India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இபிஎஸ் 3-ம் கட்ட சுற்றுப்பயணத்தை இன்று முதல் தொடங்குகிறார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், இன்று கிருஷ்ணகிரியில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் அவர், 19-ம் தேதி வேலூரில் நிறைவு செய்கிறார். இந்த பயணத்தின்போது மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழாவும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் கவனித்து வருகின்றனர்.
ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை குரூப் கேப்டன் டிகே பருல்கார், நேற்று காலமானார். 1965 இந்திய – பாகிஸ்தான் போரின் போது, இவரது விமானம் எதிரிகளால் சுடப்பட்டது. விமானத்தை விட்டுவிட்டு அங்கிருந்து புறப்படுமாறு உயர் அதிகாரிகள் கூறினாலும், விமானத்துடன் நாட்டிற்கு வந்த தீரன் இவர். அதேபோல், 1971 பாகிஸ்தான் போரின் போது, போர் கைதியாக இவர் பிடிபட்டார். ஆனால், அங்கிருந்து தப்பித்து இந்தியா வந்தடைந்தார்.
கல்வி, மருத்துவம் ஆகியவை இன்று எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டதாக RSS தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். ஒரு காலத்தில் சேவை துறைகளாக இருந்த கல்வி, மருத்துவம் இப்போது வணிகமயம் ஆகிவிட்டதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். தரமான புற்றுநோய் சிகிச்சை என்பது இந்தியாவில் 8 – 10 நகரங்களில் மட்டுமே கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மோடி தலைமையிலான அரசு குறித்த விமர்சனமாகவே இது பார்க்கப்படுகிறது.
பல பிராண்டுகளில் கேஸ் அடுப்புகள் கிடைப்பதால், அவற்றில் எது தரமானது என்ற குழப்பம் இனி வேண்டாம். கேஸ் அடுப்புகளுக்கு ஸ்டார் ரேட்டிங் வழங்கும் திட்டம் 2026 ஜனவரி முதல் அமலுக்கு வரும் என மத்திய மின்சார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ரேட்டிங், அடுப்புகளின் நீடிக்கும் திறன், சூடாக்கும் திறன் மற்றும் தரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு, அடுப்பின் மீதே ஒட்டப்பட்டிருக்கும். SHARE IT.
சுதந்திர தினத்தையொட்டி, ‘Air India Express’ விமான பயண கட்டணத்தில் அதிரடி ஆஃபர் அறிவித்துள்ளது. இன்று முதல் 15-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் 50 லட்சம் பயணியருக்கு கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது. அதன்படி, உள்நாட்டு விமான பயண கட்டணம் ₹1,279, சர்வதேச விமான பயண கட்டணம் ₹4,279லிருந்து தொடங்குகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
MGR, ஜெயலலிதாவை திருமாவளவன் விமர்சித்ததாக கூறி அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு விசிக தரப்பில் இருந்தும் பதிலடி கொடுக்கப்பட்ட நிலையில், அதிமுக தலைவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் யாரும் பேச வேண்டாம் என கட்சியினருக்கு திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். எந்த தலைவர்களையும் அவமதிக்கும் நோக்கம் தனக்கில்லை என தெரிவித்த அவர், விமர்சனத்திற்கு விளக்கம் அளிக்க தயார் எனவும் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு இருப்பதாக EPS பகல் கனவு கண்டு கொண்டிருப்பதாக KN நேரு தெரிவித்துள்ளார். ஆனால், அதிமுக கூட்டணியில் பிரச்சனை உள்ளதால்தான் OPS வெளியேறி உள்ளதாகவும் விமர்சித்துள்ளார். லோக்சபா தேர்தலுக்கு முன் 40முறை மோடி தமிழகம் வந்த நிலையில் திமுக அபார வெற்றி பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். அதனால் மோடி அடிக்கடி தமிழகம் வந்தால் திமுக கூட்டணி 2026-ல் அமோகமாக வெற்றி என்றும் கூறியுள்ளார்.
‘கூலி’ படத்தின் ப்ரீ புக்கிங் சில நாள்களுக்கு முன்பு அனைத்து இடங்களிலும் ஓபன் ஆனது. அந்த வகையில், இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இப்படம் ₹60 கோடிக்கும் வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் 14-ம் தேதி படம் ரிலீசாக உள்ள நிலையில், ரிலீஸுக்கு முன்னரே கண்டிப்பாக ₹100 கோடிக்கும் மேல் ப்ரீ புக்கிங்கில் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்துக்கு யாரெல்லாம் வெயிட்டிங்?
சுப்ரீம் கோர்ட்டில் இன்று முதல் அவசர வழக்காக இம்மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை இளம் வழக்கறிஞர்கள் மட்டுமே வைக்க முடியும். மூத்த வழக்கறிஞர்களுக்கு இந்த வாய்ப்பு இனி கிடையாது. கடந்த 6-ம் தேதி இந்த உத்தரவையை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பிறப்பித்தார். ஐகோர்ட்டுகளில் இதே முறையை பின்பற்றுவது தொடர்பாக அந்தந்த தலைமை நீதிபதிகள் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழகம் வந்த பாஜக தேசிய பொதுச் செயலாளர் சந்தோஷை சந்திக்க வருமாறு OPS-க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்த சந்திப்பை அவர் தவிர்த்துவிட்டு, சொந்த ஊரிலேயே தங்கிவிட்டாராம். BJP மீது அதிருப்தியில் இருந்த அவருடன் TTV சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், OPS தரப்பு பாஜகவுடன் மீண்டும் இணைவதை விரும்பவில்லையாம். அதுமட்டுமல்லாமல், கூட்டணி மாறும் (விஜய்) முடிவில் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.