India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சர்க்கரை நோய், சளி மற்றும் கிருமி தொற்று போன்ற பிரச்னைகளுக்காக உட்கொள்ளப்படும் 145 மருந்து, மாத்திரைகள் தரமற்றது என மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 1,000க்கும் அதிகமான மாத்திரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இமாச்சல், உத்தராகண்டில் தயாரிக்கப்பட்ட பெரும்பாலான மாத்திரைகள் போலியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அந்த போலி மருந்துகளை <
CT தொடரின் 1st Semi-Final-லில் இந்தியா த்ரில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸி., அணி 264 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா இலக்கை எட்டி வெற்றி பெற்று, 2023 WC ஃபைனலின் தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது. இந்திய அணியில் அட்டகாசமாக விளையாடிய கிங் கோலி 84 ரன்கள் விளாசி அசத்தினார்.
தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகை நயன்தாரா வேண்டுகோள் விடுத்துள்ளார். என் பெயர்தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று, அது என்னை மட்டுமே குறிக்கிறது. பட்டங்கள், விருதுகள் மதிப்புமிக்கவை, சில நேரங்களில் அவை தொடர்பில் இருந்து பிரிக்கக்கூடும். எனவே, நயன் என பெயரை மட்டும் குறித்து அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே சிறுபான்மை மக்களின் சொந்த வீடு போல் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். இஸ்லாமிய மக்களுக்கு இன்னல்கள் வரும்போதெல்லாம் முதலில் துணையாக நிற்பது திமுகதான் எனக் கூறிய அவர், ரமலானுக்கு வாழ்த்து சொல்வதை பார்த்தால் பலருக்கு கோபம் வரும். அப்படி வந்தாலும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்போம் எனத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் மிகப் பிரபலமான நாட்டுப்புற பாடகி டாலி பார்ட்டன். தன் கணவர் கார்ல் டீன் காலமானதாக அறிவித்துள்ள டாலி, ‘நானும் கார்லும் ஒன்றாக வாழ்ந்த ஆண்டுகள் அற்புதமானவை. 60 ஆண்டுகள் நாங்கள் பகிர்ந்துகொண்ட அன்பை சொல்ல வார்த்தைகள் போதாது’ என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். கார்லின் மறைவுக்கு உலகம் முழுவதும் திரை, கலையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சாம்பியன்ஸ் டிராபி செமி பைனலில் இந்திய அணி வெற்றியை நெருங்கி வருகிறது. ஆஸி., நிர்ணயித்த 265 ரன்கள் இலக்கை விரட்டும் இந்திய அணி, 40 ஓவர்கள் முடிவில் 200/4 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 80 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்த முறையும் சேஸிங் கிங் கோலி நாட்டுக்கு வெற்றியை தேடித் தருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பிரபல பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் வசித்து வந்த கல்பனா இன்று இரவு திடீரென தற்கொலைக்கு முயன்றார். தற்போது அவர் ஹாஸ்பிட்டலில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்பது தெரியவில்லை. ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் வரும் ‘போடா போடா புண்ணாக்கு’ பாடலை சிறு வயதில் பாடியவர் இவர்தான்.
PM மோடிக்கு, CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில், மன்னார் வளைகுடா பகுதியில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் கடல்சார் ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைக்கும் முயற்சியை கைவிட்டு, ஏல அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைத்தால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் சேதம் ஏற்படும் எனவும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
எந்த ஜாதியும் கோயில்களுக்கு உரிமை கோர முடியாது என சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. ஜாதி அடிப்படையில் கோயிலை நிர்வகிப்பது என்பது மத நடைமுறை அல்ல எனக் குறிப்பிட்ட கோர்ட், பெரும்பாலான பொதுக் கோயில்கள், சில ஜாதியினரின் கோயில்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. மேலும், ஜாதி பாகுபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள்தான் மதப் பிரிவு என்ற போர்வையில் வெறுப்பை உமிழ்வதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழில் வாகா படத்தில் நடித்த பிரபல நடிகை ரன்யா ராவ் (32) அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்தபோது, பெங்களூரு விமான நிலையத்தில் அவர் பிடிபட்டுள்ளார். அதிக நகைகளை அணிந்திருந்த அவரிடம் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து அவரின் உடமைகளை சோதனை செய்ததில் தங்கக் கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.