News March 5, 2025

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் பலி

image

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ராணுவ கண்டோன்ட்மென்ட் மீது வெடிகுண்டு நிரப்பிய 2 கார்களில் வந்த தீவிரவாதிகள் இன்று மோதினர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் கண்டோன்ட்மென்ட் சுற்றுச்சுவர் நொறுங்கியதுடன் அருகில் இருந்த 9 பேர் பலியாகினர். இதையடுத்து, மறைந்திருந்த தீவிரவாதிகள், கண்டோன்ட்மெண்ட் மீது துப்பாக்கிச் சூடு நடத்த, ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

News March 5, 2025

குண்டாகும் தமிழ்ப் பெண்கள்… அதிர்ச்சி ரிப்போர்ட்

image

நாட்டிலேயே தமிழ்நாடு, டெல்லி, மற்றும் ஆந்திர மாநிலப் பெண்கள் தான் அதிக உடல்பருமன் கொண்டவர்களாக இருப்பதாக 2024-ம் ஆண்டு தேசிய குடும்ப நல சர்வேயில் (NFHS) தெரியவந்துள்ளது. டெல்லியில் 41.3% பெண்கள் (ஆண்கள் 38%), தமிழகத்தில் 40.4% பெண்கள் (ஆண்கள் 37%), ஆந்திராவில் 36.3 (ஆண்கள் 31.1%) உடல்பருமன் கொண்டவர்களாக உள்ளனர். உடல்பருமனே பல்வேறு நோய்களுக்கு காரணமாகிறது. இதை ஒரு மருத்துவ அவசரமாக கருதுமா அரசு?

News March 5, 2025

ராசி பலன்கள் (5-03-2025)

image

➤மேஷம் – உயர்வு ➤ரிஷபம் – நட்பு ➤மிதுனம் – வெற்றி ➤கடகம் – பயம் ➤ சிம்மம் – பகை ➤கன்னி – அமைதி ➤துலாம் – தெளிவு ➤விருச்சிகம் – ஆதரவு ➤தனுசு – உறுதி ➤மகரம் – பெருமை ➤கும்பம் – சாந்தம் ➤மீனம் – ஓய்வு.

News March 5, 2025

தலையணையின் கீழ் இந்த 5 பொருட்களை வைத்தால்..

image

தூங்கும் போது தலையணையின் கீழ் இந்த 5 பொருட்களை வைத்திருந்தால் அதிர்ஷ்டமும், பாசிட்டிவ் எனர்ஜியும் தேடி வரும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. 1) இரும்பு: பயத்தையும், கெட்ட கனவுகளையும் நெருங்க விடாது. 2) பூண்டு: நேர்மறை சிந்தனைகளை கொடுக்கும். 3) சதகுப்பி விதைகள்: ராகு தோஷத்தை போக்கும். 4) பச்சை ஏலக்காய்: ஆழ்ந்த உறக்கத்தை தரும். 5) கல் உப்புடன் ஒரு ரூபாய் நாணயம்: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

News March 5, 2025

இந்த தகுதி இருந்தால் தான் அரசு ஓட்டுநர் பணி

image

ஓட்டுநர் பயிற்றுவிப்பாளர் & பரிசோதகர் (DICI) பணியிடங்களை அமல்படுத்தும் வகையில், அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணியாளர் நியமன விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10th முடித்திருக்க வேண்டும் என்ற விதிகளில் திருத்தம் செய்து கனரக ஓட்டுநர் உரிமம், நடத்துநர் உரிமம் மற்றும் முதலுதவி பயிற்சி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 4, 2025

மாத ஊதியம் ரூ.17,700 முதல் ரூ.56,200 வரை

image

அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு குறைந்தபட்ச வயது 24ஆகவும், அதிகபட்ச வயது 40ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு அடிப்படையில் வயது தளர்வு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் தகுதியை பொறுத்தவரை 160 செ.மீ. உயரத்துடன் 50 கிலோ எடையுடன் இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.17,700 முதல் ரூ.56,200 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 4, 2025

அதிர்ந்தது பிஹார் சட்டமன்றம்- தலைவர்கள் வார்த்தை போர்!

image

பிஹார் சட்டமன்றத்தில் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் மோதல் முற்றியதால், முதல்வர் நிதிஷ் குமாருக்கு எதிரான வார்த்தைகளை உங்கள் தந்தை பயன்படுத்தியதாக தேஜஸ்வி கூறினார். இதற்கு பதிலளித்த சாம்ராட், உங்கள் தந்தை லாலு இந்த மாநிலத்தை கொள்ளையடித்தார் என சாடினார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

News March 4, 2025

இத்தனை கொடூர மனிதர்களா? மோடி ஆவேசம்

image

குஜராத்தின் கிர் வனவிலங்கு சரணாலயத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள PM மோடி, இன்று வந்தாராவில் உள்ள விலங்குகள் ஹாஸ்பிட்டலுக்கு சென்றார். அப்போது அங்கு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட மற்றும் பாகன்களால் சித்ரவதைக்கு உள்ளான யானைகளை அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் வெளியிட்ட பதிவில், மனிதர்களால் எப்படி இவ்வளவு கொடூரமாக நடக்க முடிகிறது? இதற்கு நாம் ஒரு முடிவுகட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

News March 4, 2025

ஊழியர்களுக்கு சம்பளத்துடன் மதுபானம் தரும் நிறுவனம்

image

அமெரிக்காவை சேர்ந்த பிரபல மதுபான தயாரிப்பு நிறுவனம், ஜாக் டானியல்ஸ். இது மாதா மாதம் முதல் வெள்ளிக் கிழமைகளில் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் ஒரு Daniel’s Old No. 7 விஸ்கி பாட்டிலையும் ப்ரீயாக தருகிறது. டென்னஸி மாகாணத்தில் இந்நிறுவனம் அமைந்துள்ள மூர் கவுன்ட்டியில், மது விற்பனைக்கு தடை உள்ளது. ஆகவே, ஊழியர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் உதவ கொண்டுவந்த இப்பழக்கம், பல ஆண்டுகள் கடந்தும் தொடர்கிறது.

News March 4, 2025

221 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை SHOCKING

image

ஆப்பிரிக்க நாடான சூடானில், கடந்த ஓராண்டில் மட்டும் 221 குழந்தைகள் படையினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. அங்கு ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே போர் நடந்துவருகிறது. இதில் இதுவரை 20,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் 1.4 கோடி மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகளில் 30% ஆண் குழந்தைகளாவர். போர் என்றால் மனிதமும் மறைந்துவிடுமா?

error: Content is protected !!