India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா நடிப்பில் 2004ம் ஆண்டு வெளியாகி சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் 7G ரெயின்போ காலனி. யுவன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. இதன் 2ம் பாகத்தையும் செல்வராகவனே இயக்கி வருகிறார். இன்னும் 2 வாரத்தில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
▶மார்ச்- 11 ▶மாசி – 27 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM & 01:30 PM – 02:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 03:00 AM – 04:30 AM ▶எமகண்டம்: 09:00 PM – 10:30 PM ▶குளிகை: 12:00 AM- 01:30 AM ▶திதி: திரயோதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: பூராடம் ▶நட்சத்திரம் : ஆயில்யம்.
X தளம் முடங்கியது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் விளக்கமளித்துள்ளார். அதாவது, X தளம் மீது பெரும் சைபர் தாக்குதல் நடப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தினமும் நடப்பதாகவும், இதன் பின்னணியில் ஒரு குழு (அ) நாடு இருக்கலாம் என சந்தேகித்துள்ளார். தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் X தளம் நேற்று ஒரே நாளில் 3 முறை முடங்கியது.
இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை சைலண்ட் ஹீரோ என்று கேப்டன் ரோஹித் சர்மா புகழ்ந்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி குறித்து பேசுகையில், தாம் துவக்க ஆட்டக்காரராக 79 ரன்கள் குவித்ததை சுட்டிக்காட்டினார். ஒருவேளை தாம் ரன் குவிக்க தவறினாலும் ஸ்ரேயாஸ், அக்சருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து தனது பணியை செய்திருப்பார் என்றும் ரோஹித் கூறினார். இப்போட்டியில் ஸ்ரேயாஸ் 48 ரன்கள் சேர்த்தார்.
வாடிக்கையாளர்களுக்கு ₹100க்கு புதிய ரிசார்ஜ் பிளானை JIO அறிமுகம் செய்துள்ளது. JIO சினிமா, டிஸ்னி HOTSTAR நிறுவனங்கள், ‘JIO HOTSTAR’ என்ற பெயரில் அண்மையில் ஒரே நிறுவனமாக இணைந்தன. இந்நிலையில், ஜியோவின் ₹100 புதிய பேக்கில், 90 நாட்களுக்கு ‘JIO HOTSTAR’ சந்தாவுடன், 5 GB டேட்டாவும் வழங்கப்படுகிறது. வரும் 22ம் தேதி தொடங்கும் IPL-ஐ கருத்தில் கொண்டு, இத்திட்டம் அறிமுகப்படுத்தப்- பட்டதாகக் கூறப்படுகிறது.
இன்று (மார்ச் 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
உக்ரைனுக்குப் பிறகு, மால்டோவா, ஜார்ஜியா, ரூமேனியா நாடுகள் மீது ரஷ்யா போர் தொடுக்கும் என்று நேட்டோ EX கமாண்டர் ரிச்சார்ட் செரிப் எச்சரித்துள்ளார். உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப் முடிவு அமலுக்கு வருவது பெரும் அபாயம் என்றும், இது ரஷ்ய அதிபர் புதினின் போர் திட்டத்திற்கு சாதகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். பால்டிக் நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் தொடுக்கவும் இது வழிக்கும் எனவும் கூறியுள்ளார்.
டெல்லி மக்களை பிரதமர் மோடி ஏமாற்றி விட்டதாக ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி மூத்தத் தலைவருமான அதிஷி, தேர்தலின்போது பாஜக வென்றால் பெண்களின் வங்கிக் கணக்கில் மார்ச் 8ஆம் தேதி ரூ.2,500 உதவித் தொகை வரவு வைக்கப்படுமென மோடி கூறினார். ஆனால் அதற்கு மாறாக இன்று வரை பதிவு கூட தொடங்கப்படவில்லை என்றும் சாடினார்.
எவ்வளவு செலவானாலும் கவலையில்லை எனக் கூறி, ஜேம்ஸ் பாண்ட் படங்களின் உரிமைகளை வாங்க அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது நிறுவன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அமேசான் நிறுவனம் MGMஐ 2022ல் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, ஜேம்ஸ் பாண்ட் கதையை டிவி தொடர்களாகத் தயாரிக்க திட்டமிட்டது. அதற்கு பாண்ட் படங்களை 30 ஆண்டுகளாக தயாரித்த பார்பரா, அமேசான் நிர்வாக அதிகாரிகளை முட்டாள் என விமர்சித்து இருந்தார்.
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வாக உள்ள நிலையில், தான் பிரதமரானால், இந்தியாவுடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிப்பேன் என அவர் கூறியுள்ளார். கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டது முதல் இருநாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. கொலைக்கு இந்திய உளவுத்துறைதான் காரணம் என அந்நாட்டின் பிரதமர் ட்ரூடோ குற்றஞ்சாட்டியிருந்தார்.
Sorry, no posts matched your criteria.