத்தி திருப்பிய பின்னர் மறுநாள் தான், அதே நகைகளை வைத்து பணம் பெற முடியும் என்பது, ஏழைகளை கந்துவட்டி வாங்க வைக்கும் கொடும் அணுகுமுறை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, வட்டியை மட்டும் செலுத்தி, நகையை மறு அடகு வைக்க இயலும் பழைய நடைமுறையே தொடரப்பட கோரிக்கை விடுத்துள்ளார்.

News March 10, 2025

டாக்டர் வேல்முருகேந்திரன் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி

image

வயது மூப்பின் காரணமாக இந்தியாவின் முன்னணி நரம்பியல் நிபுணரான டாக்டர் சி.யு. வேல்முருகேந்திரன் காலமானார். அவரது உடல், சென்னையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. அவரது வீட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று, சி.யு.வேல்முருகேந்திரன் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

error: Content is protected !!