News March 4, 2025

INDIA பேரை கேட்டாலே ஹெட் அடித்து நொறுக்குவார்: ஸ்மித்

image

இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் டிராவிஸ் ஹெட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் தெரிவித்துள்ளார். வறண்ட ஆடுகளத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆடுவது சவாலாக இருக்கும் என்றாலும், IND ஸ்பின்னர்களின் பந்துவீச்சை அடித்து நொறுக்க காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவை வீழ்த்த தங்களிடம் திட்டம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

News March 4, 2025

தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 5 நாள்களுக்கு பிறகு மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று (மார்ச் 4) 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹8,010க்கு விற்பனையாகிறது. சவரன் ₹560 உயர்ந்து ₹64,080க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் உயர்வை கண்டுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹107க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,07,000க்கும் விற்பனையாகிறது.

News March 4, 2025

கர்ப்பிணிகள் பாராசிட்டமல் எடுக்கிறீங்களா?

image

கர்ப்பிணிகள் பாராசிட்டமால் எடுத்துக்கொள்வது குழந்தைகளுக்கு ADHD குறைபாட்டை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக USA யூனிவர்சிட்டி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 307 பெண்களிடம் நடத்திய ஆய்வில், பாராசிட்டமால் சிசுவின் மூளை வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், கவனக்குறைவு, அதீத செயல்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும், குறைவாக பயன்படுத்துவது, ஆபத்தை குறைக்கும் என கூறுகின்றனர்.

News March 4, 2025

Whatsappல் வந்த கிஸ் Emoji… மனைவியை கொன்ற கணவன்!

image

கேரளாவில் பைஜூ(28) வைஷ்ணவி(27) தம்பதியின் எதிர்வீட்டில் வசித்து வந்தவர் விஷ்ணு(30). வைஷ்ணவியின் Whatsappக்கு விஷ்ணுவிடமிருந்து கிஸ் எமோஜி வந்துள்ளது. இதனால், கோபமடைந்த பைஜூ இது குறித்து கேட்க, பயத்தில் வைஷ்ணவி விஷ்ணு வீட்டுக்கு ஓடியுள்ளார். ஆத்திரமடைந்த, பைஜூ கத்தியால் வைஷ்ணவியை குத்திவிட்டு, விஷ்ணுவையும் கொலை செய்துள்ளார். இருவரும் உயிரிழந்து விட, பைஜூ கைது செய்யப்பட்டுள்ளார்.

News March 4, 2025

தமிழிசைக்கு பதிலடி கொடுத்த CM ஸ்டாலின்

image

பிறந்தநாளுக்கு மும்மொழிகளில் வாழ்த்து தெரிவித்த தமிழிசைக்கு, தனக்கு தெலுங்கு தெரியாது எனக் கூறி CM ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். தெலங்கானா ஆளுநராக பணியாற்றிய அனுபவத்தில் தெலுங்கு மொழியை தமிழிசை அறிந்திருப்பதாக கூறிய அவர், இதிலிருந்தே 3ஆவதாக ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டிய அவசியமில்லை, தேவைப்பட்டால் அதனை புரிந்துகொண்டு பயன்படுத்தலாம் என்பதை அவர் உறுதிப்படுத்தி உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

News March 4, 2025

பிரபல கிரிக்கெட் வீரர் பத்மகர் ஷிவல்கர் காலமானார்

image

மும்பை அணியின் Ex கிரிக்கெட் வீரர் பத்மகர் ஷிவல்கர் (84) உடல்நலக்குறைவால் காலமானார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர், 20 ஆண்டுகள் மும்பை அணிக்காக விளையாடியவர். குறிப்பாக 1972இல் தமிழ்நாட்டுக்கு எதிரான ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணி பட்டம் வெல்ல உதவியவர். மும்பை கிரிக்கெட் ஒரு உண்மையான ஜாம்பவானை இழந்துவிட்டது என MCC தலைவர் அஜிங்க்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.

News March 4, 2025

கிட்னியில் கல் எப்படி உருவாகிறது தெரியுமா?

image

சிறுநீரில் உள்ள சில ரசாயனங்கள் வெளியே செல்வதற்குப் பதிலாக உடலில் தங்கி, அவை படிமங்களாக மாறி பின்னர் கற்களாக மாறுகின்றன. மேலும், அசைவம் அதிகமாக சாப்பிட்டு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற காரணத்தினாலும் கல் உண்டாகலாம். அத்துடன் தூக்கமின்மை, லேட்டாக சாப்பிடுவது, வைட்டமின் B6, C, D குறைபாடுகளுடன் உடல் பருமன் இருப்பவர்களுக்கும் கிட்னியில் கல் ஏற்படுகிறது. அதிகமாக தண்ணீர் குடியுங்கள்!

News March 4, 2025

இந்திய சில்லரை வணிக சந்தை மதிப்பு உயர்வு

image

கடந்த 2014ல் ₹35 லட்சம் கோடியாக இருந்த இந்திய சில்லரை வணிக சந்தை மதிப்பு, 2024 இறுதியில் ₹82 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அந்த காலக்கட்டத்தில், ஆண்டுக்கு 8.90% சராசரி வளர்ச்சி பெற்றிருப்பதாகவும் சில்லரை வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது, வருங்காலங்களில் மேலும் வேகமாக உயரும் என்றும், 2034ம் ஆண்டுக்குள் இந்திய சில்லரை வணிக சந்தை மதிப்பு ₹1.90 லட்சம் கோடியை எட்டும் எனவும் கணித்துள்ளது.

News March 4, 2025

பஸ் மீது லாரி மோதியதில் 31 பேர் பலி

image

பொலிவியா நாட்டின் லா பாஸ் அருகே, பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 31 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி மோதிய வேகத்தில், சுமார் 500 மீட்டர் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இதில், படுகாயமடைந்த 22 பேர் ஹாஸ்பிட்டலில் உள்ளனர். இந்த கோர விபத்திற்கு காரணமான லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பொலிவியாவின் சுக்ரேவில் இரு பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் 37 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

News March 4, 2025

விஜய்யை விமர்சிக்க திமுகவில் திடீர் தடை: இதுவா காரணம்?

image

சட்டசபைத் தேர்தலுக்கான பணிகளை DMK தற்போதே தொடங்கிவிட்டது. அந்தவகையில், அண்மையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், விஜய்யைப் பற்றி யாரும் விமர்சனம் செய்ய வேண்டாமென அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விசாரித்தபோது, அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்து அரசியலில் முக்கியத்துவம் பெற வைத்தது போன்ற நிலையை, விஜய்க்கும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக DMK வட்டாரங்கள் கூறுகின்றன.

error: Content is protected !!